Tuesday, December 2, 2008

கொள்ளையடித்தது நிதிமூலதன கும்பல்கள்! பரிதவிப்பது தொழிலாளர்கள்!

“பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு” என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் ‘மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்’ என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது - புதிய கலாச்சாரம் – அக். 08.
அமெரிக்காவில் 20 வங்கிகள் ஏற்கனவே மஞ்சள் கடிதாசி கொடுத்து திவலாகிவிட்டன. திவாலாவது அமெரிக்காவில் இப்பொழுது தொடர்கதையாகி வருகிறது. நேற்று புதிதாக கலிபோர்னியாவைச் சேர்ந்த “டவ்னி சேவிங்ஸ் அண்டு லோன் அசோசியேசன்” மற்றும் “பி.எப்.எப். பேங்க் அன்ட் டிரஸ்ட்” இரண்டு வங்கிகள் மஞ்சள் கடிதாசி கொடுத்துவிட்டன. இவைகள் இரண்டும் வீட்டுவசதி மற்றும் நுகர்வு கடன்கள் வழங்கி வந்தவை.

உலகின் முன்னணி ஆட்டோ மொபைல் நிறுவனமான“ஜெனரல் மோட்டார்ஸ்” நிறுவனம் திவால் அறிவிப்பை தீவிரமாக பரிசீலித்து வருகிறார்களாம். இந்த திவால் அறிவிப்பைத் தவிர்க்க அந்த நிறுவனத்தின் இரண்டு பிரதிநிதிகள் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியைப் சந்தித்து 25 பில்லியன் டாலர்கள் (மக்களின் வரிப்பணத்தை) கேட்டிருக்கிறார்களாம்.

அமெரிக்காவின் “சிட்டி வங்கி” யின் பங்குகள் ஒரே நிதியாண்டில் 83% வீழ்ச்சியாகி, அதள பாதாளத்தில் கிடக்கிறது. ஏற்கனவே, உலகம் முழுவதும் 23000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துவிட்டது. இந்தியாவில் 37 முக்கிய உயர்நிலை அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. மேலும், 52000 ஊழியர்களை நீக்க அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே திவாலை தவிர்க்க இந்த வங்கி அமெரிக்க அரசிடம் 25 பில்லியன் டாலர்களை வாங்கி ஏப்பம் விட்டுவிட்டது முக்கிய செய்தி.

இப்படி நாளொரு வங்கி திவாலாவது நடந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய நெருக்கடிக்கு காரணம் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத மிகை (அராஜக) உற்பத்தியும், அதன் விளைவாய் எழுந்த நிதி மூலதனத்தின் தோற்றமும், நிதி மூலதனத்தைக் கொண்டு ஊக வாணிகத்தில் நிதி மூலதன கும்பல்கள் சூதாடி, ஊதிப் பெருக்கியதுதான் காரணம்.

கொள்ளையடித்தது நிதி மூலதன கும்பல்கள், ஏகாதிபத்திய வல்லரசுகள், மிகப்பெரிய வங்கிகள். ஆனால், இன்றைக்கு உலகம் முழுவதும் பாதிக்கப்படுவது பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தான். அமெரிக்காவில் ஏப்ரலில் வந்த தகவல்படி, மார்ச் மாதம் மட்டும் 80 ஆயிரம் தொழிலாளர்களும், ஜனவரி முதல் மார்ச் வரை 2.5 லட்சம் பேர் வேலையிலிருந்து துரத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்கு காய்ச்சல் என்றால், நாமும் இங்கு மருந்து சாப்பிடுகிறோம். ஆம். தகவல் தொழில்நுட்பம், உருக்கு, நிதி சேவைகள், ரியல் எஸ்டேட், சிமெண்ட், கட்டுமானம் துறைகளில் 30% வேலை இழப்பார்கள் என அசோசியேட் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்டு இன்டஸ்டிரீஸ் (அசோசெம்) கணித்துள்ளது.

வருகிற தகவல்கள் இந்த கணிப்பை உறுதிப்படுத்துகின்றன.

“டாடா மோட்டார்ஸ்” நிறுவனம் தனது வாகன உற்பத்தி பிரிவை 25.11.2008 லிருந்து 5 நாட்கள் மூடுகிறது. இது இந்த மாதத்தில் இரண்டாவது முறை. 3000 தற்காலிக ஊழியர்களை நீக்கிவிட்டது. 3 ஷிப்டிலிருந்து 1 ஷிப்டாக குறைத்துவிட்டது.

அசோக் லேலண்ட் நிறுவனம் வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே உற்பத்தியில் ஈடுபடுகிறதாம். ஷிப்டுகளை குறைத்துவிட்டதாம். இதனால், இதனை நம்பியிருக்கும் பல சிறு நிறுவனங்கள் இயங்க முடியாமல் மூடிவிட்டன.

கார் விற்பனை சரிந்ததால், டன்லப் டயர் நிறுவனம் தனது உற்பத்தியை காலவரையின்றி நிறுத்திவிட்டது. சென்னையில் 1000 ஊழியர்களையும், கொல்கத்தாவில் 1171 ஊழியர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டது. மாதந்திர உதவித் தொகை ரூ. 1500 ரூபாயாம். இருக்கும் வீட்டிற்கு வாடகை கூட கொடுக்கமுடியாது.

அமெரிக்காவை காப்பியடித்து இந்தியாவிலும் செயற்கையாக காலியிடம் மற்றும் வீட்டின் விலையை செயற்கையாக ஏற்றிவிட்ட கொள்ளையடித்த ரியல் எஸ்டேட் பிசினெஸ் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

டி.எல்.எப்., யுனிடெக், பர்ஸ்வந்த், ஓமெக்ஸ் உட்பட்ட 4000 கட்டுமான நிறுவங்களின் கூட்டமைப்பு 15% குறைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கின்றன. இப்பொழுது பரிசு – கார், லேப்டாப், பிளாஸ்மா டிவி, படுக்கையறை இலவசம் என அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். கூவி கூவி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். வாங்கத்தான் ஆளில்லை. இப்படி கட்டுமான தொழிலும் படுத்துவிட்டது.

இந்தியாவில் இப்படி கடந்த சில மாதங்களில் மட்டும் கோடிக்கணக்கானோர் வேலை இழந்திருக்கிறார்கள்.

இலாபம் கொழித்த பொழுதெல்லாம் அள்ளிய முதலாளிகள் இப்பொழுது நெருக்கடி என்றதும் வேறு எதிலும் கை வைக்க முடியாத இவர்கள் தொழிலாளர்களின் தலையில் கை வைக்கிறார்கள். சம்பளத்தை பாதியாக குறைக்கிறார்கள். சிக்கன நடவடிக்கை (Cost Cutting) என்ற பெயரில் தொழிலாளர்களை வேலையிலிருந்து துரத்துகிறார்கள்.

நிலைமை இவ்வாறு இருக்க, இந்தியாவில் 30% பேர் வேலை இழப்பார்கள் என்று தனது கணிப்பைச் சொன்ன அசோசெம்-ஐ மத்திய அரசு (8,நவம். 2008) கண்டித்து இருக்கிறது. பொருளாதார மந்தத்தால் இனி வருங்காலத்தில் உருவாகப் போகும் வேலை வாய்ப்பு தான் குறையுமே ஒழிய இப்பொழுது வேலை வாய்ப்பு எப்படி குறையும் என சிதம்பரம் வேலை இழந்த தொழிலாளர்களைப் பார்த்து சிதம்பரம் (1,நவம்.2008) எதிர் கேள்வி கேட்கிறார்.

மூலதனத்தின் மீதும், பொருட்கள் மீதும் அரசாங்கக் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள் நீக்கப்பட்டு, எல்லா துறைகளிலும் அன்னிய மூலதனத்திற்குத் தாராளமாக திறந்து விடப்பட்டது தான் இத்தனை நெருக்கடிக்கும் காரணம்.

இவ்வளவு நடந்த பிறகும், தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளிலிருந்து பின்வாங்க மாட்டோம் என உறுதியாக சோனியா அறிவித்துள்ளார்.

பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு இனி போராட்டம் இல்லாமல் வாழ்க்கையில்லை!

Thanks: http://socratesjr2007.blogspot.com/

Wednesday, November 26, 2008

இறகை இழந்ததா OR வாழ்க்கையையே இழந்ததா?

ஒரு ஈயிடம் அதன் தாய் இறக்கும் முன் அறிவுரை கூறியது. "மகனே, எப்போதுமே பளபளப்பான ஒட்டிக் கொள்ளக் கூடிய காகிதங்களில் இருந்து விலகியே இரு. உன் தந்தை அதில் சிக்கி தான் இறந்து போனார்." அந்த ஈயும் தாயின் அறிவுரையைக் கேட்டு பளபளப்பான ஒட்டும் காகிதங்களில் இருந்து சில காலம் விலகியே இருந்தது.

ஆனால் பல இளைய ஈக்கள் அந்த ஒட்டும் காகிதங்கள் அருகில் அனாயாசமாக பறந்து செல்வதைக் கண்ட போது அதற்கு ஆச்சரியமாக இருந்தது. சில ஈக்கள் வேகமாகச் சென்று உட்கார்ந்ததுடன் பிரச்சினை ஏதும் இல்லாமல் திரும்ப வந்த போது அந்த ஈயிற்கு தாய் அனாவசியமாக பயப்பட்டதாகத் தோன்றியது.

அந்த பளபளத்த காகிதங்களின் அருகில் சென்ற போது ஈக்களின் பிரதிபலிப்பு பார்த்த போது அது பார்வைக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது. அந்த ஈ துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெள்ள அந்தக் காகிதத்தின் அருகே சென்று சென்று வந்தது. பிரச்சினை எதுவுமில்லை. சிறிது நேரத்தில் அதற்கு தைரியம் கூடியது. மின்னல் வேகத்தில் சென்று அந்தக் காகிதத்தில் அமர்ந்து பார்த்து நொடியில் மின்னல் வேகத்திலேயே கிளம்பியது. பிரச்சினை இல்லை.

அந்தக் காகிதத்தில் அப்படியே ஈக்கள் உட்கார்ந்து அனாயாசமாக போவதைப் பார்த்த அந்த ஈயிற்குத் தன் அனுபவமும் சேர்த்து யோசிக்கையில் இதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றவில்லை. பகட்டும் பளபளப்பும் நிறைந்த அந்தக் காகிதத்தில் அமர்ந்து விளையாடுவது ஜாலியாக இருந்தது. போய் சற்று அதிக நேரம் தங்கி வர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மிக களைப்படைந்து விட்ட ஈ அப்படியே உறங்கி விட்டது. அது விழித்த பிறகு பறக்க நினைத்த போது ஒரு இறகு அந்த காகிதத்தில் நன்றாகவே ஒட்டிப் போயிருந்தது. அதனால் பறக்க முடியவில்லை. அந்தக் காகிதத்தில் இருந்து அந்த ஈ தப்பிக்க முடிந்தாலும் கூட அந்த ஒட்டி போன இறகை இழந்தேயாக வேண்டும்.

அது இறகை இழந்ததா, இல்லை வாழ்க்கையையே இழந்ததா என்று நாம் ஆராயப் போவதில்லை. இந்த உதாரணத்தைத் தன் நூல் ஒன்றில் சொன்ன ரால்ப் வாலெட்டும் அது பற்றிக் கூறவில்லை.

நாம் ஆராயப் போவதெல்லாம் அந்த ஈக்கு அந்தக் காகிதத்தின் மீது சென்று அமரும் அவசியம் இருந்ததா என்பதை மட்டும் தான். அந்த அவசியம் இருக்கவில்லை என்பதே உண்மை. அது ஆபத்தானது என்பதையும் அது தந்தையின் உயிரையே குடித்தது என்பதையும் ஈ முன்பே அறிந்திருந்தது. ஆனால் அந்தக் காகிதத்தின் பளபளப்பு, போய் ஓரிரு தடவை ஒன்றும் ஆகவில்லை என்கிற தைரியம், மற்றவர்களும் செய்கிறார்கள் என்ற சமாதானம், ஜாலியாக இருக்கிறது என்கிற எண்ணம் எல்லாமாக சேர்ந்து அதன் அறிவை மழுங்கடித்து ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறது.

தீ தான் சார்ந்திருக்கும் பொருளை எல்லாம் சாம்பலாக்கும் வல்லமை படைத்தது. அந்தத் தீயை விட ஆபத்தான தீயவை இருக்கின்றன.

உலகில் அந்த பளபளப்பான ஒட்டிக் கொள்ளும் காகிதத்தைப் போன்ற தீய விஷயங்கள் பல இருக்கின்றன. சூதாட்டம், போதைப் பழக்கம், தகாத உறவு வைத்துக் கொள்ளல் , தொலைக் காட்சிபோன்ற, வலைகள் எத்தனையோ இருக்கின்றன. ஆரம்பத்தில் அது போன்ற வலையால் பெரிய தீங்கு ஏற்படாத நிலைமை கூட இருக்கலாம். ஆனால் அதை வைத்து ஆபத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள். அதில் தங்க ஆரம்பிக்கும் போது உங்களை உடும்புப்பிடியுடன் அந்த வலை உங்களை இழுத்துப் பிடித்துக் கொள்ளும். பெரும் சேதத்தையோ, நாசத்தையோ ஏற்படுத்தாமல் அந்த விஷ வலை உங்களை தப்பிக்க விடாது.

வாழ்க்கையில் பல விஷயங்கள் இல்லாமல் நாம் சந்தோஷமாக வாழ முடியும். ஆனால் நாம் அப்படி நினைக்கத் தவறுவது தான் பல வருத்தங்களுக்கு மூல காரணமாக உள்ளது. அந்த ஈயின் இயல்பான வாழ்க்கைக்கு எப்படி அந்த பளபளப்புக் காகிதம் எந்த விதத்திலும் தேவையாக இருக்கவில்லையோ, அப்படியே நாம் மகிழ்ச்சியாக நிறைவான வாழ்க்கை வாழ முன்பு குறிப்பிட்டது போன்ற தீய வலைகள் தேவையில்லை. இப்படி ஏதாவது ஒரு வலை உங்கள் வாழ்க்கையில் கவர்ச்சியை ஏற்படுத்துமானால் இந்த ஈ கதையை நினைவுபடுத்திக் கொண்டு புத்திசாலித்தனமாக விலகிச் செல்லுங்கள்.
Thanks : Anwarali
Anwar.Ali@Saudireadymix.com.sa

Monday, November 24, 2008

ஊடகங்கள், முஸ்லிம்கள் மற்றும் முஜாஹிதீன்!




இது குண்டு வெடிப்புகள் தொடர்பாக இந்துத்துவ பயங்கரவாத சாமியாரிணி கும்பல் கைது செய்யப்படுவதற்கு முன் வெளியான கட்டுரை!

டெல்லி காவல்துறை குண்டுகள் வெடிக்கும் 'மர்மத்தை கண்டு பிடித்து' விட்டதால் நான் எனது சுய வாக்குமூலத்தை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். சந்தேகப்படுவது இந்திய அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமை அல்ல என்றாலும் செழிப்பான ஜனநாயக அமைப்பிலிருந்து பிரிக்க முடியானதொரு அங்கம் அது. நமது உளவுத்துறை அமைப்புகளின் அஸ்திவாரம் சந்தேகப் படுவதில்தான் இருக்கிறது எனலாம். எனவே, யார் மேல் வேண்டுமானாலும் சந்தேகப்படும் உரிமை நிச்சயமாக நம் உளவுத் துறையினருக்கு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதே சந்தேகப்படும் உரிமை சாதாரண இந்தியக் குடிமகனுக்கு இருப்பதையும் யாராலும் மறுக்கவியலாது. சமத்துவம் ஜனநாயகத்தின் அடையாளமல்லவா?


கேள்விகள் கேட்டு பதில் விளக்கங்கள் பெற வாய்ப்பில்லாத ஓர் அரசாங்க அறிக்கை வேதவாக்குப் போலக் கருதப்படும்போது என்னுள் இருக்கும் 'பத்திரிக்கையாளனுக்கு' எரிச்சல் ஏற்படுகிறது. தீர்மானமான முடிவுகளுக்கு வருவது ஊடகவியலாளர்களின் பணி அல்ல. ஒரு சமுதாய வட்டத்திற்குள் நிகழ்பனவற்றை அந்த வட்டத்திற்கு வெளியில் நின்று விருப்பு வெறுப்பின்றி ஊடகத்தில் பதிவுசெய்வதுதான் அவரது பணியாக இருக்க வேண்டும். ஒரு பத்திரிக்கையாளர் அந்த வட்டத்திற்குள் நுழைந்தால் அவரும் அந்த நிகழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விடுகிறார். ஒரு தரப்பினருடன் நெருக்கமாக இருப்பது சார்பு நிலையைத் தோற்றுவிக்கும். சார்பு நிலை மறுதரப்பினரின் நியாயங்களைப் பார்க்க முடியாத குருட்டுத் தன்மையை ஏற்படுத்தும். ஓர் உண்மையான பத்திரிக்கையாளர் இது போன்றதொரு கருத்துக் குருடராக இருக்கவே கூடாது.

மக்களிடையே பொதுவான அபிப்ராயங்களை உருவாக்குவதில் ஊடகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதானால், அவற்றிடையே 'கருத்துக் குருட்டுத் தன்மை' நிலவுவது பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்தியறிக்கையும் பொது மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு நாட்டின் அரசியலமைப்பில் 'நான்காம் தூண்' என்று கருதப்படும் ஊடகங்கள், ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பிறகும் 'நான்காம் தவறு' என்று சொல்லத்தக்க விதத்திலேயே செய்திகளை வெளியிடுகின்றன. குண்டு வெடித்தது மக்கா மசூதியாக இருந்தாலும், தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்கு வந்திருந்த முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்ட மாலேகானாக இருந்தாலும், சந்தேக முள் தானாகவே சாய்வது முஸ்லிம்கள் பக்கம் தான். ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்குப் பிறகும் அலைக்கழிக்கப்படுவதும் முஸ்லிம்கள்தான். ஒரு புறம் குண்டுகளை வெடிக்கச் செய்யும் பயங்கரவாதிகள், மற்றொரு புறம் உளவுத் துறை அமைப்புகள் என இருபுறமும் அடி வாங்கும் மத்தளத்தின் நிலையில் முஸ்லிம்கள். இந்த இரு தரப்பினருமே முஸ்லிம்களை நம்புவதில்லை என்பதுதான் பரிதாபம். அன்றாட வாழ்க்கைப் பாட்டை தீர்ப்பதற்கே போராடும் முஸ்லிம்களுக்கு குண்டுகளைப் பற்றி சிந்திப்பதற்குக்கூட நேரம் கிடையாது என்பது ஏனோ இவர்களுக்கு புரிவதேயில்லை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பும் இஸ்லாம் எனும் 'பச்சைக் கண்ணாடி' கொண்டே பார்க்கப் படுகிறது. ஆனால், 'இந்துத்துவ காவி' இந்தியாவை 'சிவப்பாக' மாற்றுவதில் சற்றும் சளைத்ததல்ல. குண்டுகள் வெடிப்பதற்கான காரணங்களுள் ஒன்று, இந்திய முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாப்பற்ற அச்ச உணர்விலேயே நிலைத்திருக்கச் செய்யவேண்டும் என்பதுதான். உண்மையான போர் துவங்குமுன் மனதளவில் எதிர்தரப்பினரை வலுவிழக்கச் செய்யும் உத்தி இது.

இந்திய முஸ்லிம்களில் ஒரு சின்னஞ்சிறு பிரிவினர் தீவிரவாதிகளாக்கப்பட்டது உண்மையாக இருக்கலாம். அதே போன்று இந்துக்களில் ஒரு சின்னஞ்சிறு பிரிவினர் அதிதீவிரவாதிகளாக இருப்பதும் உண்மையே! சிமி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவை தத்தம் சமுதாயங்களை பிரதிநிதிப்பதாக சொல்லிக் கொண்டாலும் அவை ஒன்றுக்கொன்று மாறுபட்ட அடையாளங்களை கொண்டவை. செயல்வடிவிலான அதிதீவிரவாதத்தை இவ்வாறு ஒரு வரியில் சுருக்கிச் சொல்லலாம்: "உனது தீவிரவாதத்தை விட எனது தீவிரவாதம் சிறந்தது!"

ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் ஆகியவை குண்டுவெடிப்புகளில் ஈடுபடும்போது இந்திய ஊடகங்கள் 'அடக்கி வாசிப்பதை'க் காண்கிறோம். அதே சமயத்தில் ஒரு வழக்கில் சிமி-யின் பெயர் அடிபட்டால் 'பத்திரிக்கைத் தர்மம்' உச்ச வேகத்தில் வெளிப்படுவதையும் காண்கிறோம். இந்த இரண்டு வித்தியாசமான அணுகுமுறைகளுக்கும் காரணம் வியாபாரம்தான். எந்தப் பத்திரிக்கை முதலாளியும் பெரும்பான்மையான இந்து வாசகர்களைப் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார். ஊடகங்கள் தங்களை தேசிய சிந்தனை கொண்டவர்களென உரிமை கொண்டாடினாலும், நடைமுறையில் அவை பெரும்பான்மையினரை திருப்திப் படுத்தும் நோக்கம் கொண்டவைதான்.

காவல்துறை 'குற்றம் சாட்டப்பட்ட' நபர்களின் பெயர்களை திடீர் திடீரெனெ மாற்றுவது, ஒரு பத்திரிக்கையாளனின் கண்ணோட்டத்தில் சந்தேகத்தை தோற்றுவிப்பதாக இருக்கிறது. ('குற்றம் சாட்டப்பட்டவர்' என்ற பெயர்ச்சொல் இந்திய ஊடகங்களில் மிக அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்படும் வார்த்தைகளுள் ஒன்று!). குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரி என முதலில் சொல்லப்பட்ட பெயர் அப்துல் சுப்ஹான் குரேஷி; அதுவே பிறகு போலி 'என்கவுண்டரில் கொல்லப்பட்ட' அதிப் என மாற்றப் பட்டது.

அஹமதாபாத் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியவர் என்று காவல்துறையினர் சொல்லும் முப்தி அபுல் பஷர்தான் டில்லி குண்டு வெடிப்புகளுக்கும் காரணகர்த்தா என்று சொல்லப்படுவதை ஒரு பத்திரிக்கையாளனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பஷர் உண்மையிலேயே டில்லி குண்டு வெடிப்புகளுடன் சம்பந்தப் பட்டிருந்தால் அது நிகழ்ந்திருக்கவே செய்யாது. ஏனெனில், அந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது பஷர் காவல்துறையின் பாதுகாப்பில்தான் இருந்தார். மதரஸாவில் மார்க்கக் கல்வி பயின்ற ஒரு ஏழையான பஷர் எப்படி அஹமதாபாத் குண்டுவெடிப்பை அவ்வளவு துல்லியமாக திட்டமிட்டு நடத்தியிருக்க முடியும்? இந்திய மதரஸாக்கள் எப்போதிலிருந்து இதுபோன்ற 'தொழில்நுட்ப வல்லுனர்'களை உற்பத்தி செய்யத் தொடங்கின? அவ்வாறு நடக்குமானால் அது இந்திய அரசிற்கு மிக மகிழ்வைத் தரும் ஒன்றாக இருக்கும். மதரஸாக்களை மேம்படுத்த வேண்டிய தேவை மத்திய மதரஸா வாரியத்திற்கு இனி இருக்காது.

'நன்கு படித்த முஸ்லிம்கள்தான் குண்டு வெடிப்புகளில் ஈடுபடுகிறார்கள்' எனக் காவல்துறையினர் சொன்னாலும், 'படித்தவர்கள்' என்று எவ்வகையிலும் சொல்ல முடியாதவர்களைத்தான் அவர்கள் கைது செய்கிறார்கள். முப்தி பஷர் இதற்கு சரியானதொரு உதாரணம்.

இந்திய ஊடகத்துறையில் ஒரு பகுதியினர் உளவுத்துறை அமைப்புகளின் கைப்பாவையாக செயல்படுகின்றனர். காவல்துறையினரின் அறிக்கைகளை புலனாய்வுக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிடுகின்றனர். தொலைக்காட்சி நிருபர் ஒருவர் உளவுத்துறைக் குறிப்பு போன்றதொரு தகவலை வெளியிட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'நாடெங்கிலும் குழப்பத்தை விளைவிக்க வேண்டும் என்பதற்காக 2001-ம் ஆண்டு சிமி அமைப்பு 200 இளைஞர்களை பணியிலமர்த்தியது' என்பதுதான் அந்த தகவல். இது உண்மையென்றால் நமது உளவுத்துறை அமைப்புகள் கடந்த 8 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தன?

முறையான விசாரணகள் நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை பதியப்படுமுன்னரே, காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் 'தீவிரவாதிகள்' என முத்திரை குத்தப்படுகின்றனர். சட்டமும் நீதிமன்றமும் அதன் பணியைத் தொடங்குமுன்னரே ஊடகங்கள் தீர்ப்பை வழங்கி விடுகின்றன. உதாரணமாக, "கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த என்கவுண்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்ட தீவிரவாதி சைஃப் ஒரு போலி வாக்காளர் அட்டை வைத்திருந்தான்" (டைம்ஸ் ஆஃப் இந்தியா, செப் 21, பக்கம் 1, டெல்லி பதிப்பு).

ஊடகங்களின் 'முன்முடிவுத் தீர்ப்பு'களுக்கு இது ஒரு சிறந்த உதாரணமல்லவா?

இந்த அநீதிகள் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்க, முஸ்லிம்களோ அச்சத்தால் சூழப்பட்டவர்களாகவே தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். "அரசு என்பது ஒருங்கமைக்கப்பட்ட வன்முறை" என்று சொன்னார் காந்திஜி. டெல்லி ஜாமியா நகரில் நிகழ்த்தப்பட்ட போலி என்கவுண்டர் சம்பவம், சில குழப்பமான கேள்விகளை எழுப்புகிறது. 'இந்த சம்பவமே சந்தேகத்திற்கிடமானது' என உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர். அவர்களின் சந்தேகத்திற்கு காரணம் இல்லாமலில்லை. உள்ளூர்வாசியான சகோதரி ஒருவர் சொன்னார், "எதிர் தரப்பினர் துப்பாக்கியால் சுட்டதை யாரும் பார்க்கவில்லை. காவல்துறையினர்தான் அப்படி சொல்லிக் கொள்கிறார்கள். எதிர்தரப்பினர் சுட்டதை யாராவது பார்த்ததாக எந்தப் பத்திரிக்கையிலாவது செய்தி வந்ததா?" அவர் மேலும் கேட்டார், "தீவிரவாதிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவ்வளவு காவலையும் மீறி எப்படி தப்பித்துச் சென்றார்கள்? அந்த வீட்டிலிருந்து வெளியேற ஒரே ஒரு வழிதானே இருந்தது? என்கவுண்டர் நடக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்பது காவல்துறையினருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால் அவர்கள் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாதது ஏன்?"

அவர் மேலும் சொன்னது ரத்தத்தை உறைய வைக்கும் அளவிற்கு பயங்கரமானதாக இருந்தது; "இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், அவர்கள் (காவல்துறையினர்) யாரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கொலை செய்யலாம். இன்று அந்த இளைஞர்களுக்கு நேர்ந்தது நாளை என் சகோதரனுக்கு நேரலாம். ஏதோ ஒரு உப்புப்பெறாத காரணத்திற்காக, தான் நிரபராதி என்று நிரூபிக்கக்கூட அவகாசம் தரப்படாமல் அவன் கொல்லப் படலாம். அவர்கள் உங்களைக் குற்றவாளி என்று சொன்னால் நீங்கள் குற்றவாளிதான். மறுபேச்சிற்கே இடமில்லை. இது என்னைக் கடும் கோபத்திற்குள்ளாக்குகிறது"

இந்திய முஸ்லிம்கள், அச்ச உணர்வு, பாதுகாப்பற்ற சூழ்நிலை, ஆட்சியாளர்களின் பாரபட்ச போக்கு ஆகியவற்றோடு தீவிரவாத முத்திரையையும் சுமந்தவர்களாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 'முஸ்லிம்கள்' என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சிறு கும்பல் அவர்களின் வாழ்க்கை மற்றும் மதநம்பிக்கைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. 'குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள்' என்று யாராவது சொல்லும்போது என்னுள் வெறுப்புணர்வுதான் ஏற்படுகிறது. 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அடையாளம் தெரியாத ஒரு அமைப்பு, இந்திய முஸ்லிம்களின் நலனைப் பாதுகாப்பதற்காக இதுபோன்ற ஒளிவுமறைவு 'ஜிஹாதை' நடத்துகிறதாம். ஓர் உண்மையான ஜிஹாத் போராட்டம் ஒளிவுமறைவாக நடக்கவே முடியாது. இஸ்லாமிய சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அநீதிக்கெதிரான ஜிஹாத் போராட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட முறையிலேயே வெளிப்படையாக நடத்தப்பட்டனவே தவிர, அவை அடையாளம் தெரியாத நபர்களால் ஒருபோதும் நடத்தப் பட்டிருக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் நம் நாட்டில், நாட்டைக் கொலைக்களமாக மாற்றத்துடிக்கும் ஒரு சிறு கொலைகாரக் கும்பலை காவல்துறையினரால் வளைத்துப் பிடிக்க முடியவில்லை என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. இந்திய உளவுத்துறையினரின் கைவசம் ஏராளமான தகவல் சாதனங்களும் துப்புகளும் இருந்தும், பயங்கரவாதச் செயல்களை முறியடிப்பதில் அவர்களின் செயல்பாடுகள் பூஜ்யமாகவே இருக்கின்றன.

இந்தியாவின் 16 கோடி சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இருக்கும் பிரச்னை ஒன்று; அச்சவுணர்வுதான் அது! அவர்களின் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்கவும் யாரும் தயாராக இல்லை. இந்தியாவில் பயங்கரவாதத்திற்கெதிரான போரில் முஸ்லிம்கள் நடுவில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னைக்கான தீர்வின் ஓர் அங்கமாக அவர்கள் இருக்க விரும்புகிறார்களேயல்லாது பிரச்னையின் ஒரு அங்கமாக அல்ல. இந்தியா அவர்களையும் ஒருங்கிணைத்து அரவணைத்துச் செல்ல வேண்டும்.

ஒரு முஸ்லிம் நண்பர் மூடி மறைக்காமல் சொன்னார், "கவி ரவீந்திரநாத் தாகூரின் 'மனம் அச்சமில்லாமல் இருக்கும்போது' எனும் கவிதை வரிகள் இப்போதெல்லாம் என் வீட்டுச்சுவரை அலங்கரிப்பதில்லை".


நன்றி: - முபஷ்ஷிர் முஷ்தாக்

தமிழில்: சகோ. ஸலாஹுத்தீன்.

Wednesday, November 19, 2008

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-1)

சத்தியமார்க்கம்.காம் தளத்தில், “இந்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ள கல்வி உதவித்தொகை” என்ற தலைப்பில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அரசு ஒதுக்கியுள்ள கல்வி உதவித்தொகையைக் குறித்தும் அதனை பெறும் முறையினை குறித்தும் ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் சுலைமான் என்பவர், “இந்தியா காஃபிர் நாடு என்றும், காஃபிர் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவை விட்டு நாடு துறந்து - ஹிஜ்ரத் செல்ல வேண்டும்; அப்படிச் செல்லாதவர்கள் நரகத்தில் ஒதுங்குவார்கள்” என்றும் இந்திய அரசின் அந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு எச்சரிக்கையை முஸ்லிம்களுக்கு வைத்திருந்தார். அது சரி யான கருத்து தானா என்பதைக் குறித்து இங்கு காண்போம். முதலில் அவர் கூறிய கருத்து கீழே:

//முஸ்லீமான பின்னால் குஃபார் நாட்டில் வாழ்பவன் என் உம்மாவை சேர்ந்தவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) தெரிவித்துள்ளார்கள். அல் வாலா அல் பாராவை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக்கூடாதா?’ என (மலக்குகள்) கேட்பார்கள். எனவே இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான் சென்றடையும் இடங்களி� ��் அது மிகக் கெட்டதாகும். (4:97) //- சுலைமான்.

முதலில் இந்தியா ஒரு காஃபிர் நாடு என்று சொல்வது வடிகட்டிய கயமைத்தனம் ஆகும். இந்தியா ஒரு மதசார்பற்ற, ஜனநாயக நாடு. இங்கே எல்லா மதத்தவர்களும் ஆட்சியில் பங்கு வகிக்கிறார்கள். அனைத்து மதத்தினருக்கும் வணக்க, வழிபாட்டுச் சுதந்திரம் இருக்கிறது. அவரவர்களுக்கென ஒவ்வொரு மதத்தினருக்கும் தனியாக வழிபாட்டுத்தலங்களும் உண்டு.

“இந்தியாவில் குடியுரிமை உள்ள எந்த ஓர் இந்தியனுக்கும் சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் வழங்க அரசு மறுக்கக்கூடாது. இந்தியக் குடிமக்கள் தாம் நேசிக்கும் மதத்தைப் பின்பற்றவும், தாம் சார்ந்திருக்கும் மதம் அல்லது கொள்கை பற்றி எண்ண, எழுத, பிறருக்குப் போதிக்கவும் உரிமை பெற்றவர்கள்” என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. ஒருவரி ன் மதக் கொள்கையில் இன்னொருவர் கண்டிப்பாகக் குறுக்கிட முடியாது. இவ்வளவு வெளிப்படையான மதச் சுதந்திரம் வழங்கும் இந்திய நாட்டை ஒரு காஃபிர் நாடாகச் சித்திரிக்க முயல்வது அறியாமை மட்டுமல்லாது அயோக்கியத் தனமும் ஆகும். எந்த மதத்தையும் சாராத இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, அதைக் காஃபிர் நாடு என்று சொல்வது கண்ட���க்கத்தக்கது.

இந்தியாவிலுள்ள இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் இது போன்று கூறுவதுண்டு. ஆனால் இந்தியநாடு எந்த மதத்தினரினது குடும்பச் சொத்து அல்ல. எந்த ஒரு மதத்தினரும் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது. முஸ்லிம்கள் என்ற பெயரில் முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆண்ட போதும் அது மதச்சார்பற்ற நாடாகவே இருந்தது. முஸ்லிம் நாடு என்று அறிவிக்கப்படவில்லை. அதன் பிறகு வெள்ளையர்கள் ஆண்ட போதும் மத� ��்சார்பற்ற நாடாகவே இருந்தது. கிறிஸ்தவ நாடாக அறிவிக்கப்படவில்லை. சுதந்திர இந்தியாவும் மதசார்பற்றத் தன்மையிலிருந்து விலகி மதம் சார்ந்த நாடாக ஆகி விடவில்லை! இந்தியா காஃபிர் நாடு என்று சிலர் சொல்லி வந்தாலும் அதில் எள் முனையளவும் உண்மை இல்லை!

அவ்வாறு கூறப் படுவதை இஸ்லாத்தின் எதிரிகள் சிலரின் வஞ்சகப் பேச்சு, சூழ்ச்சி என்று கொள்க.

இனி சுலைமான் எழுதியது…

இவர், இந்தியாவில் குடியிருக்கும் முஸ்லிம்கள் காஃபிர் நாட்டில் குடியிருக்கிறார்கள் என்பதாகத் தவறாக விளங்கிக் கொண்டு, “காஃபிர் நாட்டில் குடியிருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை” எனத் தனக்குத் தெரிந்த இஸ்லாத்தை, மற்ற முஸ்லிம்களுக்க� �� விளக்க வந்திருக்கிறார். - (இந்தியா காஃபிர் நாடல்ல. என்பதை மேலே விளக்கியுள்ளோம்.) - அதற்கான இஸ்லாத்தின் ஆதாரமாக திருமறைக்குர்ஆன் 004:097 வசனத்தையும், திர்மிதியில் இடம் பெற்ற ஒரு ஹதீஸையும் எடுத்தெழுதியிருக்கிறார். இருவேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக கூறப்பட்ட இந்த ஹதீஸ் மற்றும் குர்ஆன் வசனத்தை எடுத்து இஸ்லாம் � ��ூறவராத ஒரு கருத்தை நிலைந���ட்ட முயன்றுள்ளார். முதலில் திருமறைக்குர்ஆன் வசனத்தையும் அது எச்சூழலில் எதற்காக இறக்கப்பட்டது என்பதையும் பார்த்துவிட்டு பிறகு திர்மிதியில் இடம்பெறும் ஹதீஸைப் பார்ப்போம்.

தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். “நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்” என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வின் பூமி விசாலாமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக்கூடாதா?” என்று கேட்பார்கள். அவர்கள் தங்குமிடம் நரகம் அது � ��ெட்ட தங்குமிடம். (அல்குர்ஆன், 004:097)

இந்த வசனத்தைக்காட்டி இந்தியாவில் வாழ முடியாத முஸ்லிம்கள் அனைவரும் நாடு துறந்து - ஹிஜ்ரத் செல்ல வேண்டும் என முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேறச் சொல்கிறார் சுலைமான். அவர் வைத்த 004:097வது வசனத்தின் பின்னணி என்ன?

புகாரி, 4596 வது ஹதீஸ் இது பற்றி விவரிக்கிறது:

மதீனாவாசிகள் ஒரு படைப் பிரிவை அனுப்பிவிடவேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்தப் படைப் பிரிவில் என் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. அப்போதுதான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான இக்ரிமா(ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் இதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்கள் என்னை வன்மையாகத் தடுத்தார்கள். பிறகு தமக்கு இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) அறிவித்தத ாகக் கூறினார்கள்.

(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) முஸ்லிம்களில் சிலர் இணைவைப்பாளர்களுடன் இருந்தனர். அவர்கள் (பத்ருப்போரில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கெதிராக இணைவைப்பாளர்களின் கூட்டத்தை அதிகப்படுத்தி(க் காட்டக் காரணமாக இருந்த)னர். எனவே, (முஸ்லிம்களின் அணியிலிருந்து அவர்களை நோக்கி) எய்யப்படும் அம்பு செல்லும். அது அவர்களில் ஒருவரைத் தாக்கிக் கொன்றுவிடும், அல்லது அவர் (வாளால்) அடிபட்�� �ுக் கொல்லப்படுவார். (இது தொடர்பாகவே) அல்லாஹ் இவ்வசனத்தை (திருக்குர்ஆன் 04:97) அருளினான்: (மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாதவாறு இறை மறுப்பாளர்களின் ஊரில் இருந்துகொண்டு) தமக்குத்தாமே அநீதி இழைத்துக்கொண்டிருந்தவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது (அவர்களை நோக்கி ‘இந்த ஊரில்) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்?’ என வினவுவார்கள். அதற்கு அவர்கள், ‘பூமி�� �ில் நாங்கள் பலவீனர்களாய் இருந்தோம்’ என பதிலளிப்பார்கள். ‘அல்லாஹ்வின் பூமி விசாலமானதாய் இருக்கவில்லையா? அதில் நீங்கள் நாட்டைத் துறந்து (ஹிஜ்ரத்) சென்றிருக்க வேண்டாமா?’ என வானவர்கள் வினவுவார்கள். இவர்களின் இருப்பிடம் நரகம் தான். மேலும், அது மோசமான இருப்பிடமாகும்.

மேற்கண்ட ஹதீஸிலுள்ள முதல் பத்திக்கான விளக்கம்: நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) மக்காவில் ஆட்சிராக இருந்தபோது இது நடந்தது. அப்போது ஷாம் நாட்டினருக்கெதிரான போருக்காக வேண்டி மதீனாவிலிருந்து ஒரு படையை அனுப்பிவைக்க வேண்டுமென கலீஃபாவிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது (ஃபத்ஹுல் பாரி)

இரண்டாவது பத்திக்கான விளக்கம்: நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்துவிட்ட பிறகு மக்காவிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களில் சிலர் எதிரிகளுக்கு அஞ்சித் தங்களை இனம் காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பத்ருப் போர் வந்தது. மக்கா குறைஷியர் இந்த முஸ்லிம்களையும் கட்டாயப்படுத்தி பத்ருப் போருக்கு அழைத்துச் சென்று விட்டனர். பத� ��ரில் எதிரிகளின் எண்ணிக்கை கூடுதலாகவும், முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதைக் கண்ட இந்த முஸ்லிம்களின் உள்ளத்தில் சந்தேகம் எழ ஆரம்பித்தது. ‘குறைவான எண்ணிக்கையிலுள்ள முஸ்லிம் அணியினரை, அவர்களது மார்க்கப் பற்று ஏமாற்றிவிட்டது’ என்று இவர்கள் கூறினர்.

பின்னர் எதிரணியில் நின்ற இவர்கள் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தனர். இவர்களின் உயிர்களைக் கைப்பற்றிய போது வானவர்கள் கேட்ட கேள்வி மற்றும் இவர்கள் அளித்த பதில் குறித்தே (004:097) வசனம் அருளப்பட்டது. என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கினார்கள்.

உண்மையிலேயே இணைவைப்பவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இந்த முஸ்லிம்களுக்கு இல்லாவிட்டாலும், இணைவைப்பாளர்களின் எண்ணிக்கையைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு இவர்களும் ஒரு காரணமாகிவிட்டார்கள் என்ற அடிப்படையிலேயே அல்லாஹ் இவர்களைக் கண்டிக்கிறான்… (ஃபத்ஹுல் பாரி)

இஸ்லாம் மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளைச் சரிவர நிறைவேற்ற விடாமல் மக்காவின் இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களைத் தடுத்து தொந்தரவுபடுத்திச் சித்ரவதை செய்து வந்தனர். மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாதவாறு இணைவைப்பாளர்களின் ஊரில் இருக்க வேண்டாம் என முஸ்லிம்கள் மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் சென்றார்கள். நபி (ஸல்) அவர்களும் நாட ு துறந்து சென்றார்கள். அவர்களை அரவணைப்பதற்கு ஒரு நாடு ஆவலோடு காத்திருந்தது.

இன்னும், முஸ்லிம்களில் ஹிஜ்ரத் செல்ல இயலாதவர்கள் மக்காவிலேயே தங்கிவிட்டனர். அப்படித் தங்கிய வர்களில் ஹிஜ்ரத் செல்லச் சக்திப் பெற்றிருந்தும் அவர்கள் நாடு துறந்து செல்லாமல் இருந்தனர். நாடு துறந்து செல்லத்தடையாக அவர்களின் செல்வங்களின் மீதான ஆசையாக இருந்திருக்கலாம் (அல்லாஹ் மிக அறிந்தவன்) ஹிஜ்ரத் செல்ல சக்தியிருந்தும் செல்லாமல் இருந்தவர்களையே 004:097வது வசனத்தில் இறைவன் கண்டிக்கிறான். உண்மையில் ஹிஜ்ரத் செய்ய இயலாத பலவீனமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மீது குற்றமில்லை. அவர்களின் பிழைகளை இறைவன் பொறுத்துக் கொள்வான் என்று இறைவன் அடுத்தடுத்த வசனங்களில் கூறுகிறான்

ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களைத் தவிர- எந்த உபாயத்திறனும் அற்றவர்கள்; வெளியேறும் எந்த வழியையும் அறியமாட்டார்கள். அல்லாஹ் அவர்களது பிழைகளைப் பொறுப்பான். அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான். (திருமறைக்குர்ஆன், 004:098, 099) மேலும், இஸ்லாத்திற்காக ஹிஜ்ரத் - நாடு துறந்து செல்வதின் சிறப்புப் பற்றி 004:100வது வசனம் விளக்கமாக எட ுத்துரைக்கிறது.

எனினும் மக்கா வெற்றிக்குப் பின் உலக முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் ஒன்று இல்லை. எனவே திருமறைக்குர்ஆனில் கூறப்படும் அத்தனை ஹிஜ்ரத் வசனங்களும் முஸ்லிம்களுக்கு இல்லை! அதாவது இன்றைய முஸ்லிம்களுக்கு ஹிஜ்ரத் எனும் நாடு துறந்து செல்வது கடமை இல்லை! இதை நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது அறிவித்து விட்டார்கள்.

”மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் ‘இவ்வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது. இனி அறப் போர் செய்வதும் நல்ல எண்ணமும் தான் உள்ளது. எனவே போருக்காக அழைக்கப்பட்டால் உடனே புறப்படுங்கள்” என்று கூறினார்கள். (புகாரி. முஸ்லிம், திர்மதீ, அஹ்மத், அபூதாவூத். நஸயீ)

மார்க்கத்திற்காக நாடு துறத்தல் அளப்பெரும் நன்மையை அள்ளித்தரும். ஆனால் ஹிஜ்ரத் பயணம் நபியின் காலத்தோடு முடிந்து விட்டது. மார்க்கக் கடமைகளை நிறைவேற்ற முடியாத காலத்தில்தான் ஹிஜ்ரத் கடமையாக இருந்தது. அதன் பிறகு இஸ்லாம் மேலோங்கி இன்றுவரை வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற இயலாத நிலைமை எங்குமே இல்லை! அதனால் இந்திய வாழ் முஸ்லிம் கள் நாடு துறந்து செல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்திய மண்ணில் குடியுரிமைப் பெற்ற ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்தியாவில் வாழ உரிமை இருக்கிறது. முஸ்லிம்களும் இ ந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். அவர்களை வெளியேற்ற எவருக்கும் அதிகாரம் இல்லை. ஒருவேளை முஸ்லிம்களை வெளியேற்ற யாராவது வன்முறையில் இறங்கி இங்கே வாழ்வே முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துவார்கள் எனில் சொந்த மண், சொந்த உடமையைப் பாதுகாப்பதற்காக அறப்போரில் இற�� �்கி அதில் இறந்தாலும் அதுவும் முஸ்லிம்களுக்கு நன்மைதான்.

//முஸ்லீமான பின்னால் குஃபார் நாட்டில் வாழ்பவன் என் உம்மாவை சேர்ந்தவன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) தெரிவித்துள்ளார்கள். அல் வாலா அல் பாராவை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.// - சுலைமான்.

- இந்த ஹதீஸுக்கான விளக்கம் அடுத்த பகுதியில் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: அபூமுஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

இந்தியா காஃபிர் நாடா? (பகுதி-2)

முஷ்ரிகீன் (இணை வைப்பவர்கள்) மத்தியில் முஸ்லிம்கள் வாழலாமா?

முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்களும், முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களும் வாழ்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட காரியம் என்பது போலவும், அவ்வாறு வாழ்தல் நடைமுறைக்கும் கூட ஒத்து வராது என்பது போலவும் சிலர் புனைந்து கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

இதன் பின்னணி என்ன என்பதை இறைவன் அறிவான். எனினும் இதனூடான ஓர் அரசியல் சூழ்ச்சியை முதலில் சமூகம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் அரேபிய மண்ணில் நபி(ஸல்) அவர்களால் புனர் நிர்மாணிக்கப்பட்ட அக்காலகட்டத்திலேயே கேரள கடல் வழியாக, சமூகத்தில் தாழ்த்தப்பட்டு, சமூக நீதி கிடைக்காமல் ஒடுக்கப்பட்ட இந்திய மக்களிடையே காலூன்றி விட்டதை வரலாறு தெளிவாக அறிவிக்கின்றது. அதன் பிந்தைய குறுகிய கால கட்டத்திலேயே இந்தியாவில் சமூக நீதி மறுக்கப்பட்டு ஒடுக்கப்படட மக்களுக்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வழங்கி அவர்களை சமூக நீரோட்டத்தில் இஸ்லாம் மேலே கொண்டு வந்து விட்டது.

இதனைப் பொறுக்க இயலாத சில தீயசக்திகள் அக்கால கட்டத்திலேயே இஸ்லாம் மார்க்கத்தை இந்தியாவிலிருந்து வேரோடு அழிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருவதையும் இந்திய வரலாறு பதிந்து வைத்துள்ளது. இதன் பின்னணியிலேயே இந்தியா ஒரு காஃபிர் நாடு என்றும், முஸ்லிம்கள், முஷ்ரிகின்கள், காஃபிர்கள் மத்தியில் வாழ இஸ்லாத்தில் தடை உள்ளது என்றும் இந்திய கலாச்சார, பண்பாட்டு வரலாற்றையும், இஸ்லாமிய கொள்கைகளையும் தங்களுக்கு இயைந்த வகையில் வளைத்தொடித்தும், திரித்தும் முஸ்லிம்கள் மத்தியிலேயே ஓர் சந்தேகமான, இந்தியாவில் வாழ்வதில் ஒரு பிடிப்பற்ற சிந்தையை உருவாக்க முயல்வதைக் கவனமாகக் கண்டு கொள்ள வேண்டும்.

இனி முதலில் இஸ்லாத்தில் அவ்வாறு முஷ்ரீகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ்வதற்கு தடையுள்ளதா என்பதை ஆதாரத்துடன் காண்போம்.

இஸ்லாம் மார்க்கத்தின் இறைவேதம் திருமறைக்குர்ஆன் அறிவுக்குப் பொருந்தாத எந்த வசனங்களையும் தன்னகத்தேக் கொண்டிருக்கவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அறிவுக்கு பொருத்தமில்லா எந்த வார்த்தையையும் மொழிந்ததில்லை. மேலும் அது ஒருவரால் செய்ய இயலாத, அவருடைய சக்திக்கு அப்பாற்பட்ட எந்த ஒரு கட்டளையையோ, கடமையையோ நிர்பந்திக்க�ும் இல்லை.

“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்) எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் (அறியாது) தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் செ� ��்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன். காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவ� �� செய்தருள்வாயாக!” (அல்�ுர்ஆன், 002:286)

“நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியுற்றுக் கீழ்படிந்து நடப்போம் என உறுதிமொழி அளிக்கும்போது அவர்கள், ‘என்னால் முடிந்த விஷயங்களில்’ என்று (சேர்த்துச் சொல்லுமாறு) கூறுவது வழக்கம்.” (முஸ்லிம்: 3803, புகாரி: 7204 )

மேற்கண்ட இறைவசனமும், நபிமொழியும் இஸ்லாம் மனிதனின் சக்திக்கப்பாற்பட்ட சுமைகளைச் சுமத்துவதில்லை என்று வாக்களிக்கிறது! நாங்கள் செவியேற்றுக் கீழ்படிந்து நடப்போம் என்று சொன்னவர்களையும் கூட, “உங்களால் இயன்றவரை நிறைவேற்றுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் திருத்தம் செய்திருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.

இன்று சிலர் கூற முற்படுவது போன்று முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்ற ஒரு விதி இருக்குமாயின் அது தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சுமையான காரியம் என்பதைத் தனியாக விளக்க வேண்டிய அவசியமில்லை.முஸ்லிம்கள் முஷ்ரிகீன் மத்தியில் வாழக்கூடாது என்பது இக்காலகட்டத்தில் மட்டுமில்லை, என்றைக்குமே சாத்தியமில்லாதது. இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் என்றால் உலகளாவிய மக்களிடையே அது தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

முஷ்ரிகீன் மத்தியில் நபியவர்கள்

நபி(ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கை காலமெல்லாம் அவர்கள் முஷ்ரிகீன் மத்தியிலேயே வாழ்ந்து வந்துள்ளதற்கு தெளிவான ஆதாரங்கள் காணக்கிடைக்கின்றன.

“குல் யா அய்யுஹல் காஃபிரூன் - (ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.” (அல்குர்ஆன் 109:001)

என்ற வசனம் இஸ்லாத்தை நிராகரித்த முஷ்ரிகின்களை அழைத்தல்லவா பேசுகிறது? இன்னும் முஷ்ரிகீன் கடவுட் கொள்கைகளுக்கு பதிலடியாக திருக்குர்ஆனில் பல வசனங்கள் அருளப்பட்டதையும் காண முடிகிறது.

முஷ்ரிகீன் கடவுட் கொள்கையை விமர்சித்திருக்கும் எந்த ஒரு குர்ஆன் வசனத்திலும் அவர்களிடையே வசிக்க வேண்டாம் என்றொரு கட்டளையைக் காண இயலாது.

ஒருமுறை, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் (கலீஃபா) அபூபக்ர்(ரலி) அவர்கள் உமர் (ரலி)அவர்களிடம், “நம்மை (அம்மையார்) உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம்” என்று கூறினார்கள்.அவ்வாறே உம்மு அய்மன்(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார� ��கள். அப்போது அவர்கள் இருவரும், ”ஏன் அழுகிறீர்கள்? அவனுடைய தூதர்(ஸல்) (நம்மோடு இருப்பதைவிட) அல்லாஹ்விடம் இருப்பது அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?” என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு அய்மன்(ரலி) அவர்கள், “அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர்(ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக (அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்று விட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)” என்று கூறி அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர். (முஸ்லிம்: 4849)

(“உம்மு அய்மன் என் தாய்க்குப்பின் தாய்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்)

இஸ்லாமிய வரலாற்றில் மிகச் சிறந்த காலம் விண்ணுக்கும், மண்ணுக்கும் இறைச்செய்தியின் தொடர்பு இருந்த காலமாகும். நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் விண்ணிலிருந்து வந்துகொண்டிருந்த இறைச்செய்தி முற்றுப்பெற்று விட்டதே எனக்கூறி உம்மு அய்மன்(ரலி) அவர்கள் அழுதார்கள். இறைச்செய்தியின் சுவையை அனுபவித்தவர்கள் விண்ணுக்கும் மண்ணுக்குமுள்ள தொடர்பு - நபியவர்களின் மறைவோ� ��ு முடிந்து விட்டதே என அழுதிருக்கிறார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அந்த வஹியின் தொடர்புடைய பொற்காலமெல்லாம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முஷ்ரிகீன் மத்தியில்தான் வாழ்ந்தார்கள். யூதர்களிடம் கடன் பெற்றுத் திரும்பச் செலுத்தியிருக்கிறார்கள். மற்றொரு சமயம் யூதரிடம் தம் கவசத்தை அடமானம் வைத்திருந்தார்கள், அதையும் திருப்பாமலேயே மரணமடைந்தார்கள் என்பது குறிப்ப ிடத்தக்கது.

நபி(ஸல்) அவர்கள் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே முஷ்ரிகீன் மத்தியிலேயே இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். நபியவர்களின் மறைவிற்குப் பின்னும் அவர்கள் விட்டுச்சென்ற பிரச்சாரம் இன்றுவரை ஓய்ந்து விடவில்லை! இறுதிநாள் வரையிலும் முஷ்ரிகீன் மத்தியில் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அதாவது முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் செய ்து கொண்டிருப்பார்கள்.

முஸ்லிம்களுக்கு மத்தியில் முஷ்ரிகீன்

எவ்வாறு முஷ்ரிகீன் அதிகமாக இருந்த நேரத்தில் முஹம்மது(ஸல்) அவர்கள் மத்தியில் வாழ்ந்து இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டார்களோ, அது போன்றே முஸ்லிம்கள் அதிகமாக இருந்த காலத்தில் முஷ்ரிகீன் முஸ்லிம்கள் மத்தியில் எவ்வித பிரச்சனைகளும் இன்றி சுபிட்சமாக வாழ்ந்துள்ளனர்.

“(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரைப் பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 009:006)

நபி(ஸல்) அவர்கள் முஷ்ரிகீன் மத்தியில் வாழ்ந்தார்கள், முஷ்ரிக்குகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஒப்பந்தத்தை முறித்து எதிரிகளுடன் இணைந்து துரோகம் இழைத்தவர்களுடன் போர் செய்தார்கள். இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாதவர்களிடம் குடியுரிமை வரியென இஸ்லாமிய ஆட்சியர் ஜிஸ்யா வரி வசூலிப்பார்கள். இந்த வரி இன்றும் நடைமுறைப்படுத்த வேண்டிய சட்டம். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் முஷ்ரிகீன் சேர்ந்து வாழ்வதை இஸ்லாம் அனுமதிப்பதற்குரிய சிறந்த ஆதாரமாகும்.

“உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு உன் பெற்றோர் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே, அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்.” (அல்குர்ஆன், 029:008. 031:015)

இணை வைக்கும் விஷயத்தில் மட்டும் பெற்றோர்களுக்குக் கட்டுப்படாமல், மற்ற உலக விஷயங்களின் இணைவைக்கும் முஷ்ரிக் - காஃபிர் பெற்றோர்களுக்கு கடமைகளைச் செய்ய வேண்டும் என இவ்வசனம் கட்டளையிடுகின்றது. முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ இஸ்லாத்தில் அனுமதியில்லை எனில், இறைவனின் இக்கட்டளைக்கு அர்த்தமில்லாமல் போய் விடும்.

மேலும்,

“மார்க்கத்தால் எதிரியில்லாத முஷ்ரிக்கீன் - காஃபிர்களுடன் நல்லமுறையில் நடந்து கொள்ள இஸ்லாம் கூறுகிறது”. பார்க்க: அல்குர்ஆன், 060:008, 009. வசனங்கள்.

அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் முஷ்ரிகத் - இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?” என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அ�� �ர்கள், “ஆம்! நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்” என்று கூறினார்கள். (புகாரி: 2620)

நபியவர்களின் இந்த மார்க்கத் தீர்ப்பு அன்றும், இன்றும், யுக முடிவு நாள் வரையும் செயல்படுத்தத்தக்கது.

முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்களோ அல்லது முஸ்லிம்கள் மத்தியில் முஷ்ரிகின்களோ வாழ்வதற்கு இஸ்லாத்தில் எந்தவொரு தடையும் இல்லை என்பதற்கு இன்னும் பல உதாரணங்களை வரலாற்றிலிருந்தும், நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்தும் எடுத்துக் காட்ட இயலும். விரிவஞ்சி இத்துடன் இதனை நிறுத்திக் கொள்வோம்.

இனி, முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடாது என்ற கருத்திலுள்ள ஹதீஸைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள் ஹஸ்அம் கோத்திரத்தாரை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள் . அவர்களில் சிலர் ஸஜ்தாவின் மூலம் உயிரைக் காத்துக் கொள்ள முயன்றனர். அப்படையினர் அவர்களைக் கொன்று விட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும் அவர்களின் குடும்பத்தினருக்கு பாதி நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். “முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்ட�� �ம் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று அப்போது கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன்?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். “இருவரின் நெருப்புகளும் ஒன்றை ஒன்று பார்க்கலாகாது” என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். (திர்மிதி)

இதே கருத்தில் வரும் மற்றொரு ஹதீஸ்.

“முஷ்ரிகின்களுடன் குடியிருக்காதீர்கள்! அவர்களை மணக்காதீர்கள்! யார் அவர்களுடன் வசிக்கவோ குடியிருக்கவோ செய்கிறாரோ அவரும் அவர்களைப் போன்றவரே!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

இந்த நபிமொழிகள் முர்ஸல் வகையை சேர்ந்ததாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஹைஸ் பின் அபீ ஹாஷிம் என்பவர் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜரீர்(ரலி) வழியாக இந்த ஹதீஸை அறிவிக்கிறார். மற்றொரு இடத்தில் நபித்தோழரை விட்டுவிட்டு நேரடியாக நபியவர்களிடம் கேட்டதாகவும் அறிவிப்பதால் இது முர்ஸல் - அறிவிப்பாளர் தொடர் அறுந்த ஹதீஸ் வகையைச் சேர்ந்ததாகும். அதாவது ஹஸன் � ��ன்ற தரத்தைச் சேர்ந்தது. ஆனால் சட்டத்தை வகுக்கும் ஸஹீஹான ஹதீஸின் தரத்தைச் சேர்ந்ததல்ல.

ஒரு ஹதீஸை வைத்துச் சட்டம் வகுக்க வேண்டும் எனில், அந்த ஹதீஸ் ஸஹீஹ் தரத்தில் உள்ளதாக இருக்க வேண்டும்; முக்கியமாக குர்ஆனுக்கு முரண்படக் கூடாது என்பது ஹதீஸ் கலை சட்டமாகும். மேலும், மேலே கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் முஸ்லிம்கள் முஷ்ரிகின்களுக்கு மத்தியிலோ அல்லது முஷ்ரிகின்கள் முஸ்லிம்களுக்கு மத்தியிலோ வாழ இஸ்லாத்தில் தடையில்லாததைத் தெளிவாக எடுத்தியம்புவதால் ம�� �ர்ஸல் வகையை சேர்ந்த மேற்கண்ட ஹதீஸை வைத்து அவ்வாறு ஒரு சட்டம் இஸ்லாத்தில் வகுக்க வேண்டிய அவசியமும் முஸ்லிம்களுக்கு இல்லை.

இனி இந்த ஹதீஸின் விளக்கத்தை காண்போம்:

நபி(ஸல்) அவர்கள் ஒரு கோத்திரத்தினரை நோக்கிப் படையை அனுப்பி வைத்தார்கள் என்று வருகின்றது. இதிலிருந்து அந்தக் கோத்திரத்தினர் நபியவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நபி(ஸல்) அவர்கள் அனுப்பிய படையினரிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ளச் சிலர் ஸஜ்தா செய்திருக்கிறார்கள். அவர்களைப் படையினர் கொன்று விட்டனர். சரணடைந்தவர்களைக் கொல்வ� ��ு தவறு என்பதற்காகவே நபி(ஸல்) அவர்கள் அவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு கொடுக்குமாறு கட்டளையிடுகிறார்கள்.

இந்தத் தருணத்தில்தான், “முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். திருமறைக்குர்ஆன் வசனங்களும், வேறு நபிமொழிகளும் முஷ்ரிகீன் மத்தியில் முஸ்லிம்கள் வாழ அனுமதிப்பதை மேலே விளக்கிய ஆதாரங்கள் தெளிவிக்கின்றது. நபி(ஸல்) அவர்களும் அவ்வாறு வாழ்ந்திருக்கிறார்கள் எனும்போது திருமறைக் குர் ஆனுக்கும் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளுக்கும் எதிராக ஒரு சட்டத்தை வகுக்கும் வகையில் இந்த முர்ஸலான ஹதீஸைக் கொண்டு வந்து வலிந்து பொருத்தக் கூடாது.

அப்படியெனில் மேற்காணும் முர்ஸலான ஹதீஸில் வரும், ”முஷ்ரிகீன் மத்தியில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக் கொள்கிறேன்” என்று நபி(ஸல்) கூறியதன் பொருள் யாதெனில், “முஷ்ரிகீன் மத்தியில் வாழும் முஸ்லிம்கள் இஸ்லாத்தைவிட முஷ்ரிகின்களின் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இஸ்லாத்தைவிடப் பிறவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முஷ்ரிக ீன் மத்தியில் - வாழும் முஸ்லிமை விட்டும் நான் நீங்கிக்கொள்கிறேன்” என்று பொருள் கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது.

இப்படி விளங்கினால் திருமறை வசனங்களுக்கும், வேறு நபிமொழிகளுக்கும் இந்த ஹதீஸும் எவ்விதத்திலும் முரண்படவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.

ஹிஜ்ரத் எப்பொழுது, யாருக்குக் கடமையாகும் என்பதையும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு அது கடமையா என்பதையும் குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் காண்போம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

ஆக்கம்: அபூமுஹை

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Wednesday, November 12, 2008

குர்பானியின் சட்டங்கள்

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாக - ஈமான் கொள்வது, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் இபாதத்துகளில் எல்லாத் திசைகளிலுமிருந்து உலக முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை நோக்கி புனிதப் பயணத்தை மேற்கொண்டு ''ஹஜ்'' எனும் கடமையை நிறைவேற்றும் துல்ஹஜ் மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

''மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக!'' (அல்குர்ஆன் 022:028) என இறைவன் தனது அடியார் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கிட்டக் கட்டளையின் பேரில், அறிவித்த ஹஜ்ஜின் அழைப்பை ஏற்று கால காலமாக இறையில்லத்தை நோக்கி மக்கள் பயணம் சென்று ஹஜ் எனும் இறைவணக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.


'என் இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார், "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினார், 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்திய போது, நாம் அவரை, 'யா இப்ராஹீம்!" என்றழைத்தோம். 'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம் என்று கூறினோம்.
நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்." (அல்குர்ஆன், 037:100-108)

துல்ஹஜ் மாதம் ஹாஜிகளுக்கு மட்டும் இபாதத் மாதமன்று! நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களின் மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் நினைவாக உலக முஸ்லிம்கள் அனைவரும் ''குர்பானி'' எனும் பிராணிகளை அறுத்து பலியிடும் இபாதத்தை நிறைவேற்றும் ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமுமாகும். எனவே, துல்ஹஜ் மாதத்தில் அறுத்துப் பலியிடுதல் பற்றிய இஸ்லாத்தின் சட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

குர்பானி கொடுக்க நாடுபவர்

நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை தனது முடியையும் நகத்தையும் வெட்ட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா , பைஹகீ.)

குர்பானி கொடுக்கும் பிராணிகள் ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதீ ,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (திர்மிதீ அஹ்மத், அபூதாவூத், நஸயீ).

நபி(ஸல்) அவர்கள் 'கொம்புள்ள கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

கருப்பு நிறத்தால் நடக்கக்கூடிய, கறுப்பு நிறத்தால் அமரக்கூடிய, கறுப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது கால், மூட்டுக்கால், கண் பகுதி ஆகியவை கறுப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானி கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள். (ஆடு வந்ததும்) ஆயிஷாவே கத்தியை எடுத்து வா! என்றார்கள். பிறகு அதைக் கல்லில் தீட்டு! என்றார்கள். நான் அப்படியேச் செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டைக் கீழே படுக்க வைத்து அறுத்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

குர்பானி பிராணிகளை வீட்டில் வளர்ப்பதும் நபி வழியே!

'மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்." (புகாரி, தஃலீக்).

ஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் குர்பானி கொடுக்கலாம்?

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் 'ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து நீர் பார்க்கக்கூடிய இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். (திர்மிதீ, இப்னுமாஜா, தப்ரானீ)

குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்! சேமித்தும் வைத்துக்கொள்ளங்கள், தர்மமும் செய்யுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

எனவே, ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானது. வசதி படைத்தவர்கள் எத்தனை ஆடுகள் வேண்டுமானாலும் அறுத்து பலியிட்டு தர்மம் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்கள் குர்பானி கொடுத்திருக்கிறார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம்.

கூட்டாக ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகம், ஒரு மாட்டை இவற்றை குர்பானி கொடுக்கலாம்.

ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி இப்னுமாஜா)

அறுப்பது பெருநாள் தொழுகைக்கு முன்பா? பிறகா?

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம்(இல்லத்திற்குத்) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். (புகாரி , முஸ்லிம்)

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்தா இப்னு நியார்(ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் 'முஸின்னாவை" விட சிறந்த ஆறுமாத குட்டி ஆடு உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். முன் அறுத்ததற்கு இதை பகரமாக்குவீராக! (அறுப்பீராக!) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

எங்கு அறுப்பது?

வீட்டிலும் அறுக்கலாம். ஈத்கா எனும் தொழும் திடலிலும் அறுக்கலாம்.

முஸல்லா என்னும், திடலில் நபி(ஸல்) அவர்கள் அறுப்பவர்களாக இருந்தனர். (புகாரி , அபூதாவூத்)

இன்றைய நாளில் நாம் முதலாவதாக செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். (புகாரி, முஸ்லிம்)

ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்று கூறியதிலிருந்து வீட்டில் வைத்து அறுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.

பெண்கள் அறுக்கலாமா?

ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். (புகாரி)

குர்பானி கொடுக்கும் நாட்கள்

தஷ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாரகுத்னி, இப்னு ஹிப்பான், அஹ்மத்)

துல்ஹஜ் மாதம் பெருநாள் தினமாகிய பிறை 10லிருந்து பிறை 13வரை குர்பானி கொடுக்கலாம்.

--~--~---------~--~----~------------~-------~--~----~
Thanks: Visit: http://www.darulsafa.com

Saturday, November 8, 2008

பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!

ஒரு முசுலீமின் வீட்டுக்கதவை போலீசோ அல்லது ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முசுலீம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக அப்பாவி முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது இசுலாமிய மக்களின் நிலைமை.
வீடு, வேலை, கல்வி அனைத்திலும் முசுலீம் என்பதற்காகவே வாய்ப்புகள் மறுக்கப்படும் அளவுக்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றார்கள். அவ்வளவு ஏன் சென்னையில் இரண்டாம் காட்சி சினிமாவைப் பார்ப்பதற்குக்கூட ஒரு முசுலீமுக்கு சுதந்திரம் இல்லை.

ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் ஓராயிரம் முசுலீம் மக்களின் நிம்மதி குலைக்கப்படுகின்றது. குண்டு வைத்த தீவிரவாதிகளை உடனே கைதுசெய்து ரிசல்ட் காட்ட வேண்டுமென்ற இயல்பான பொது நிர்ப்பந்தம் காரணமாக எண்ணிறந்த முசுலீம் மக்கள் எந்தக் குற்றமுமிழைக்காமல் ஆண்டுக்கணக்கில் சிறையில் வாடுகின்றார்கள். இது அப்படிப்பட்டவர்களின் கதை. தெகல்கா ஏடு இந்தியாவெங்கும் புலனாய்வு செய்து இந்த உண்மைகளை வெளியிட்டிருக்கின்றது. தொந்தரவில்லாமல் நிம்மதியாக வாழும் இந்து மனத்தை இந்த கண்ணீர்க்கதைகள் சற்று நேரமாவது குறுக்கீடு செய்யட்டும்.

•••

அகமதாபாத் பள்ளிவாசல் ஒன்றில் ஜூமா நமாஸில் நிதானமாக அமைதியாக ஜூலை 25, 2008, வெள்ளியன்று தொழுகை நடத்தி "இந்துக்களோடு பரஸ்பரம் நேசமான வாழ்க்கை வாழவேண்டும்; அடுத்தவன் பசியோடு இருக்க நாம் மட்டும் வயிறுமுட்டச் சாப்படுவது அநீதி'' என்று போதித்த ஒல்லியான இசுலாமியக் கல்விமான் அப்துல் அலீம் — அடுத்தநாள் ஜூலை 26 அகமதாபாத் குண்டுவெடிப்புக்குப் பிறகு சில நிமிசங்களுக்குள்ளாகவே போலீசால் கைது செய்யப்பட்டார். வீட்டில், தெருவில் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க, தடதடவென வீட்டுக்குள்ளிருந்து அலீம் இழுத்துச் செல்லப்பட்டார்.

ஞாயிறு ஜூலை 27 அன்று டி.வி., செய்தித்தாள்களில் அப்துல் அலீம் புழுதிவாரித் தூற்றப்படுகின்றார். ரகசிய சதிவேலை செய்த தீவிரவாதி என்று வர்ணிக்கப்பட்ட அலீம் நெரிசல்மிக்க சந்தடிமிகுந்த முசுலீம் பகுதிகளில் மக்களால் மதிக்கப்பட்டவர்தான். இரண்டு மாதங்களுக்கு முன்புகூட உள்ளூர் இன்ஸ்பெக்டர் அலீமின் அமைப்பான "அஹ்பே ஹதீஸ்' இசுலாமியப் பிரிவின் டிரஸ்டுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்; அவரது உறுப்பினர்கள் பட்டியல் தனக்கு உடனே வேண்டும் எனக் கோரியிருந்தார். அப்போதுகூட, போலீசாரின் தகவலின்படி, அலீம் ஒரு முகவரியில் டிரஸ்டு நடத்துபவர்தான்; தவிர, அலீம் சட்ட விரோதமானவரோ, ரகசிய நபரோ அல்ல.

2006 இல் அலீமின் அமைப்பு புதுடெல்லியில் நடத்திய தேசியக் கருத்தரங்கத்திற்குத் தலைமை விருந்தினராக வந்தவர் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் என்பது குறிப்பிடப்பட வேண்டிய சிறப்புச்செய்தி. குஜராத் இனப்படுகொலைக்குப் பிறகு, அலீம் ஏராளமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். அப்போது, நிராதரவாக விடப்பட்ட 34 முசுலீம் குழந்தைகளுக்கு குவைத்தில் வசிக்கும் ஒரு பணக்காரரிடம் உதவி கோரினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை, கைவிடப்பட்டது. குழந்தைகளும் அந்தப் பணக்காரரிடம் அனுப்பப்படவில்லை. இதையெல்லாம் காரணம் காட்டி அலீமின் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது. தீவிரவாதப்பயிற்சி எடுப்பதற்காக அகமதாபாத்திலிருந்து இளைஞர்களை உ.பி.க்கு அனுப்பினார்; 2002லிருந்து தலைமறைவாகி விட்டார்'' என்றெல்லாம் ஜோடித்து, அவரைப் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததாகச் சித்தரித்து குற்றவாளியாக்கினார்கள்.

சட்டத்துக்கு உட்பட்ட குடிமகனாய் வலம்வந்த ஒரு இசுலாமிய மதநம்பிக்கையாளரான அலீமை சட்டவிரோதமாகத் தீவிரவாதியாய்க் காட்டி இப்போது 2008 இல் கைதுசெய்து உள்ளே தள்ளிவிட்டது போலீசு. நமக்கு எழும் கேள்வி: முன்பு அலீமின் டெல்லி கருத்தரங்கில் கலந்து கொண்ட சிவராஜ் பாட்டீலை விசாரித்து விட்டார்களா?

நம்முள் எழும் வேதனை: அலீம் சிறையில் வாடுகின்றார்; அலீமின் குடும்பமோ அடுத்தவேளைச் சோற்றுக்கே பரிதவிக்கின்றது. அலீம் இருந்த வரை கடைச்சிறுவன் உதவியோடு பழைய இரும்புக் கடை ஒன்றை நடத்தி வந்தார்; இப்போது சிறுவன் மட்டுமே கடையைக் கவனிக்கின்றான்; அதிக வருவாயில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டுவாடகைக்கு அலீமின் மனைவி ரூ. 2500 தேற்ற வேண்டும்; 5 குழந்தைகளுக்குச் சோறு போட்டுக் காப்பாற்ற வேண்டும்.

•••

ஐதராபாத்தில் மவுலானா மொகம்மது நசீருதீன் மற்றும் அவரது இரு மகன்களான யாசிர், நசீர் ஆகிய மூவரையும் "தீவிரவாதிகளின் குடும்பம்' என்று போலீஸ் அழைத்தது. நசீருதீன் முப்பதாண்டுகளுக்கு முன்னால் தெருவோரக் கடைகளில் தான் கற்ற மோட்டார்பைக் ரிப்பேர், வேலைத்திறன், நண்பர்களிடம் வாங்கிய கடன் இவற்றை வைத்து என்ஜினீயரிங் ஒர்க்ஷாப் வைத்திருந்தார்.

நசீருதீன் இசுலாமியக் கல்விமான். பாபர் மசூதி இடிப்பு, குஜராத் 2002 முசுலீம் படுகொலைகள் இரண்டிலும் அரசை வெட்டவெளிச்சமாக விமரிசித்தவர்; "குஜராத்தில் கலவரம் செய்தார்; 2003 மார்ச்சில் குஜராத் உள்துறை அமைச்சர் ஹரேன் பான்டியாவைக் கொலை செய்த சதியில் ஈடுபட்டார்'' என்ற சொல்லி 4 ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டார்.

செப் 2001ல் "சிமி' தடை செய்யப்பட்ட சமயத்தில் யாசிர் இதில் உறுப்பினர். பிறகு பல பொய்வழக்குகளில் அவர் சேர்க்கப்பட்டபோதும் "சிமி' உறுப்பினர் என்பதிலிருந்து தொடங்கியே வழக்கு சோடித்தது போலீசு. முதலில் 2001இல் "சிமி' தடைசெய்யப்பட்டபோது கைது; கைதான மறுநாளே பிணை கிடைத்தது; ஆனால் "அரசை எதிர்த்துப் பேசினார்' என்று அடுத்தநாளே மறுபடியும் கைது, 29 நாள் சிறை. இப்போது ஏழாண்டுகளாகி விட்டன. ஆனாலும் எந்த வழக்குமே நடக்கவில்லை.

அண்மையில் ஜூலை 15, 2008 இல் மறுபடி கைது பெங்களூருவைக் குலுக்கிய குண்டு வெடிப்புக்கள் ஜூலை 25இல் நடந்தபோது, குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளைக் கர்நாடகாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தவர் என்று பின்னால் வந்த வழக்குடன் பிணைக்கப்பட்டார். ஆதாரம் விசாரணையில் யாசிரே கொடுத்த வாக்குமூலம் என்றார் கமிஷனர் பிரசன்னராவ். போலீசு சொன்னது பொய் என்று தனது தாய் உதாய் பாத்திமா மூலம் வெளி உலகுக்குத் தெரிவித்தார் யாசிர். தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்துச் சித்திரவதை செய்து கையெழுத்து வாங்கிவிட்டார்கள் என்று அதனது குரூரத்தை அம்பலமாக்கினார் பாத்திமா.

யாசிரின் தம்பி நசீர் இருபதே வயது நிரம்பியவர். ஜனவரி 11, 2008 இல் கர்நாடகாவில் நண்பர் ஒருவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மறித்து நிறுத்திக் கைதுசெய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளைத் திருடி ஓட்டுவதாகவும், இருவரும் கைவசம் சிறுகத்தி வைத்திருப்பதாகவும், "அரசுக்கெதிராகப் போர்செய்ய இருப்பதாகவும்', தாங்கள் "சிமி' உறுப்பினர்கள் என வாக்குமூலம் கொடுத்ததாகவும் போலீசு கூறியது. ஆனால் 90 நாட்களுக்குப் பிறகும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், நசீரின் வழக்குரைஞர் பிணை பெற்றார். ஆனால் உடனே அவர் மீது சதிவழக்கொன்றைப் போட்டு சிறையிலிருந்து வெளியே வராதவாறு போலீசு செய்து விட்டது.

அக், 2004 இல் மவுலானா நசீருதீன் கைது செய்யப்பட்டபோது அதை எதிர்த்து மக்கள் காவல்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஐதராபாத் வந்திருந்த குஜராத் போலீசு அதிகாரி நரேந்திர அமீன் தனது துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டார். இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு, அமீன் மீது வழக்குப் போட்டால்தான் நகருவோம் என்று மக்கள் உறுதியாக அங்கேயே மறியல் செய்தனர். போலீசு மக்கள் மீது ஒரு வழக்கும் அமீன் மீது ஒரு வழக்குமாகப் பதிவுசெய்தது. அமீன் கைது செய்யப்படவில்லை. பிறகு அமீன் மீதான வழக்கு ஒர் அங்குலம் கூட நகரவில்லை. அன்று மவுலானாவுடன் அமீன் அகமதாபாத்துக்குப் பறந்தான்; அவனுடைய உடையில் சிறு கசங்கல் கூட இல்லை. அவனுக்கு எதிரான வழக்கு எப்போதோ செத்துப் போய் விட்டது.

மவுலானா நசீருதீன் மற்றும் இரு மகன்களும் கொடுஞ்சிறையில். அந்த மகன்களைப்பெற்ற தாய் கதறுகின்றாள்: "எங்கள் குடும்பத்திலிருந்து மூன்று பேர் மீது பொய்வழக்கு. என்னையும் சேர்த்துச் சிறையில் தள்ளட்டும். பிறகு, எங்களை ஒன்றாகவே சேர்த்து சுட்டுக் கொன்று விடட்டும், வசதியாக இருக்கும்.''

•••

அப்துல் முபீன், உத்திரப் பிரதேச மாநிலம் பக்வா கிராமம். இவர் மீது ஒன்றன் பின் ஒன்றாகப் பொய்யாக 4 கிரிமினல் தீவிரவாத வழக்குகள். முதல் வழக்கு செப் 2000 இல் போடப்பட்டது. பிறகு அடுத்தடுத்து வழக்குகள். ஒவ்வொரு வழக்கையும் அது பொய் என்று நிரூபிக்க இரண்டு, மூன்று ஆண்டுகள் எடுத்தன. நான்காவது வழக்கு மட்டுமே எட்டு நீண்ட ஆண்டுகளாக நடந்தது. முதல் இரு வழக்குகளிலுமே அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆகஸ்டு 6, 2008 இல்தான் முபீன் விடுதலை ஆனார்.

மேலே சொன்ன நான்கு வழக்குகளிலுமே "இவர் சிமி உறுப்பினர்' என்று பொய் சொல்லப்பட்டது எப்படியாவது "சிமி' யைத் தடைசெய்ய வேண்டும் என்பதற்காக. சாட்சி: அப்துல் முபீன் போலீசில் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட வாக்குமூலம்.

முதல் வழக்கில் முபீன் சிறை சென்றபோது அவரது கடைசிக் குழந்தையான மகள் ஜைனாவுக்கு வயது ஆறேமாதம். இப்போது 2008 இல் முபீன் விடுதலையாகி வந்து பார்க்கும்போது அவளுக்கு அப்பாவைப் பார்க்க ஒரே வெட்கம். இந்த முபீன் விடுதலையான நான்காம் நாள், "இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேடு ஆகஸ்டு 10, 2008 அன்று சிமியைப் பற்றி முழுப்பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. முபீன் சிமியின் முதல் தீவிரவாதி என்று எழுதியது; குற்றம் நிரூபிக்கப்படாத போதும் அவர்தான் முதல் தீவிரவாதி என்று எழுத இந்துஸ்தான் டைம்ஸ் வெட்கப்படவில்லை. முபீனுக்கும் "சிமி'க்கும் ஜனநாயக மறுப்பு, சித்திரவதைகள், பலப்பல பொய் வழக்குகள்; "இந்துஸ்தான் டைம்ஸூ'க்கோ பொய்களை இரைத்துக் கதைகள் விற்க வானளாவிய உரிமை.

•••

அபுல் பஷார் குவாஸ்மி உ.பி.யைச் சேர்ந்த இசுலாமியக் கல்விமான். 23 வயதே நிரம்பிய இளைஞர். ஒராண்டுக்கு முன் தனது திருமணத்தை முடித்திருந்த குவாஸ்மி தம்பிக்கும் திருமணம் செய்து வைக்க அங்கங்கே சொல்லி வைத்திருந்தார். இதை மோப்பம் பிடித்த போலீசு தரப்பு கடந்த ஆகஸ்டில் பெண்வீட்டார் என்று சொல்லிக் கொண்டு குவாஸ்மியின் வீட்டுக்குள்ளே நுழைந்தது. வெளியே அவர்கள் மாருதி வேனை நிறுத்தியிருந்தார்கள். உள்ளே தடதடவென நுழைந்த இரண்டு போலீசோ குவாஸ்மியைத் தரதரவென்று இழுத்துச் சென்று மாருதி வேனில் திணித்துக் கொண்டு பறந்து போனார்கள்.

இரண்டு நாள் கழித்து, குஜராத் போலீசு அதிகாரி பி.சி. பாண்டே அகமதாபாத் குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவன் குவாஸ்மிதான் என்று அறிவித்தான். "பாண்டே' கேள்விப்பட்ட பெயராகத் தெரிகின்றதா? ஆமாம், குஜராத்தில் 2000 அப்பாவி முசுலீம்களின் படுகொலைகளில் ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, பஜ்ரங் தள் மூன்றோடும் தீவிரமாக இறங்கி நரவேட்டையாடியவன்தான் பாண்டே. இதற்காக அவன் பதவி உயர்வும் வாங்கிக் கொண்டான்.

ஆனால் குவாஸ்மி ஒரு அப்பாவி; கிழக்கு உ.பி.யிலுள்ள அசாம்கர் நகரத்தின் அருகே ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த கூச்ச சுபாவமுள்ள அப்பாவி. போலீசோ அவனைச் "சிமி'யின் தலைவன், குஜராத் படுகொலைகளுக்குப் பழிவாங்கத் துடித்த "புனிதப் போராளி' (ஜிகாதி) என்று விவரித்தது. ஊடகங்கள் தங்களது பங்குக்கு குவாஸ்மி இந்தியா முழுக்கப் பயணம்செய்து தீவிரவாத வலைப்பின்னலை உருவாக்கியவன் என்றும், கேரளத்தில் செயல் வீரர்களை வடிவமைத்தவன் என்றும் கலர்கலராகச் செய்திகளை விற்றன.

ஆகஸ்டு 14இல் குவாஸ்மியை இழுத்துச் சென்ற போலீசு இரண்டுநாள் கழித்து மறுபடியும் அவரது வீட்டுக்கு வந்தது. அவரது தந்தை, தம்பி, தங்கைகளை வெளியே பிடித்துத் தள்ளிவிட்டு வீட்டைச் சல்லடை போட்டுச் சலித்து சோதனை போட்டது. வீட்டிலிருந்த மூட்டைப் பூச்சி மருந்து மற்றும் ஒரு மெட்டல் கிளீனிங் பிரஷ்ஷைக் கவனமாகப் பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றது. அபு பக்கீர் பயத்தோடு கேட்டார்: "இவற்றை என் பையன் குண்டு தயாரிக்கத்தான் பயன்படுத்தினான் என்று போலீசு சொல்லி விடுவார்களோ?''

குவாஸ்மி "சிமி' உறுப்பினர் அல்ல; இசுலாமிய இறையியல் முடித்துள்ள, வழக்குகள் ஏதுமில்லாத எளிய இளைஞர். இவரைப் போலீசு கடத்திச் சென்றது என்று உள்ளூர் மக்கள் போலீசிடமே முறையிட்டார்கள். அக்குடும்பத்துக்கே இப்போது ஊரார்தான் சோறு போடுகின்றார்கள்.

தந்தை அபுபக்கீர் சொல்கிறார்: "நாங்கள் செய்த ஒரே தவறு முசுலீம்களாக இருப்பதுதான்.''

• குப்பண்ணன்
Thanks : tamilcircle. net

அமெரிக்காவிrற்கு தடியெடுத்த காலம் போய் தடிபிடிக்கும் காலம் வந்து விட்டது

இரண்டாம் உலப்போரை முடிவுக்கு கொண்டுவர முன்னால் ஜப்பான் தலைநகர் ஹீரோஷீமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் அனுஆயுதங்களை முதன்முதலாக உபயோகித்து பல இலட்சக்கணக்கான உயிர்களை குடித்த பின் தன்னை ஒரு வல்லரசாக அறிமுகப்படுத்திக்கொண்ட பெருமை அமெரிக்காவுக்கு உண்டு, அது தன் இள இரத்தம் ஓடிய காலம், அதிலும் 1991 ல் ரஷ்யாவை துண்டாடியபின் போட்டியற்ற வல்லரசாக திகழ்ந்தது. பல வெற்றிகளை குவித்தது, இந்நிலை சற்று சற்றாக குறைய ஆரம்பித்தது, இருந்தும் சீனா போன்ற நாடுகளையும் உளவு விமானங்கள் மூலம் உளவுபார்த்தது, இதை பொருத்துக்கொள்ளாத சீனா (செப்டம்பர் பதினொன்று, இரண்டாயிரத்தி ஒன்று நிகழ்ச்சிக்கு முன்னர்) அவ்விமானத்தை தரையிரங்கச்செய்து, அமெரிக்காவை மன்னிப்புக்கேட்க வைத்து பின்னர் சரக்கு விமானத்தில் அதை பிரித்து குப்பை போல் அனுப்பிவைத்தது.
இந்நிலையிலேதான் செப்டம்பர் பதினொன்று, இரண்டாயிரத்தி ஒன்று நிகழ்ச்சி அமெரிக்காவை உலுக்கியது, இதன் உண்மை இன்றும் மர்மமாகவே உள்ளது, இதை சாக்காக வைத்துக்கொண்டு அமெரிக்கா விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையில் கப்பம் கட்ட மறுத்த நாடுகளையெல்லாம் மிரட்ட ஆரம்பித்தது, இதில் ஆப்கானிஸ்தான், ஈராக், சூடான், லைபீரியா, ஈரான், சிரியா, வடகொரியா, கூபா, வென்சிவெல்லா போன்ற நாடுகளும் அடங்கும்.
முதலில் ஆப்கானிஸ்தானை கைவைத்தது, தாலிபான் அரசை அகற்றி பலரை பிணைக்கைதிகளாக்கி குவாட்னாமோ சிறையில் அடைத்தாலும் இன்றும் அவர்களின் ஆதிக்கத்தை அமெரிக்காவால் தடுக்கமுடியவில்லை, அதே தாலிபான் ராணுவ பீரங்கிகளில் வலம் வருகின்றனர்.
2 வதாக ஈராக்கை சின்னாபின்னமாக்கி முன்னால் ஈரான் ஈராக் போரில் அனுஆயுதங்களை ஈராக்கிற்கு வழங்கியது அமெரிக்காதான், தனக்கு எதிரான சாட்சியாக சத்தாம் ஹுஸைன் மாறிவிடலாம் என அஞ்சியதால் நீதியற்ற நீதிமன்றங்களின் மூலம் அவசர அவசரமாக சத்தாமை எவ்வித சப்தமின்றி இரவோடு இரவாக தூக்கிலிட்டது அமெரிக்கா, பின்னர் ஒராண்டில் அமைதியை கொண்டு வருவோம் என மார்தட்டியது ஆனால் அமெரிக்காவினால் ஐந்தாண்டுகள் முடிந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை
வடகொரியா தொடர்ந்து தன் அனு ஆயுத தயாரிப்புகளை செய்துகொண்டே இருக்கிறது, அதே போல் ஈரானும் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஆனால் அமெரிக்காவால் கூட்டத்தை மட்டும் கூட்டமுடிகிறது, ஒன்றும் செய்யமுடியவில்லை.
சீனாவின் முன்னேற்றத்தை தடுக்கமுடியாமல் தானும் அத்துடன் சேர்ந்து பல வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா செய்து கொண்டது,
ரஷ்யாவின் ஆட்டங்களை இன்னும் தடுத்து நிறுத்தமுடியவில்லை, சற்று முன் செசன்யா வில் தன்னுடைய மூக்கை ரஷ்யா தினித்த போதும் அமெரிக்காவால் ஒன்றும் செய்யமுடியவில்லை, தற்பொழுது ஜோர்ஜியாவின் விஷயத்திலும் ரஷ்யாவின் ஓட்டு ஐநா சபையில் பாலஸ்தீன் , ஈரான், சிரியாவின் விஷயத்தில் அமெரிக்காவிற்கு தேவை என்பதால் அமெரிக்கா கைகட்டி பார்த்துக்கொண்டிருந்தான் இருந்தது, ஒன்றும் செய்ய முடியவில்லை.
கருப்பின அமெரிக்கர்களின் போராட்டங்களை தடுக்க முடியவில்லை இதே நிலை பராசீல் மற்றும் வென்சுவெல்லாவிலும் தொடர வாய்ப்புள்ளது,
மெக்ஸீகோ, பொலிவியா,( Bolivia ), ஹந்த்ராஸ் (Honduras) போன்ற நாடுகளில் அமெரிக்க தூதர்களையும் துரத்திய செய்தியும் சமீபத்தில் செய்திகளாக வந்தன.. அமெரிக்கா ஒன்றுகூட பேசமுடியவில்லை.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் 60 ஆண்டுகளுக்கு மேல் ஜப்பானில் நங்கூரம் போட்டுள்ள அமெரிக்கப்படையினரை வெளியேற்றிவிட்டு, அந்நாட்டு படையினரேயே அவ்விடத்தில் நிறப்ப, மக்கள் வாக்கெடுப்பு வேட்டை நடந்துள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன
பொருளாதாரப்பின்னடைவை அமெரிக்கா சந்தித்துவிட்டதாக அந்நாட்டு வங்கியே தற்பொழுது அறிவித்துவிட்டது.
கிழடுதட்டிவிட்டால் உடனே மரணித்துவிடவேண்டும் என்பது அவசியமல்ல, ஆனால் சுய சக்தியை இழந்து தடியை தரையில் ஊண்டி நடக்க ஆரம்பித்துவிட்டது என்பதையே மேலேயுள்ள வெங்காயவெடி நிகழ்ச்சிகள் காட்டுகின்றன, சில காலங்களில் சுயநினைவைக்கூட அந்நாடு இழக்கக்கூடும்.
ஒரு காலத்தில் பாரசீக, ரோமானியப்பேரரசுகள் கொடிகட்டிப்பறந்தன. நபியவர்கள் காலத்திலேயே இவ்விரண்டு பேரரசுகளுக்கும் இஸ்லாமியர்களால் சாவு மணி அடிக்கப்படும் என்ற நற்செய்தி சொல்லப்பட்டு நபியவர்களுக்குப்பின் குறுகியகாலத்திலே சாவுமணியடிக்கப்பட்டது,
பழங்கால எகிப்தியர்கள் நாகரீகத்தில் உயர்ந்தோங்கியவர்கள், அவர்களின் ஆனவத்தால் அவர்களும் அழிக்கப்பட்டார்கள்.
இவ்வாறே பிரான்சு மற்றும் ஜெர்மனியும் வல்லரசுகளாக இருந்து வீழ்ச்சியடைந்தது நாம் அறிந்ததே.
இங்கிலாந்தின் ஆட்டம் ரொம்பவே இருந்தது, இப்பொழுது பலமிழந்துவிட்டது,
சோவியத் யூனியன் ரஷ்யாவிற்கும் என்ன நடந்தது என நாம் அறிவோம்.
இதே நிலையைத்தான் இன்று அமெரிக்காவும் சந்தித்துள்ளது.
எனவேதான் இறைவன் மனிதவாழ்வைப்பற்றி குறிப்பிடும்போது :
ஆரம்பத்தில் (குழந்தைப்பறுவத்தில்) பலஹீனத்தையும், பின்னர் (வாலிபப்பருவத்தில்) பலத்தையும், இந்த பலத்திற்குப்பின் (வயோதிபத்தில்) பலவீனம் மற்றும் நரையையும் கொடுத்துள்ளதாக இறைவன் குறிப்பிடுகிறான்..
அதற்கு எடுத்துக்காட்டாக : வானத்திலிருந்து மழையை இறக்கி பின்னர் அதை பூமியடியில் பல ஊற்றுகளாக ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு நிறங்களையுடைய பயிர்களை முளைக்கச்செய்து, அவை பின்னர் உலர்ந்து மஞ்கள் நிறமாகி, எதற்கும் உதவாத கூளங்களாகி விடுகின்றன. என அதே இறைவனே குறிப்பிடுகின்றான்.
இதே நிலை இச்சமுதாயத்தின் உதாரணமும் கூட என இறைவன் நமக்கு விளக்கிச்சொல்ல விரும்புகிறான்.
எனவே எவரும் நிரந்தர பலசாலியாகவோ, நிரந்தர வாலிபப்பருவத்திலே இருக்கமுடியாது என்பதே இறைவனின் விதிமுறையாகும்
எனவேதான் இறைவன் கூறுகிறான்;
{سُنَّةَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلاً} (الفتح: 23).
இவ்வாறே இதற்கு முன்னும் நடந்தது என்பதே இறைவனது நடைமுறையாகும், இறைவனது நடைமுறைகளில் அறவே மாற்றங்கள் ஏற்படாது 48:23

எனவே அமெரிக்காவின் கைவிரல்கள் பலமிழந்துவிட்டன, பொருளாதாரநிலையை சரிசெய்ய முடியாமல் தவிக்கிறது, மத்தியகிழக்கு நாடுகளிடம் இனிமேல் உறிஞ்ச இரத்தமில்லை, எனவே தடியெடுத்த காலம் போய் தடிபிடிக்கும் காலம் அமெரிக்காவிrற்கு வந்து விட்டது
அவ்விடத்தை நிறப்பப்போவது சீனாவா ? திரும்பவும் ரஷ்யாவா? அல்லது இந்தியாவா? காலம் பதில் சொல்லும்

நன்றி: மௌலவி முஹம்மது இப்ராஹீம்

Wednesday, September 24, 2008

கிருஸ்தவ உலகு திட்டமிட்டு மறைத்த பேருண்மை!அதிர்ச்சி தரும் உண்மைத் தகவல்!

கிருஸ்தவ உலகு திட்டமிட்டு மறைத்த பேருண்மை!அதிர்ச்சி தரும் உண்மைத் தகவல்!
அன்புக்குரியவர்களே!
கடந்தகாலங்களில் கிருஸ்தவப் பாதிரிகளால் ச‌ர்வதேச உலகுக்கு,திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஓர் உண்மையையே இங்கு வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றோம். அல்லாஹுத்தஆலா தனது அருள்மறையில் 18ம் அத்தியாயம் 9ம் வசனத்தில்
” அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்” என்று நீர் நினைக்கிறீரா? எனக் கேட்கிறான்.
இந்த வசனத்தில் (திருக்குர்ஆன்18:9) குகையில் தங்கியவர்கள் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும்.அத்துடன் குகைவாசிகள் மற்றும் ஏட்டுக்குரியோர் (சுவடிக்கு உரியவர்கள்)என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது.
“அந்த ஏடு”என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும். அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே “அந்த ஏட்டுக்குரியவர்கள்” என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் “அந்த ஏடு” என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை.ஆனால் ச‌மீப‌ கால‌ங்க‌ளில் அந்த ஏடுக‌ளில் இருந்த‌ செய்திக‌ள் இப்போது அம்ப‌ல‌மாகியுள்ள‌ன‌.
“சாவுக்க‌ட‌ல் சாச‌ன‌ச் சுருள்க‌ள்” என்ற‌ த‌லைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் ப‌ல‌ தட‌வை BBC யில் ஒரு ம‌ணி நேர‌த்திற்கு ஒரு நிக‌ழ்ச்சி ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து.அதில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ செய்திக‌ள் கேட்போர் அனைவரையும் விய‌ப்பில் ஆழ்த்துவ‌தாக‌ இருந்த‌து.இந்த‌ நிக‌ழ்ச்சியின் முத‌ல் ஒளிப‌ர‌ப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்ட‌ப்ப‌ட்ட‌தாக‌வும் சொல்ல‌ப்ப‌ட்ட‌து.அத‌ன் விப‌ர‌ங்க‌ள்:
1947 ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அர‌புச் சிறுவ‌ன் காணாம‌ல் போன‌ த‌ன‌து ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்க‌ட‌லை ஒட்டிய‌ ஜோர்டான் நாட்டு ம‌லைப் ப‌குதிக‌ளில் தேடி அலைந்தான்.அந்த‌ ம‌லைப்ப‌குதி “கும்ரான் மலைப்ப‌குதி”என‌ அழைக்க‌ப்ப‌டுகின்ற‌து.
ஆட்டுக்குட்டியைத் தேடிய‌ சிறுவ‌ன் அங்கிருந்த‌ குகைக்குள் பார்த்த‌ போது ம‌ண் பாண்ட‌ங்க‌ளில் சுருட்டி நிற‌ப்பி வைக்க‌ப்ப‌ட்ட‌ தோல் ஆவண‌ங்க‌ளைக் க‌ண்டிருக்கிறான்.அவைக‌ளில் சில‌வ‌ற்றை எடுத்து வ‌ந்து செருப்புத் தொழிலாளியான‌ த‌ன் த‌ந்தையிட‌ம் கொடுக்க‌,ம‌றுநாள் த‌ந்தையும் ம‌க‌னும் சேர்ந்து குகைக்குள் இருந்த‌ அனைத்துச் சுருள்க‌ளையும் வீட்டுக்குக் கொண்டுவ‌ந்து சேர்த்தார்க‌ள்.
அந்த‌ப் ப‌ழைய‌ தோல்க‌ளைத் த‌ம‌து செருப்புத் தொழிலுக்குப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ எண்னிய‌ அந்தச் சிறுவ‌னின் த‌ந்தை தோல்க‌ளில் ஹிப்ரு மொழியில் எழுத‌ப்ப‌ட்டிருந்த‌ வார்த்தைக‌ளின் பொருள் புரியாம‌ல்,அதை அப்போது ஜோர்டான் ம‌ன்ன‌ர் ஆட்சியிருந்த‌ கிழ‌க்கு ஜெரூஸ‌ல‌தைச் சேர்ந்த‌ ஒரு ப‌ழைய‌ புத்த‌க‌க் க‌டைக்கார‌ரிட‌ம் காண்பித்திருக்கிறார்.
ஓர‌ள‌வு ஹிப்ரூ மொழிய‌றிந்த‌ அந்த‌க் க‌டைக்கார‌ர் அந்த‌ச் சுருள்க‌ள் ப‌ழ‌ங்கால‌ச் செய்திக‌ளை கொண்ட‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்று க‌ருதி ஒரு சில‌ தீனார்க‌ளுக்கு அத்த‌னை சுருள்க‌ளையும் அந்த‌ச் செருப்புத் தொழிலாளியிட‌மிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.
கிருத்த‌வ‌ரான‌ அந்த‌ப் புத்த‌க‌க் க‌டைக்காரர் அந்த‌ச் சுருள்க‌ளை அந்ந‌க‌ரில் இருந்த‌ கிருத்த‌வ‌ ஆல‌ய‌த்தில் ஒப்ப‌டைத்துவிட்டார்.இந்த ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் சுருள்க‌ள் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம் வெளிப்ப‌ட்ட‌து. அதில் உள்ள‌ செய்திக‌ளைத் தெரிந்து கொள்வ‌த‌ற்கு யூத‌ர்க‌ளும்,முஸ்லிம்க‌ளும் ஆர்வ‌ம் காட்டின‌ர்.அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த‌ ம‌ன்ன‌ர் ஹூசைன் “அந்த‌ச் சாச‌ன‌ச் சுருள்க‌ள் முஸ்லிம்,யூத‌, கிருத்தவ‌ர்க‌ள் அட‌ங்கிய‌ ஒரு குழுவிட‌ம் பொதுவாக‌ ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டு அவை ஆராய‌ப்ப‌ட‌வேண்டுமென‌” என்று விண்ண‌ப்பித்தார்.
ஆனால் கிருத்த‌வ‌ப் பாதிரியார்க‌ள் “அது த‌னியார் சொத்து”என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க‌ ம‌றுத்துவிட்ட‌ன‌ர்.கிருத்த‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ அறிஞ‌ர்க‌ளுக்கும் கூட‌ அவ‌ற்றைப் ப‌டிப்ப‌த‌ற்கு ச‌ந்த‌ர்ப்ப‌ம் அளிக்க‌ப்ப‌ட‌வில்லை.
இடைப்ப‌ட்ட‌ ஐந்தாண்டு கால‌ங்க‌ளில் ஜெரூஸ‌ல‌த்தில் இருந்த‌ பாதிரிமார்க‌ள் சில‌ குழுக்க‌ளை ஏற்ப‌டுத்தி “கும்ரான்”ம‌லைப்ப‌குதிக‌ளில் இருந்த‌ பொதுங்குக‌ளில் தேடிய‌லைந்து அங்கிருந்த‌ சாச‌ன‌ச் சுருள்க‌ள் அனைத்தையும் த‌ங்க‌ள் கைவ‌ச‌ம் கொண்டு வ‌ந்து விட்ட‌ன‌ர்.
1952 ஆம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் மாத‌ம் அனைத்துச் சுருள்க‌ளும் கிறித்த‌வ‌ப் பாதிரிமார்களி‌ட‌ம் போய்ச் சேர்ந்து விட்ட‌ன‌.ப‌தினைந்தாயிர‌ம் Manuscripts (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்கள் அடங்கிய செய்திகளை,ஒரு குறிப்பிட்ட பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது.பல கிருத்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிபதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம் அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
சாசனச் சுருள்களை கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்கு பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேரொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு,அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன.இந்த இரகசியக் காப்பில் “வத்திகான் சபை” முன்ன‌ணியில் இருந்தது.
தோலில் பதிந்த அந்தப் பலங்காலச் சாசனம் அழிந்துவிடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை microfilm (நுண்ணிய படச்சுருள்)எடுத்தார்கள்.அதன் ஒரு செட் போட்டோ கொப்பிகள் அமெரிக்காவில் உள்ள “லொஸ் ஏஞ்சல்ஸ்” நகரிலிருக்கும் ஒரு நூலகத்திற்கு பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
1990ம் ஆண்டு அந்த நூலகத்திற்குத் தலைவராக “ஐஸ்மன்” என்ற அறிஞர் நியமிக்கப்பட்டார்.அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி,அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.
இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்திலிருந்து நுண்ணிய போட்டோக்களை பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்கு மூலம் அளிக்கின்றார்.இத்தனை காலமும் கிருத்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.
“மைக்கேல் வைஸ்” என்னும் சிகாகோ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ ஹிப்ரு மொழிப் பேராசிரிய‌ர் ஒருவ‌ரின் உத‌வியைக் கொண்டு அந்த‌ சாச‌ன‌ச் சுருள்க‌ளில் முக்கிய‌மான‌து என்று அவ‌ர் க‌ருதிய‌ 100 manuscripts (கையெழுத்துப் பிரதி)களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.
அந்தப் புத்தக வெளியீடு கிருஸ்தவ உலகத்தை உலுக்கியது என்றும்,குறிப்பாக கிருஸ்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்மென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.
மேற்கத்தய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவிலை என்றும்,அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்மென்டரி பதிவு செய்து காட்டுகின்றது.
கிருஸ்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச் சடங்குகளும்,வழிபாடுகளும் ஆரம்ப கிருஸ்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.
இந்த‌ச் ச‌ட‌ங்குக‌ளுக்கும் ஏசுவின் பிர‌ச்சார‌த்திற்கும்,கொள்கை கோட்பாடுக‌ளுக்கும் எந்தச் ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.அவை அனைத்தும் “ப‌வுல்”என்ப‌வ‌ரால் பிற்கால‌த்தில் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌வை.
மொத்த‌த்தில் இப்போது ஏசுவின் பெய‌ரால் சொல்ல‌ப்ப‌டும் அனைத்துக் கிருஸ்த‌வ‌க் கொள்கைக‌ளும் பொய்யான‌வை.அவ‌ற்றை ஏசுவின் அடுத்த‌ த‌லைமுறையில் வாழ்ந்த‌ உண்மையாள‌ர்க‌ளின் வாழ்வில் காண‌முடிய‌வில்லை.
மேற்க‌ண்ட‌வாறு அறிஞ‌ர்”ஐஸ்மேன்”கூறிவ‌ரும் போது,ஒரு யூத‌ரிட‌ம் அவ‌ற்ரைப் ப‌ற்றி வாத‌ம் செய்யும் போது “it confirms quran” அது குர்ஆனை உறுதிப்படுத்திகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்.அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப்படுகின்றது.
இதே முறையில் “மைக்கேல் வைஸ்” என்ற அறிஞரும் பேசும் போது “it confirms islam” அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகின்றார்.இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.
ஆகவே இந்தச் சாசனச் சுருள்கள் எப்படிக் குர்ஆனையும்,இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப்பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.
அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்
ஈஸா(அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது.ஆனால் கிருஸ்தவ‌ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை என‌லாம்.
ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.
பைபிளின் பல இடங்களில் “ராஜ்ஜியத்தின் சுவிஷேச‌த்தை இயேசு பிரசங்கித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
எந்த இறை வேதத்தை மறைத்தார்களோ அதைத்தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப்போதுமான காரணம் இருக்கிறது.
“குர்ஆனை ஒத்திருக்கின்றது” என்பதுதான் அந்தச் சுருள்களைப் படித்த கிருஸ்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
இஞ்ஜீல் எனும் வேதத்தைக் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாகத் திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.
அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.
மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்கமாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
எனவே உலகுக்கு நேர்வழிகாட்ட வந்த இறைவேதமாகிய திருமறைக் குர்ஆனை பொய்பிப்பதிலும்,உரக்கச்சொல்லப்படவேண்டிய உண்மைகளை மறைப்பதிலும் கைதேர்ந்தவர்களே அசத்தியத்தில் வாழும் இன்றய கிருஸ்தவர்கள் என்பதனை நாம் நன்கு உணரலாம்.
நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்.

http://dharulathar.com/2008/04/24/669/

Saturday, September 20, 2008

அயோத்தி : ராம ஜென்ம பூமியா? கிரிமனல் சாமியார்களின் கூடாராமா?

சங்கர மட முதலாளி ஜெயேந்திரன், அடியாள் கும்பலுக்குப் பணம் கொடுத்து சங்கரராமனைப் போட்டுத்தள்ளிய வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. கொலைகாரர்களோடு நெருங்கிப் பழகிய ஜெயேந்திரன் மிச்ச நேரங்களில் சினிமா பக்தைகளுடன் ஆன்மிகத்தை ஆய்வு செய்வதும், அதுவும் போக மேல்மட்டத் தகராறுகளை தீர்க்கும் மேல்கட்டை பஞ்சாயத்தையும் செய்து வந்தார். இந்த ஆன்மீக அவஸ்தைகளைத்தான் ரவுடிகளும் செய்து வருகின்றனர் என்றாலும், அவர்களுக்கு ஜெயேந்திரர் கையில் வைத்திருப்பது போன்ற தண்டமும், லோகக் குரு என்ற புனிதப் பட்டமும் கிடையாது.
இருந்தாலும், அவாள்களைப் பொருத்தவரை, சங்கர மடம் என்பது என்னதான் கிரிமினல் வேலை செய்து வந்தாலும் புனிதத்தை இழக்கக்கூடாது; ஏதாவது செய்து அந்தப் புனிதத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பதில் குறியாயிருக்கிறார்கள்.
இராமன் பிறந்த அயோத்தியில் இந்த ஜோடனைகள் எதுவுமில்லை. அங்கே மடங்களும் மாஃபியாக்களும் வேறுபடுவதில்லை என்றால் உங்களுக்குச் சற்று ஆச்சரியமாயிருக்கலாம். எனினும் உண்மை அதுதான். அயோத்தி நகரில் மட்டும் 8,000த்திற்கும் மேலும், பீகாரில் 7,000த்திற்கு அதிகமாகவும் மடங்கள் உள்ளன. பெட்டிக்கடைகளை விட மடங்கள் அங்கே அதிகமாக இருப்பதன் காரணம், இந்தியா முழுவதிலிருந்தும் வரும் சுற்றுலா பக்தர்களை வைத்து அங்கே விரவியிருக்கும் பக்தித் தொழில்தான். பாபர் மசூதியை இடித்து இராமனுக்கு கோவில் கட்டப்போவதாக சங்க வானரங்கள் ஊர் ஊராக ஓதியிருப்பதால், அயோத்தி '90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமாகிவிட்டது. அங்கு இருக்கும் மடங்களில் மட்டும் 40,000 மடாதிபதிகள், சாமியார்கள் மற்றும் பூசாரிகள் வேலை வெட்டியில்லாமல், நெய்ச் சோறோ, நெய் சப்பாத்தியோ தின்றுவிட்டுக் காலம் தள்ளுகிறார்கள். இவ்வளவு சாமியார்கள் இருப்பதால் அங்கே எங்கு பார்த்தாலும் ஆன்மீகம் கமழுமென்றுதான் பக்தகோடிகள் எதிர்பார்ப்பார்கள்.
சுற்றுலா பக்தர்கள் கொட்டும் பணம் எனும் லவுகீகம் உப்புச்சப்பற்ற அந்த ஆன்மீகத்தைக் கொள்ளை கொண்டுவிட்டபடியால், அயோத்தி சாமியார்களுக்கிடையே குழாயடிச் சண்டையல்ல, கொலைவெறிச் சண்டையே நடக்கிறது. சாமியார்களில் பீகாரிலிருந்து வந்த பார்ப்பன மற்றும் பூமிகார் மேல்சாதியைச் சேர்ந்த சாமியார்கள் மற்றும் மடாதிபதிகள் 25,000 பேர் இருக்கின்றனர். பீகாரைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காக இந்தியா முழுவதும் நாடோடிகளாக அலையும் போது, பார்ப்பன மேல்சாதி தொந்திகள் மட்டும் அயோத்தியில் நோகாமல் கல்லா கட்டி காலம் தள்ளுகின்றனர்.
திருவாடுதுறையின் முன்னாள் சின்ன ஆதீனம் தன்னைக் கொல்ல முயன்றதாக தற்போதைய பெரிய ஆதீனம் குற்றம் சாட்டியிருந்த கதையெல்லாம் அயோத்தியைப் பொருத்தவரை ஒன்றுமேயில்லை. அங்கே மடங்களின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கு பீகாரிலிருந்து அடியாள் கும்பல்கள் மடாதிபதிகளால் வரவழைக்கப்படுகின்றன. போலீசின் பதிவுப்படி கடந்த பத்தாண்டுகளில் உ.பி. மற்றும் பீகார் மாநிலத்தில் மட்டும் இந்த சொத்துப் பிரச்சினைகளுக்காக நடந்த மோதலில் 150 மடாதிபதிகள் அல்லது சாமியார்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது ஒன்றும் ஐ.எஸ்.ஐ.யோ, லஷ்கர்இதொய்பாவோ செய்த சதியல்ல. காவி உடுத்திய சாதுக்கள் தங்களுக்கிடையே நடத்திய பச்சைக் கொலைகள். அயோத்தியில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் 20 சாமியார்கள் சக சாமியார்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இராம ஜென்ம பூமிக்கே இதுதான் கதியெனும்போது, இந்தியா முழுவதும் இராமராஜ்ஜியம் வந்தால் நம் கதி?
அயோத்தி நகரில் மட்டும் எல்லாம் வல்ல இறைவனை நம்ப முற்றும் துறந்திருக்கவேண்டிய இம்முனிவர்களில் 350 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கிறார்களாம். ஒரு கையில் தண்டம், மறுகையில் துப்பாக்கி! முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் உ.பி.மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்த சமயத்தில், பைசலாபாத் மாவட்ட நிர்வாகம் குற்றப் பின்னணி உள்ளோரின் பட்டியலைத் தயாரித்த போது, அதில் இடம்பெற்ற அயோத்தி சாமியார்களின் எண்ணிக்கை 86! குற்றங்களைச் செய்து விட்டு மடங்களில் புகுந்துவிட்டால் போலீசு வரமுடியாது என்ற நிலைமையே இதன் பின்னணி. அப்படி போலீசு புகுந்து சிதம்பரத்தில் தீட்சிதர்களைக் கொத்துக் கொத்தாக தூக்கியது போல செய்தால், விசுவ ஹிந்து பரிஷத் உடனே இந்து மதத்திற்கு வந்த அநீதி என்று களமிறங்கிவிடும். எனவே, சாதா ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் போலீசு, சாமியார் ரவுடிகளைக் கைது செய்யவே அஞ்சுகிறது!
ஆர்.எஸ்.எஸ்இன் இராம ஜென்ம பூமி இயக்கத்தால் இந்து மதவெறியர்களுக்குக் கிடைத்த அரசியல் ஆதாயத்திற்கு நிகரான செல்வாக்கை, இந்தக் கிரிமினல் சாமியார்களும் பெற்றிருப்பதால் மாவட்ட நிர்வாகம் மடங்களுக்குள் நுழைவதற்குத் தயங்குகிறது. சமீபத்தில் அப்படி ஒரு கிரிமினல் சாமியார் கும்பலைத் தேடி உ.பி.மாநில அதிரடைப்படை நுழைந்த போது இந்து மதவெறியர்கள் எதிர்த்தார்கள். அதிரடிப் படையே தேடுமளவுக்கு அந்தக் கும்பல் என்ன குற்றம் செய்தது? கோண்டா ஊரில் உள்ள ஒரு கிராம வங்கியில் பத்து இலட்சம் ரூபாயை மடாதிபதி அருண் சாது கும்பல் கொள்ளையடித்துவிட்டு மடங்களில் தஞ்சம் அடைந்திருக்கிறது. இதே கும்பல் மிரட்டிப் பணம் பறிப்பதும், முக்கிய நபர்களைப் பிணையக் கைதிகளாகக் கடத்திப் பணம் பறித்து வந்ததும் தற்போது அம்பலமாயிருக்கிறது. கோவில் நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்கு பிற மடாதிபதிக் கும்பல்களுடன் இந்த அருண் சாது கும்பல் அயோத்தியில் நடத்திய சண்டைகள் அங்கே பிரபலம்.
இந்தச் சொத்துப் பிரச்சினைகளுக்காக சாமியார் கும்பல்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும், குண்டு வீசிக் கொள்வதும் நிறைய நடந்திருக்கின்றன. பல கோவில் பூசாரிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அயோத்தியில் இந்தச் சண்டைகள் முடிவின்றி நடைபெறுகின்றன. அந்த வட்டாரத்தில் நடைபெறும் குற்றங்களின் மையமாக அயோத்தி மடங்கள் இருக்கின்றன. பல மடாதிபதிகள் பீகாரிலிருந்து அடியாட்களை வரவழைத்து மடங்களில் நிரந்தரமாக வைத்துக் கொள்வதும், பின்னர் தொழில்முறைக் குற்றங்களைச் செய்து பணம் சம்பாதிப்பதையும் தொழிலாகச் செய்து வருகின்றனர். சியாம் மஹாராஜ் எனும் மடாதிபதியின் கும்பல் கான்பூர் தொழிலதிபர் ரவீந்தர் கேடியாவை கடத்தி 18 இலட்சம் பெற்றுக் கொண்டே விடுவித்திருக்கிறது.
இவையெல்லாம் போக இராம ஜன்மபூமி ட்ரஸ்ட்டின் தலைவரான இராம் விலாஸ் வேதாந்தியைப் பற்றி புதிய ஜனநாயகத்தில் முன்னர் எழுதியிருந்தோம். சேது சமுத்திரப் பிரச் சினைக்காக கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்ன இவர்தான், முசுலீம்களுக்கு எதிரான துவேசத்தைப் பிளறுவதில் பிரபலமானதோடு ஹவாலா மோசடிகளுக்கும் பெயர் பெற்றவர். இவர் சில்லறைச் சாமியார் இல்லையென்பதால், மேல்மட்ட அளவில் முதலாளிகளின் கருப்புக் கோடிகளை வெள்ளையாக மாற்றுவது முதலான சேவைகளைப் பக்த கோடிகளுக்கு கச்சிதமாக செய்து வருகிறார்.
அயோத்தியின் கிரிமினல் புராணம் இதுதான். இந்தச் சாமியார்களை வைத்துதான் விஸ்வ இந்து பரிஷத் தர்மசன்சாத் எனும் மடாதிபதிகளின் பேரவையைக் கூட்டி பாபர் மசூதி இடிப்பு முதலான அக்கிரமங்களுக்கு நாள் குறிக்கிறது. காசு பணத்துக்காகத் தங்களுக்குள்ளேயே இரத்தக் கவிச்சியோடு கொலை செய்யும் இவர்கள்தான் இந்து மதவெறியைக் கிளப்புவதையும், முசுலீம் மக்களை வன்மம் கொண்டு மிரட்டுவதையும் செய்கிறார்கள் என்பது முக்கியமானது. வன்முறையும், துவேசமும், வெறியும் இவர்களது தொழிலிலும், இரத்தத்திலும் கலந்திருக்கிறது. இந்த காவிக் கயவர்களைத்தான் இந்து தர்மத்தின் இரட்சகர்களாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன்னிறுத்துகிறது. சாதியக் கொடுங்கோன்மையை ஆன்மாவாக வரித்திருக்கும் இந்து தர்மத்திற்கு இந்த ஆன்மீக அடியாட்கள் பொருத்தமாகத்தான் இருக்கிறார்கள்.
வட இந்திய சாமியார்கள் என்றால் ஏதோ கஞ்சாவைப் புகைத்துக் கொண்டு, அரைமுக்கால் நிர்வாணத்தில் ஜடா முடியோடு அலைபவர்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சாதா ரவுடிகளையாவது சட்டென்று அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆனால் காவி ரவுடிகள், மடத்துப் பெருச்சாளிகளாக ஊர் சொத்தைக் கொள்ளையடிப்பதை அவ்வளவு சுலபத்தில் அடையாளம் காண முடியாது. எனினும் அயோத்தி புராணம் காவித் திரையை விலக்கி, மடாதிபதிகள் என்று அழைக்கப்படும் ரவுடிகளைத் தெளிவான விசுவரூப தரிசனமாகக் காட்டுகிறது. பக்த கோடிகள் முட்டாள்தனமாக கன்னத்தில் போட்டுக்கொள்ளாமல் கம்பை எடுத்தால் அயோத்தி முதல் காஞ்சி வரை அலப்பரை செய்யும் ஆன்மீக ரவுடிகளை ஒழித்துக் கட்டலாம்.
• பச்சையப்பன்
நன்றி: http://www.tamilcir cle.net/index. php?option= com_content&view=article&id=3643:2008- 09-06-19- 13-09&catid=68:2008&Itemid=30

Friday, September 12, 2008

1 Common Misconceptions about Zakaah

Bismillah Walhamdulillah Was Salaatu Was Salaam 'ala Rasulillah

As-Salaam Alaikum Wa-Rahmatullahi Wa-Barakatuhu

21 Common Misconceptions about Zakaah
by Asma bint Shameem

Misconception # 1
I pray, don't I? What’s the big deal if I don't give Zakaah?

Zakaah is one of the PILLARS of Islam and NOT an option. It is just as important to ones faith as Salaah. In fact, anyone who denies it is a Kaafir and the Prophet (pbuh) and his Sahaba waged war against such persons even though they uttered the Shahadah and prayed Salaah.
About such people Abu Bakr said: "By God! I shall certainly wage war against the people who discriminate between Salaah and Zakaah." (Bukhaari, Muslim)

Misconception # 2:
But it will decrease my wealth!

Abu Hurayra said that the Prophet (pbuh) said, "Whoever is given wealth by Allaah and does not pay the Zakaah due thereupon shall find that on the Day of Arising it is made to appear to him as a hairless snake with two black specks, which chains him, and then seizes him by his jaw and says, 'I am your wealth! I am your treasure!'" Then he recited the verse, 'Let not those who are miserly with what God has given them of His bounty think that this is good for them. Rather, it is bad for them. That which they withhold shall be hung around their necks on the Day of Arising.' [3:180] (Bukhaari)

Misconception #3:
I don't have to pay Zakaah every year.

Zakaah is an obligation that must be paid each year. The Prophet (pbuh) used to send the zakaah-collectors to the tribes and cities, and they did not differentiate between those who had paid their zakaah the previous year and those who had not, rather they used to take the zakaah that was due on all the “zakaatable” wealth that people possessed.

Misconception # 4:
I never paid Zakaah before. I will just repent and that should be enough

The one who never paid Zakaah before should repent to Allaah first. Then he should estimate the amount of Zakaah that was due on him over the years as best he can, and pay it as soon as possible.

Misconception # 5:
I dont have to pay Zakaah if I owe a debt

The one who has any “zakatable” wealth must pay zakaah on it, when one year has passed since he acquired it, even if he has debts, according to the more correct of the two scholarly opinions. The Prophet (pbuh) used to command his agents to take zakaah from those who owed zakaah, and he did not tell them to ask them whether they had any debts or not. (Majmoo’ Fataawa -Abd al-‘Azeez ibn Baaz)

Misconception # 6:
I will waive my debt and count that as Zakaah

The Prophet (pbuh) said to Muaadh ibn Jabal, when he sent him to Yemen: “Teach them that Allaah has enjoined upon them zakaah on their wealth, to be taken from their rich and given to their poor.” He (pbuh) explained that zakaah is something which is to be taken and given, so on this basis it is not permissible to let off someone who owes you money and count that as zakaah, because letting someone off a debt does not involve taking and giving. (Fataawa Manaar al-Islam by Shaykh Ibn Uthaymeen)

Shaykh al-Islam said: “letting someone off a debt does not relieve one of the obligation of zakaah, and there is no scholarly dispute on this matter. But you can give this needy person some of your zakaah and he can meet his needs using what you give him as zakaah; and Allaah will help him to pay off his debt in the future, in sha Allaah.”

Misconception #7:
I have lent someone some money. I don't have to pay Zakaah on it.

In this situation, there can be two scenarios;
1. If the borrower is rich and is known to repay debts promptly: The lender has to pay Zakaah annually on the money lent, because it is possible to recover the money readily and it is like money that is in one's possession.

2. If it is unlikely that the lender will get his money back or the borrower is known to delay repayment: Then the lender does not have to pay zakaah before he gets the money back, because it is not readily accessible and is not like money that is in ones possession.

Misconception # 8:
I pay my taxes so I dont have to pay Zakaah!

The taxes we pay are to Uncle Sam/govt , not to Allaah to Whom the Zakaah is due. And this Zakaah money is to be only spent according to the rules of Shareeah in certain specific ways. Thus, it is not permissible for the taxes we pay on our wealth to be counted as part of Zakaah. The obligatory Zakaah must be paid separately.

Misconception # 9:
I will use the money that I receive from my bank as interest to pay off Zakaah

First of all, putting money in the bank in return for interest is a kind of riba which Allaah and His Messenger have forbidden, and it is a major sin. The Prophet(pbuh) cursed the one who consumes riba and the one who pays it. (Muslim)
This money cannot be used to pay Zakaah or other kinds of charity since it is impure and a haraam form of wealth.

Misconception # 10:
I will pay Zakaah on whatever is OVER the Nisaab

If ones wealth surpasses the amount of nisaab, then Zakaah is due upon it ALL, and not upon the surplus only.

Misconception #11:
Zakaah is due on precious gems, stones and diamonds

No zakaah is due on gems, precious stones, diamonds, etc. unless they are prepared for trade, in which case they come under the same ruling as all other trade goods.

Misconception # 12:
I will buy diamonds so that I don’t have to pay Zakaah

Some people try to get out of Zakaah by investing in diamonds, since no Zakaah is due on them, and think they can outsmart Allah. Doesnt Allaah know what’s in our hearts and minds? They forget that Zakaah IS due on them if they are prepared for trade. “They seek to deceive Allah and those who believe, but they deceive none except themselves, though they do not sense it.“ (Surah al-Baqarah: 9)

Misconception # 13:
The husband HAS to pay Zakaah on the wife’s jewelry and wealth

It is NOT the husband’s duty to pay Zakaah on his wife’s jewelry, wealth, etc. Rather, it is her responsibility, since she is the possessor of the wealth. If her husband or someone else pays zakaah on her behalf with her permission, that is o.k., and he will be rewarded for this voluntary action.

Misconception # 14:
I only have gold, but I do not have any money. So, I don’t have to pay Zakaah….

Shaykh Ibn Uthaymeen said:“ Zakaah must be paid on jewelry if it reaches the nisaab (minimum threshold), which is eighty-five grams. If it reaches this amount, zakaah must be paid on it. If she has other wealth and pays from that, there is nothing wrong with it. If her husband or one of her relatives pays it on her behalf, there is nothing wrong with that. If neither of these options is available to her, then she should sell some of it and pay zakaah with that money.”

Misconception # 15:
I will use my Zakaah money on my immediate family

Shaykh Ibn Baaz said: “The Muslim cannot give his zakaah to his parents or to his wife and children; rather he is obliged to spend on them from his wealth if they need that and he is able to spend on them.”

Misconception # 16:
I cannot give Zakaah to my poor relatives

It is actually preferable for a person to give their zakaah to a brother, sister, paternal uncle, paternal aunt or to any other relative, if they are poor. This is because, giving zakaah to them is both an act of charity and upholding family ties.

The Prophet (pbuh) said: “Charity given to the poor is charity and charity given to a relative is charity and upholding of family ties.” (Ahmad, al-Nasaa’i)

Misconception # 17:
A woman cannot give Zakaah to her Husband

It is okay for a woman to give zakaah to her husband, if he is qualified to receive zakaah, because she is not obliged to spend on him. Also, the Prophet (pbuh) gave permission to the wife of Abd-Allaah ibn Masood to give her zakaah to her husband
.
Misconception # 18:
Zakaah can be given to Non-Muslims if they are poor

It is not permissible to give Zakaah to any kaafir except the one who is inclined towards Islam, in the hope that he will become Muslim if you give him zakaah (al-Tawbah:60).

Misconception # 19:
I will use Zakaah to build hospitals, masaajid and orphanages

That is not permissible, because this is not included in the eight categories on which zakaah may be spent. Allaah tells us that Zakaah may be spent on the following:
“As-Sadaqaat (Zakaah) are only for the Fuqaraa (poor), and Al-Masaakeen (the poor) and those employed to collect (the funds); and to attract the hearts of those who have been inclined (towards Islam); and to free the captives; and for those in debt; and for Allaah’s Cause (Mujaahidoon — those fighting in a holy battle), and for the wayfarer (a traveler who is cut off from everything)” [al-Tawbah:60]

But if the intention in giving the money to an orphanage is so that this money will be spent on the poor orphans, then this is permissible, if the orphans are poor.
Similarly, Zakaah cannot be used to print Quraans and other Dawah material.

Misconception # 20:
Zakaah is the same as Zakaat ul-Fitr

Zakaat al-Fitr is NOT the same as Zakaah. These are two separate entities and whoever paid Zakaah is NOT relieved of paying Zakaat al-Fitr and vice-versa.

Misconception # 21:
I have to inform the one I am giving, that it is Zakaah

You do not have to tell the recipient that it is zakaah.

Courtesy:loveislam_liveislam@yahoogroups.com

Saturday, September 6, 2008

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

இறைத்தூதர் அவர்களை அவமதித்த சங்தினமலரை தடைசெய்து இந்தியாவின் இறையான்மையை காக்க அரசு முன்வரவேண்டும்.

எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்த சங்பரிவார தினமலரை அரசு தடை செய்ய வேண்டும்.
அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ள சங்பரிவாரத்தின் ஊடகமான தினமலரை அரசு தடைசெய்வதுடன் கேளிச்சித்திரத்தை வெளியிடுவது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பும் என்று தெரிந்திருந்தும் முஸ்லிம்களுக்கெதிராக போர்ப்பிரகடணம் செய்துள்ள அதன் ஆசிரியர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து இந்திய நாட்டின் இறையாமையை காக்க அரசு முன்வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.
இறைத்தூதர் முஹமது நபி (ஸல்) அவர்களைப் பற்றி டென்மார்க் பத்திரிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கார்டூன்களை வெளியிட்டடது. அதைத் தொடர்ந்து உலகம் முழுதும் பலத்த கண்டனக்குரல்களும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் மீண்டும் தினமலர் நாளிதழின் வேலூர் பதிப்பில் இலவச இணைப்பாக வெளிவருகின்ற கம்ப்யூட்டர் இதழ். இணையதளம் ஒன்றில் பிரசுரமாகியிருந்த முஹமது நபிகள் குறித்த கார்ட்டூனை அந்த “தினமலர் கம்ப்யூட்டர்’’ 02/09/08 இதழில் பிரசுரமாக்கப்பட்டிருந்தது.
உலகமுழுதும் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பிய செய்தியை மீண்டும் தினமலர் பிரசுரித்திருப்பதின் மூலம் முஸ்லிம்களை குறிப்பாக தமிழக முஸ்லிம்களை வம்புக்கிழுத்துள்ளது இந்த சங்கபரிவார தினமலர்.
புனித ரமலான் மாதத்தின் ஆரம்பத்தில் இவ்வாறன கேளிச்சித்திரத்தை வெளியிடுவது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பும் என்று தெரிந்திருந்தும் எங்களின் உயிரின் மேலான இறைத்தூதர் அவர்களின் கேளிச்சித்திரத்தை வெளியிட்டுள்ள தினமலர் முஸ்லிம்களுக்கு எதிராக போர்பிரகடனம் செய்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ள சங்பரிவாரத்தின் ஊடகமான தினமலரை அரசு தடை செய்வதுடன் முஸ்லிம்களின் உயிரின் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கேளிச் சித்திரத்தை வெளியிட்டு சமூக கொத்தளிப்பு ஏற்படுத்திய அதன் ஆசிரியர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து இந்திய நாட்டின் இறையாமையை காக்க வேண்டுமென்று ‍அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோ
Thanks: Hussainghani

Sunday, August 31, 2008

An interview with Ajit Sahi of "SIMI fictions" fame

Ajit Sahi, a journalist with the weekly Tehelka, recently created a storm with his investigation of cases of scores of innocent Muslims languishing in jails falsely accused by the police of being members of the outlawed Students' Islamic Movement of India (SIMI) and of being behind a string of bomb blasts and other terror acts across India.
In a series of articles recently published in Tehelka he has exposed the lies of the police and argues that this is part of a premeditated campaign to wrongly implicate and harass Muslim youths and demonise the Muslim community. In this interview with Yoginder Sikand he talks about his investigations and startling revelations.
Q: What made you take up the issue of SIMI activists and those accused of being associated with the banned group ?
A: For some years now, the Indian media has been awash with stories about the SIMI being allegedly behind a spate of bomb blasts across India. It's like SIMI here, SIMI there, SIMI everywhere. I have been working with Tehelka for just six months now but I have been a journalist for over two decades, starting with the Indian Express , and that has taught me to distrust the stories put out by the police, by the administration, by the government. Governments lie, and this is irrespective of whether they are formally democratic or dictatorial. It's in their DNA, as it were. So, when the police continued coming out with stories about SIMI activists being involved in all these bomb blasts, my first, instinctual response was to smell a rat. I knew these stories had to be questioned because what the media was reporting was essentially based on what was being dished out by the police and the intelligence agencies.
So, the first thing I did was to contact a Delhi-based lawyer who was defending SIMI in the courts. From him I got the basic facts of the case, of the various charges of the government against SIMI. The government banned SIMI on what it said were urgent grounds, but these were only vague allegations, not on any solid proof. To take one bizarre instance: The background note accompanying the ban notification on SIMI says that one of the reasons for the ban is that among SIMI's stated purposes is the propagation of Islam! How can that be cited as a ground for banning an organisation? Surely, the Constitution of India provides every religious group, including Muslims, the right to propagate its faith.
The situation is really Kafkaesque. The law has it that the ban on any banned organisation can be challenged in a tribunal but then, it adds, only an office-bearer or member of the said banned organisation can do so. But the same law says that a member of a banned organisation can be liable for up to three years' imprisonment! So, then, how can the ban be at all contested? This struck me as bizarre, and so I decided to go further into the issue, particularly since almost all other media persons were simply toeing the government's and the police's line. And my investigations showed that scores of innocent Muslim youth have been picked up by the police and wrongly accused of being terrorists. This menacing trend continues unabated.
Q: So, then, what did you do next?
A: I travelled along with the members of the Tribunal dealing with the ban on SIMI, and from the end of May till the middle of July this year I visited numerous places, including Trivandrum, Bangalore, Hyderabad, Chennai, Udaipur, Bhopal, Aurangabad, and Mumbai—places which the Tribunal was visiting. In addition, I went on my own to Bhiwandi and Ahmedabad, and met a number of former SIMI activists. Meeting people in all these places and going deeper into the facts of the case, I realised that scores of innocent Muslims were being wrongly and grossly unfairly framed by the police and the state apparatus for being allegedly behind various bomb blasts. Under Indian law, you are presumed innocent until you are proven guilty, but this principle has been completely violated in the case of these people, in the case of hundreds of innocent Muslims who have been picked up by the police and tortured by them and forced to make false confessions. In not a single case has it so far been conclusively proven that SIMI activists have been involved in terrorist offences. There is no merit in any of these cases.
As I said, I discovered to my horror that the charges against these innocent Muslim youth were based on confessions before the police, and we all know how these confessions are made. There is routine torture of the most barbaric kind, forcing the detainees to admit to the false accusations against them. According to the Indian Evidence Act, enacted by the British over a hundred years ago, no confession given to the police can be even presented to the court, let alone be used as evidence. The British knew that the police would resort to torture to force people to confess to crimes they had not committed and so made this law to prevent this sort of thing. But this is precisely what is happening in these cases. No other proof is being presented. According to the law, only confession made before a magistrate can be accepted, but in these cases months go by without the accused being presented before the courts, during which they are routinely tortured by the police and generally falsely implicated.
Q: How do you see this wave of arrests of Muslim youth across the country? How do you explain it?
A: Obviously the intention is to further reinforce hatred against Muslims, to justify the denial to the community of its dignity, of its right to exist with respect.
Q: Who, then, do you think the real culprits are?
A: Look at the record of the past fifty years. The police have killed scores of innocent people, wrongly branding them as terrorists.
Q: What you say about many of the implicated Muslim youth, including some former SIMI activists and members, might be true. But, surely, you would agree, the SIMI's pan-Islamist ideology, its call for a global Caliphate, its radical rhetoric and so on, are problematic, to say the least?
A: The Constitution of India allows for groups to be pan-Islamic, pan-Christian or pan-Hindu or whatever. That itself is not a criminal offence. I am a Hindu. I believe that the Gita is a divine revelation, and I regard it as superior to the Indian Constitution, which is a human creation. Am I not within my rights to say that what I believe to be God's word is superior to man's word? Can you send me to jail for that? The same holds true for Muslims or others. I believe that Hindus and Muslims are the eyes of India, without either of them India will die. Much though the Indian elites want a homogenised India created in their image, India will die the day that happens. I'll never become a Muslim myself. I'll die a Hindu. But, still, it is my belief as a Hindu that Hindus and Muslims are equally my brethren. As a Hindu, I believe that my religion, my dharma, commands me to stand by the truth, by my Muslim brethren against whom vicious canards are being spread and who are being unfairly targeted by the police and the state as 'terrorists'.
I am not a social activist. I am just a simple journalist. Doing these investigations into the SIMI affair and exposing the heaps of lies of the police and the state about the blasts and the arrested persons has made me feel purposeful as never before. I am 42 now, and so far I have been chasing money and highly-paid jobs. But now, after going through all this in the course of the investigations I have been doing into charges against innocent Muslims, I have more clarity as to my purpose in life.
Q: And what is that?
A: It's the purpose that every decent journalist should have: to investigate the truth. I have to speak out the truth and expose the lies that the government and its agents are so blatantly spreading.
Q: As you rightly point out, literally hundreds of Muslims are being wrongly branded as terrorists and arrested indiscriminately across the country for terror acts that might actually have been done by other agencies or groups. In such a situation, what hope is there for justice?
A: Things have become so bad now that even hope from the courts seems unlikely. Many judges are extremely communal and heavily prejudiced against Muslims. I don't think we can expect anything from the judiciary. There's this magistrate in Bangalore whom I interviewed who says that because one person who was nabbed had a dollar on him he has international links! Can you imagine!? It is easy to wake up a sleeping person, but almost impossible to do that to someone who is awake. Going by how things presently are, I don't think Muslims can expect justice from the government or the police either.
At this critical juncture, I think it is vital that Muslims do not lose courage. I think the only way is to stand up against this wave of oppression and engage in non-violent resistance against oppression. History shows that the oppressed have always stood up to injustice and Muslims will, and must, do that, in solidarity with people of other faiths, like myself, who are extremely concerned about what's happening.

http://www.TwoCircl es.net
________________________________________
Link:
http://www.tehelka.com/home/20080816/