Wednesday, November 21, 2007

முருங்கைக் கீரை

மொரிங்கா! நம்மூரில் முர்ர்-ரேங்க்கா என்று கடைத் தெருவில் கூவி விற்கப்படும் முருங்கை மரத்க் கீரயின் அறிவியல் பெயர் இது. ஆண்ம விருத்திக்கான கீர என்றே ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டுள்ள இந்தக் கீரயில், அதற்கும் மேலே நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ரத்தசோக உள்ளவர்கள் கலர் கலராக விழுங்கிக்கொண்டு இருக்கும் எல்லா மாத்திரகளயும் ஓரங்கட்டும் அளவுக்குச் சக்தி வாய்ந்தது முருங்கைக் கீரை. முருங்கை, முந்நூறு வகையான நோய்களக் குணப்படுத்தும் தன்மை உடயது என்று சான்றிதழ் தருகிறது இயற்ககை மருத்துவம். நவீன மருத்துவமும் இத ஒப்புக்கொள்கிற. நம் உடலுக்கு இது ஒரு பவர் ஹவுஸ் என்றே குறிப்பிடுகிறார்கள்.

ஆரஞ்சுப் பழத்தில் உள்ள போல ஏழு மடங்கு வட்டமின் சி, பாலில் உள்ள போல நாலு மடங்கு கால்ஷியம், இரண்டு மடங்கு புரோட்டீன், கேரட்டில் உள்ள போல நாலு மடங்கு வட்டமின் ஏ, வாழைப்பழத்தில் உள்ள போல மூணு மடங்கு பொட்டாஷியம் சத்துக்கள் முருங்கயில் அடங்கியுள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் எல்லாம் சீரான இயக்கத்தைப் பெறும். கண் பார்வை சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். தலைமுடி கொட்டுவது நிற்கும். இரும்புச் சத்துக் குறைபாடுகளினால் உண்டாகும் நோய்களுக்கு நல்ல மருந்தாகும். இதைச் சமைக்கும் போது பழுப்பு நிற இலைகளக் கவனமாக நீக்கிவிட வேண்டும்.

No comments: