Wednesday, September 24, 2008

கிருஸ்தவ உலகு திட்டமிட்டு மறைத்த பேருண்மை!அதிர்ச்சி தரும் உண்மைத் தகவல்!

கிருஸ்தவ உலகு திட்டமிட்டு மறைத்த பேருண்மை!அதிர்ச்சி தரும் உண்மைத் தகவல்!
அன்புக்குரியவர்களே!
கடந்தகாலங்களில் கிருஸ்தவப் பாதிரிகளால் ச‌ர்வதேச உலகுக்கு,திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஓர் உண்மையையே இங்கு வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றோம். அல்லாஹுத்தஆலா தனது அருள்மறையில் 18ம் அத்தியாயம் 9ம் வசனத்தில்
” அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்” என்று நீர் நினைக்கிறீரா? எனக் கேட்கிறான்.
இந்த வசனத்தில் (திருக்குர்ஆன்18:9) குகையில் தங்கியவர்கள் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும்.அத்துடன் குகைவாசிகள் மற்றும் ஏட்டுக்குரியோர் (சுவடிக்கு உரியவர்கள்)என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது.
“அந்த ஏடு”என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும். அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே “அந்த ஏட்டுக்குரியவர்கள்” என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் “அந்த ஏடு” என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை.ஆனால் ச‌மீப‌ கால‌ங்க‌ளில் அந்த ஏடுக‌ளில் இருந்த‌ செய்திக‌ள் இப்போது அம்ப‌ல‌மாகியுள்ள‌ன‌.
“சாவுக்க‌ட‌ல் சாச‌ன‌ச் சுருள்க‌ள்” என்ற‌ த‌லைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் ப‌ல‌ தட‌வை BBC யில் ஒரு ம‌ணி நேர‌த்திற்கு ஒரு நிக‌ழ்ச்சி ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து.அதில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ செய்திக‌ள் கேட்போர் அனைவரையும் விய‌ப்பில் ஆழ்த்துவ‌தாக‌ இருந்த‌து.இந்த‌ நிக‌ழ்ச்சியின் முத‌ல் ஒளிப‌ர‌ப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்ட‌ப்ப‌ட்ட‌தாக‌வும் சொல்ல‌ப்ப‌ட்ட‌து.அத‌ன் விப‌ர‌ங்க‌ள்:
1947 ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அர‌புச் சிறுவ‌ன் காணாம‌ல் போன‌ த‌ன‌து ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்க‌ட‌லை ஒட்டிய‌ ஜோர்டான் நாட்டு ம‌லைப் ப‌குதிக‌ளில் தேடி அலைந்தான்.அந்த‌ ம‌லைப்ப‌குதி “கும்ரான் மலைப்ப‌குதி”என‌ அழைக்க‌ப்ப‌டுகின்ற‌து.
ஆட்டுக்குட்டியைத் தேடிய‌ சிறுவ‌ன் அங்கிருந்த‌ குகைக்குள் பார்த்த‌ போது ம‌ண் பாண்ட‌ங்க‌ளில் சுருட்டி நிற‌ப்பி வைக்க‌ப்ப‌ட்ட‌ தோல் ஆவண‌ங்க‌ளைக் க‌ண்டிருக்கிறான்.அவைக‌ளில் சில‌வ‌ற்றை எடுத்து வ‌ந்து செருப்புத் தொழிலாளியான‌ த‌ன் த‌ந்தையிட‌ம் கொடுக்க‌,ம‌றுநாள் த‌ந்தையும் ம‌க‌னும் சேர்ந்து குகைக்குள் இருந்த‌ அனைத்துச் சுருள்க‌ளையும் வீட்டுக்குக் கொண்டுவ‌ந்து சேர்த்தார்க‌ள்.
அந்த‌ப் ப‌ழைய‌ தோல்க‌ளைத் த‌ம‌து செருப்புத் தொழிலுக்குப் ப‌ய‌ன்ப‌டுத்த‌ எண்னிய‌ அந்தச் சிறுவ‌னின் த‌ந்தை தோல்க‌ளில் ஹிப்ரு மொழியில் எழுத‌ப்ப‌ட்டிருந்த‌ வார்த்தைக‌ளின் பொருள் புரியாம‌ல்,அதை அப்போது ஜோர்டான் ம‌ன்ன‌ர் ஆட்சியிருந்த‌ கிழ‌க்கு ஜெரூஸ‌ல‌தைச் சேர்ந்த‌ ஒரு ப‌ழைய‌ புத்த‌க‌க் க‌டைக்கார‌ரிட‌ம் காண்பித்திருக்கிறார்.
ஓர‌ள‌வு ஹிப்ரூ மொழிய‌றிந்த‌ அந்த‌க் க‌டைக்கார‌ர் அந்த‌ச் சுருள்க‌ள் ப‌ழ‌ங்கால‌ச் செய்திக‌ளை கொண்ட‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்று க‌ருதி ஒரு சில‌ தீனார்க‌ளுக்கு அத்த‌னை சுருள்க‌ளையும் அந்த‌ச் செருப்புத் தொழிலாளியிட‌மிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.
கிருத்த‌வ‌ரான‌ அந்த‌ப் புத்த‌க‌க் க‌டைக்காரர் அந்த‌ச் சுருள்க‌ளை அந்ந‌க‌ரில் இருந்த‌ கிருத்த‌வ‌ ஆல‌ய‌த்தில் ஒப்ப‌டைத்துவிட்டார்.இந்த ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் சுருள்க‌ள் க‌ண்டெடுக்க‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம் வெளிப்ப‌ட்ட‌து. அதில் உள்ள‌ செய்திக‌ளைத் தெரிந்து கொள்வ‌த‌ற்கு யூத‌ர்க‌ளும்,முஸ்லிம்க‌ளும் ஆர்வ‌ம் காட்டின‌ர்.அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த‌ ம‌ன்ன‌ர் ஹூசைன் “அந்த‌ச் சாச‌ன‌ச் சுருள்க‌ள் முஸ்லிம்,யூத‌, கிருத்தவ‌ர்க‌ள் அட‌ங்கிய‌ ஒரு குழுவிட‌ம் பொதுவாக‌ ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டு அவை ஆராய‌ப்ப‌ட‌வேண்டுமென‌” என்று விண்ண‌ப்பித்தார்.
ஆனால் கிருத்த‌வ‌ப் பாதிரியார்க‌ள் “அது த‌னியார் சொத்து”என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க‌ ம‌றுத்துவிட்ட‌ன‌ர்.கிருத்த‌வ‌ர்க‌ளில் ப‌ல‌ அறிஞ‌ர்க‌ளுக்கும் கூட‌ அவ‌ற்றைப் ப‌டிப்ப‌த‌ற்கு ச‌ந்த‌ர்ப்ப‌ம் அளிக்க‌ப்ப‌ட‌வில்லை.
இடைப்ப‌ட்ட‌ ஐந்தாண்டு கால‌ங்க‌ளில் ஜெரூஸ‌ல‌த்தில் இருந்த‌ பாதிரிமார்க‌ள் சில‌ குழுக்க‌ளை ஏற்ப‌டுத்தி “கும்ரான்”ம‌லைப்ப‌குதிக‌ளில் இருந்த‌ பொதுங்குக‌ளில் தேடிய‌லைந்து அங்கிருந்த‌ சாச‌ன‌ச் சுருள்க‌ள் அனைத்தையும் த‌ங்க‌ள் கைவ‌ச‌ம் கொண்டு வ‌ந்து விட்ட‌ன‌ர்.
1952 ஆம் ஆண்டு செப்ட‌ம்ப‌ர் மாத‌ம் அனைத்துச் சுருள்க‌ளும் கிறித்த‌வ‌ப் பாதிரிமார்களி‌ட‌ம் போய்ச் சேர்ந்து விட்ட‌ன‌.ப‌தினைந்தாயிர‌ம் Manuscripts (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்கள் அடங்கிய செய்திகளை,ஒரு குறிப்பிட்ட பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது.பல கிருத்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிபதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம் அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
சாசனச் சுருள்களை கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்கு பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேரொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு,அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன.இந்த இரகசியக் காப்பில் “வத்திகான் சபை” முன்ன‌ணியில் இருந்தது.
தோலில் பதிந்த அந்தப் பலங்காலச் சாசனம் அழிந்துவிடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை microfilm (நுண்ணிய படச்சுருள்)எடுத்தார்கள்.அதன் ஒரு செட் போட்டோ கொப்பிகள் அமெரிக்காவில் உள்ள “லொஸ் ஏஞ்சல்ஸ்” நகரிலிருக்கும் ஒரு நூலகத்திற்கு பாதுகாப்பிற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
1990ம் ஆண்டு அந்த நூலகத்திற்குத் தலைவராக “ஐஸ்மன்” என்ற அறிஞர் நியமிக்கப்பட்டார்.அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி,அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.
இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்திலிருந்து நுண்ணிய போட்டோக்களை பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்கு மூலம் அளிக்கின்றார்.இத்தனை காலமும் கிருத்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.
“மைக்கேல் வைஸ்” என்னும் சிகாகோ ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ ஹிப்ரு மொழிப் பேராசிரிய‌ர் ஒருவ‌ரின் உத‌வியைக் கொண்டு அந்த‌ சாச‌ன‌ச் சுருள்க‌ளில் முக்கிய‌மான‌து என்று அவ‌ர் க‌ருதிய‌ 100 manuscripts (கையெழுத்துப் பிரதி)களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.
அந்தப் புத்தக வெளியீடு கிருஸ்தவ உலகத்தை உலுக்கியது என்றும்,குறிப்பாக கிருஸ்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்மென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.
மேற்கத்தய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவிலை என்றும்,அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்மென்டரி பதிவு செய்து காட்டுகின்றது.
கிருஸ்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச் சடங்குகளும்,வழிபாடுகளும் ஆரம்ப கிருஸ்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.
இந்த‌ச் ச‌ட‌ங்குக‌ளுக்கும் ஏசுவின் பிர‌ச்சார‌த்திற்கும்,கொள்கை கோட்பாடுக‌ளுக்கும் எந்தச் ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.அவை அனைத்தும் “ப‌வுல்”என்ப‌வ‌ரால் பிற்கால‌த்தில் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌வை.
மொத்த‌த்தில் இப்போது ஏசுவின் பெய‌ரால் சொல்ல‌ப்ப‌டும் அனைத்துக் கிருஸ்த‌வ‌க் கொள்கைக‌ளும் பொய்யான‌வை.அவ‌ற்றை ஏசுவின் அடுத்த‌ த‌லைமுறையில் வாழ்ந்த‌ உண்மையாள‌ர்க‌ளின் வாழ்வில் காண‌முடிய‌வில்லை.
மேற்க‌ண்ட‌வாறு அறிஞ‌ர்”ஐஸ்மேன்”கூறிவ‌ரும் போது,ஒரு யூத‌ரிட‌ம் அவ‌ற்ரைப் ப‌ற்றி வாத‌ம் செய்யும் போது “it confirms quran” அது குர்ஆனை உறுதிப்படுத்திகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்.அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப்படுகின்றது.
இதே முறையில் “மைக்கேல் வைஸ்” என்ற அறிஞரும் பேசும் போது “it confirms islam” அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகின்றார்.இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.
ஆகவே இந்தச் சாசனச் சுருள்கள் எப்படிக் குர்ஆனையும்,இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப்பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.
அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்
ஈஸா(அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது.ஆனால் கிருஸ்தவ‌ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை என‌லாம்.
ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்கு கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.
பைபிளின் பல இடங்களில் “ராஜ்ஜியத்தின் சுவிஷேச‌த்தை இயேசு பிரசங்கித்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
எந்த இறை வேதத்தை மறைத்தார்களோ அதைத்தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப்போதுமான காரணம் இருக்கிறது.
“குர்ஆனை ஒத்திருக்கின்றது” என்பதுதான் அந்தச் சுருள்களைப் படித்த கிருஸ்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
இஞ்ஜீல் எனும் வேதத்தைக் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாகத் திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.
அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.
மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்கமாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
எனவே உலகுக்கு நேர்வழிகாட்ட வந்த இறைவேதமாகிய திருமறைக் குர்ஆனை பொய்பிப்பதிலும்,உரக்கச்சொல்லப்படவேண்டிய உண்மைகளை மறைப்பதிலும் கைதேர்ந்தவர்களே அசத்தியத்தில் வாழும் இன்றய கிருஸ்தவர்கள் என்பதனை நாம் நன்கு உணரலாம்.
நேர்வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்.

http://dharulathar.com/2008/04/24/669/

Saturday, September 20, 2008

அயோத்தி : ராம ஜென்ம பூமியா? கிரிமனல் சாமியார்களின் கூடாராமா?

சங்கர மட முதலாளி ஜெயேந்திரன், அடியாள் கும்பலுக்குப் பணம் கொடுத்து சங்கரராமனைப் போட்டுத்தள்ளிய வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் யாருக்கும் மறந்திருக்காது. கொலைகாரர்களோடு நெருங்கிப் பழகிய ஜெயேந்திரன் மிச்ச நேரங்களில் சினிமா பக்தைகளுடன் ஆன்மிகத்தை ஆய்வு செய்வதும், அதுவும் போக மேல்மட்டத் தகராறுகளை தீர்க்கும் மேல்கட்டை பஞ்சாயத்தையும் செய்து வந்தார். இந்த ஆன்மீக அவஸ்தைகளைத்தான் ரவுடிகளும் செய்து வருகின்றனர் என்றாலும், அவர்களுக்கு ஜெயேந்திரர் கையில் வைத்திருப்பது போன்ற தண்டமும், லோகக் குரு என்ற புனிதப் பட்டமும் கிடையாது.
இருந்தாலும், அவாள்களைப் பொருத்தவரை, சங்கர மடம் என்பது என்னதான் கிரிமினல் வேலை செய்து வந்தாலும் புனிதத்தை இழக்கக்கூடாது; ஏதாவது செய்து அந்தப் புனிதத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பதில் குறியாயிருக்கிறார்கள்.
இராமன் பிறந்த அயோத்தியில் இந்த ஜோடனைகள் எதுவுமில்லை. அங்கே மடங்களும் மாஃபியாக்களும் வேறுபடுவதில்லை என்றால் உங்களுக்குச் சற்று ஆச்சரியமாயிருக்கலாம். எனினும் உண்மை அதுதான். அயோத்தி நகரில் மட்டும் 8,000த்திற்கும் மேலும், பீகாரில் 7,000த்திற்கு அதிகமாகவும் மடங்கள் உள்ளன. பெட்டிக்கடைகளை விட மடங்கள் அங்கே அதிகமாக இருப்பதன் காரணம், இந்தியா முழுவதிலிருந்தும் வரும் சுற்றுலா பக்தர்களை வைத்து அங்கே விரவியிருக்கும் பக்தித் தொழில்தான். பாபர் மசூதியை இடித்து இராமனுக்கு கோவில் கட்டப்போவதாக சங்க வானரங்கள் ஊர் ஊராக ஓதியிருப்பதால், அயோத்தி '90ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு பிரபலமாகிவிட்டது. அங்கு இருக்கும் மடங்களில் மட்டும் 40,000 மடாதிபதிகள், சாமியார்கள் மற்றும் பூசாரிகள் வேலை வெட்டியில்லாமல், நெய்ச் சோறோ, நெய் சப்பாத்தியோ தின்றுவிட்டுக் காலம் தள்ளுகிறார்கள். இவ்வளவு சாமியார்கள் இருப்பதால் அங்கே எங்கு பார்த்தாலும் ஆன்மீகம் கமழுமென்றுதான் பக்தகோடிகள் எதிர்பார்ப்பார்கள்.
சுற்றுலா பக்தர்கள் கொட்டும் பணம் எனும் லவுகீகம் உப்புச்சப்பற்ற அந்த ஆன்மீகத்தைக் கொள்ளை கொண்டுவிட்டபடியால், அயோத்தி சாமியார்களுக்கிடையே குழாயடிச் சண்டையல்ல, கொலைவெறிச் சண்டையே நடக்கிறது. சாமியார்களில் பீகாரிலிருந்து வந்த பார்ப்பன மற்றும் பூமிகார் மேல்சாதியைச் சேர்ந்த சாமியார்கள் மற்றும் மடாதிபதிகள் 25,000 பேர் இருக்கின்றனர். பீகாரைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் கால் வயிற்றுக் கஞ்சிக்காக இந்தியா முழுவதும் நாடோடிகளாக அலையும் போது, பார்ப்பன மேல்சாதி தொந்திகள் மட்டும் அயோத்தியில் நோகாமல் கல்லா கட்டி காலம் தள்ளுகின்றனர்.
திருவாடுதுறையின் முன்னாள் சின்ன ஆதீனம் தன்னைக் கொல்ல முயன்றதாக தற்போதைய பெரிய ஆதீனம் குற்றம் சாட்டியிருந்த கதையெல்லாம் அயோத்தியைப் பொருத்தவரை ஒன்றுமேயில்லை. அங்கே மடங்களின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்கு பீகாரிலிருந்து அடியாள் கும்பல்கள் மடாதிபதிகளால் வரவழைக்கப்படுகின்றன. போலீசின் பதிவுப்படி கடந்த பத்தாண்டுகளில் உ.பி. மற்றும் பீகார் மாநிலத்தில் மட்டும் இந்த சொத்துப் பிரச்சினைகளுக்காக நடந்த மோதலில் 150 மடாதிபதிகள் அல்லது சாமியார்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இது ஒன்றும் ஐ.எஸ்.ஐ.யோ, லஷ்கர்இதொய்பாவோ செய்த சதியல்ல. காவி உடுத்திய சாதுக்கள் தங்களுக்கிடையே நடத்திய பச்சைக் கொலைகள். அயோத்தியில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் 20 சாமியார்கள் சக சாமியார்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இராம ஜென்ம பூமிக்கே இதுதான் கதியெனும்போது, இந்தியா முழுவதும் இராமராஜ்ஜியம் வந்தால் நம் கதி?
அயோத்தி நகரில் மட்டும் எல்லாம் வல்ல இறைவனை நம்ப முற்றும் துறந்திருக்கவேண்டிய இம்முனிவர்களில் 350 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கிறார்களாம். ஒரு கையில் தண்டம், மறுகையில் துப்பாக்கி! முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் உ.பி.மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்த சமயத்தில், பைசலாபாத் மாவட்ட நிர்வாகம் குற்றப் பின்னணி உள்ளோரின் பட்டியலைத் தயாரித்த போது, அதில் இடம்பெற்ற அயோத்தி சாமியார்களின் எண்ணிக்கை 86! குற்றங்களைச் செய்து விட்டு மடங்களில் புகுந்துவிட்டால் போலீசு வரமுடியாது என்ற நிலைமையே இதன் பின்னணி. அப்படி போலீசு புகுந்து சிதம்பரத்தில் தீட்சிதர்களைக் கொத்துக் கொத்தாக தூக்கியது போல செய்தால், விசுவ ஹிந்து பரிஷத் உடனே இந்து மதத்திற்கு வந்த அநீதி என்று களமிறங்கிவிடும். எனவே, சாதா ரவுடிகளை என்கவுண்டர் செய்யும் போலீசு, சாமியார் ரவுடிகளைக் கைது செய்யவே அஞ்சுகிறது!
ஆர்.எஸ்.எஸ்இன் இராம ஜென்ம பூமி இயக்கத்தால் இந்து மதவெறியர்களுக்குக் கிடைத்த அரசியல் ஆதாயத்திற்கு நிகரான செல்வாக்கை, இந்தக் கிரிமினல் சாமியார்களும் பெற்றிருப்பதால் மாவட்ட நிர்வாகம் மடங்களுக்குள் நுழைவதற்குத் தயங்குகிறது. சமீபத்தில் அப்படி ஒரு கிரிமினல் சாமியார் கும்பலைத் தேடி உ.பி.மாநில அதிரடைப்படை நுழைந்த போது இந்து மதவெறியர்கள் எதிர்த்தார்கள். அதிரடிப் படையே தேடுமளவுக்கு அந்தக் கும்பல் என்ன குற்றம் செய்தது? கோண்டா ஊரில் உள்ள ஒரு கிராம வங்கியில் பத்து இலட்சம் ரூபாயை மடாதிபதி அருண் சாது கும்பல் கொள்ளையடித்துவிட்டு மடங்களில் தஞ்சம் அடைந்திருக்கிறது. இதே கும்பல் மிரட்டிப் பணம் பறிப்பதும், முக்கிய நபர்களைப் பிணையக் கைதிகளாகக் கடத்திப் பணம் பறித்து வந்ததும் தற்போது அம்பலமாயிருக்கிறது. கோவில் நிர்வாகங்களைக் கைப்பற்றுவதற்கு பிற மடாதிபதிக் கும்பல்களுடன் இந்த அருண் சாது கும்பல் அயோத்தியில் நடத்திய சண்டைகள் அங்கே பிரபலம்.
இந்தச் சொத்துப் பிரச்சினைகளுக்காக சாமியார் கும்பல்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும், குண்டு வீசிக் கொள்வதும் நிறைய நடந்திருக்கின்றன. பல கோவில் பூசாரிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அயோத்தியில் இந்தச் சண்டைகள் முடிவின்றி நடைபெறுகின்றன. அந்த வட்டாரத்தில் நடைபெறும் குற்றங்களின் மையமாக அயோத்தி மடங்கள் இருக்கின்றன. பல மடாதிபதிகள் பீகாரிலிருந்து அடியாட்களை வரவழைத்து மடங்களில் நிரந்தரமாக வைத்துக் கொள்வதும், பின்னர் தொழில்முறைக் குற்றங்களைச் செய்து பணம் சம்பாதிப்பதையும் தொழிலாகச் செய்து வருகின்றனர். சியாம் மஹாராஜ் எனும் மடாதிபதியின் கும்பல் கான்பூர் தொழிலதிபர் ரவீந்தர் கேடியாவை கடத்தி 18 இலட்சம் பெற்றுக் கொண்டே விடுவித்திருக்கிறது.
இவையெல்லாம் போக இராம ஜன்மபூமி ட்ரஸ்ட்டின் தலைவரான இராம் விலாஸ் வேதாந்தியைப் பற்றி புதிய ஜனநாயகத்தில் முன்னர் எழுதியிருந்தோம். சேது சமுத்திரப் பிரச் சினைக்காக கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்ன இவர்தான், முசுலீம்களுக்கு எதிரான துவேசத்தைப் பிளறுவதில் பிரபலமானதோடு ஹவாலா மோசடிகளுக்கும் பெயர் பெற்றவர். இவர் சில்லறைச் சாமியார் இல்லையென்பதால், மேல்மட்ட அளவில் முதலாளிகளின் கருப்புக் கோடிகளை வெள்ளையாக மாற்றுவது முதலான சேவைகளைப் பக்த கோடிகளுக்கு கச்சிதமாக செய்து வருகிறார்.
அயோத்தியின் கிரிமினல் புராணம் இதுதான். இந்தச் சாமியார்களை வைத்துதான் விஸ்வ இந்து பரிஷத் தர்மசன்சாத் எனும் மடாதிபதிகளின் பேரவையைக் கூட்டி பாபர் மசூதி இடிப்பு முதலான அக்கிரமங்களுக்கு நாள் குறிக்கிறது. காசு பணத்துக்காகத் தங்களுக்குள்ளேயே இரத்தக் கவிச்சியோடு கொலை செய்யும் இவர்கள்தான் இந்து மதவெறியைக் கிளப்புவதையும், முசுலீம் மக்களை வன்மம் கொண்டு மிரட்டுவதையும் செய்கிறார்கள் என்பது முக்கியமானது. வன்முறையும், துவேசமும், வெறியும் இவர்களது தொழிலிலும், இரத்தத்திலும் கலந்திருக்கிறது. இந்த காவிக் கயவர்களைத்தான் இந்து தர்மத்தின் இரட்சகர்களாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன்னிறுத்துகிறது. சாதியக் கொடுங்கோன்மையை ஆன்மாவாக வரித்திருக்கும் இந்து தர்மத்திற்கு இந்த ஆன்மீக அடியாட்கள் பொருத்தமாகத்தான் இருக்கிறார்கள்.
வட இந்திய சாமியார்கள் என்றால் ஏதோ கஞ்சாவைப் புகைத்துக் கொண்டு, அரைமுக்கால் நிர்வாணத்தில் ஜடா முடியோடு அலைபவர்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சாதா ரவுடிகளையாவது சட்டென்று அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆனால் காவி ரவுடிகள், மடத்துப் பெருச்சாளிகளாக ஊர் சொத்தைக் கொள்ளையடிப்பதை அவ்வளவு சுலபத்தில் அடையாளம் காண முடியாது. எனினும் அயோத்தி புராணம் காவித் திரையை விலக்கி, மடாதிபதிகள் என்று அழைக்கப்படும் ரவுடிகளைத் தெளிவான விசுவரூப தரிசனமாகக் காட்டுகிறது. பக்த கோடிகள் முட்டாள்தனமாக கன்னத்தில் போட்டுக்கொள்ளாமல் கம்பை எடுத்தால் அயோத்தி முதல் காஞ்சி வரை அலப்பரை செய்யும் ஆன்மீக ரவுடிகளை ஒழித்துக் கட்டலாம்.
• பச்சையப்பன்
நன்றி: http://www.tamilcir cle.net/index. php?option= com_content&view=article&id=3643:2008- 09-06-19- 13-09&catid=68:2008&Itemid=30

Friday, September 12, 2008

1 Common Misconceptions about Zakaah

Bismillah Walhamdulillah Was Salaatu Was Salaam 'ala Rasulillah

As-Salaam Alaikum Wa-Rahmatullahi Wa-Barakatuhu

21 Common Misconceptions about Zakaah
by Asma bint Shameem

Misconception # 1
I pray, don't I? What’s the big deal if I don't give Zakaah?

Zakaah is one of the PILLARS of Islam and NOT an option. It is just as important to ones faith as Salaah. In fact, anyone who denies it is a Kaafir and the Prophet (pbuh) and his Sahaba waged war against such persons even though they uttered the Shahadah and prayed Salaah.
About such people Abu Bakr said: "By God! I shall certainly wage war against the people who discriminate between Salaah and Zakaah." (Bukhaari, Muslim)

Misconception # 2:
But it will decrease my wealth!

Abu Hurayra said that the Prophet (pbuh) said, "Whoever is given wealth by Allaah and does not pay the Zakaah due thereupon shall find that on the Day of Arising it is made to appear to him as a hairless snake with two black specks, which chains him, and then seizes him by his jaw and says, 'I am your wealth! I am your treasure!'" Then he recited the verse, 'Let not those who are miserly with what God has given them of His bounty think that this is good for them. Rather, it is bad for them. That which they withhold shall be hung around their necks on the Day of Arising.' [3:180] (Bukhaari)

Misconception #3:
I don't have to pay Zakaah every year.

Zakaah is an obligation that must be paid each year. The Prophet (pbuh) used to send the zakaah-collectors to the tribes and cities, and they did not differentiate between those who had paid their zakaah the previous year and those who had not, rather they used to take the zakaah that was due on all the “zakaatable” wealth that people possessed.

Misconception # 4:
I never paid Zakaah before. I will just repent and that should be enough

The one who never paid Zakaah before should repent to Allaah first. Then he should estimate the amount of Zakaah that was due on him over the years as best he can, and pay it as soon as possible.

Misconception # 5:
I dont have to pay Zakaah if I owe a debt

The one who has any “zakatable” wealth must pay zakaah on it, when one year has passed since he acquired it, even if he has debts, according to the more correct of the two scholarly opinions. The Prophet (pbuh) used to command his agents to take zakaah from those who owed zakaah, and he did not tell them to ask them whether they had any debts or not. (Majmoo’ Fataawa -Abd al-‘Azeez ibn Baaz)

Misconception # 6:
I will waive my debt and count that as Zakaah

The Prophet (pbuh) said to Muaadh ibn Jabal, when he sent him to Yemen: “Teach them that Allaah has enjoined upon them zakaah on their wealth, to be taken from their rich and given to their poor.” He (pbuh) explained that zakaah is something which is to be taken and given, so on this basis it is not permissible to let off someone who owes you money and count that as zakaah, because letting someone off a debt does not involve taking and giving. (Fataawa Manaar al-Islam by Shaykh Ibn Uthaymeen)

Shaykh al-Islam said: “letting someone off a debt does not relieve one of the obligation of zakaah, and there is no scholarly dispute on this matter. But you can give this needy person some of your zakaah and he can meet his needs using what you give him as zakaah; and Allaah will help him to pay off his debt in the future, in sha Allaah.”

Misconception #7:
I have lent someone some money. I don't have to pay Zakaah on it.

In this situation, there can be two scenarios;
1. If the borrower is rich and is known to repay debts promptly: The lender has to pay Zakaah annually on the money lent, because it is possible to recover the money readily and it is like money that is in one's possession.

2. If it is unlikely that the lender will get his money back or the borrower is known to delay repayment: Then the lender does not have to pay zakaah before he gets the money back, because it is not readily accessible and is not like money that is in ones possession.

Misconception # 8:
I pay my taxes so I dont have to pay Zakaah!

The taxes we pay are to Uncle Sam/govt , not to Allaah to Whom the Zakaah is due. And this Zakaah money is to be only spent according to the rules of Shareeah in certain specific ways. Thus, it is not permissible for the taxes we pay on our wealth to be counted as part of Zakaah. The obligatory Zakaah must be paid separately.

Misconception # 9:
I will use the money that I receive from my bank as interest to pay off Zakaah

First of all, putting money in the bank in return for interest is a kind of riba which Allaah and His Messenger have forbidden, and it is a major sin. The Prophet(pbuh) cursed the one who consumes riba and the one who pays it. (Muslim)
This money cannot be used to pay Zakaah or other kinds of charity since it is impure and a haraam form of wealth.

Misconception # 10:
I will pay Zakaah on whatever is OVER the Nisaab

If ones wealth surpasses the amount of nisaab, then Zakaah is due upon it ALL, and not upon the surplus only.

Misconception #11:
Zakaah is due on precious gems, stones and diamonds

No zakaah is due on gems, precious stones, diamonds, etc. unless they are prepared for trade, in which case they come under the same ruling as all other trade goods.

Misconception # 12:
I will buy diamonds so that I don’t have to pay Zakaah

Some people try to get out of Zakaah by investing in diamonds, since no Zakaah is due on them, and think they can outsmart Allah. Doesnt Allaah know what’s in our hearts and minds? They forget that Zakaah IS due on them if they are prepared for trade. “They seek to deceive Allah and those who believe, but they deceive none except themselves, though they do not sense it.“ (Surah al-Baqarah: 9)

Misconception # 13:
The husband HAS to pay Zakaah on the wife’s jewelry and wealth

It is NOT the husband’s duty to pay Zakaah on his wife’s jewelry, wealth, etc. Rather, it is her responsibility, since she is the possessor of the wealth. If her husband or someone else pays zakaah on her behalf with her permission, that is o.k., and he will be rewarded for this voluntary action.

Misconception # 14:
I only have gold, but I do not have any money. So, I don’t have to pay Zakaah….

Shaykh Ibn Uthaymeen said:“ Zakaah must be paid on jewelry if it reaches the nisaab (minimum threshold), which is eighty-five grams. If it reaches this amount, zakaah must be paid on it. If she has other wealth and pays from that, there is nothing wrong with it. If her husband or one of her relatives pays it on her behalf, there is nothing wrong with that. If neither of these options is available to her, then she should sell some of it and pay zakaah with that money.”

Misconception # 15:
I will use my Zakaah money on my immediate family

Shaykh Ibn Baaz said: “The Muslim cannot give his zakaah to his parents or to his wife and children; rather he is obliged to spend on them from his wealth if they need that and he is able to spend on them.”

Misconception # 16:
I cannot give Zakaah to my poor relatives

It is actually preferable for a person to give their zakaah to a brother, sister, paternal uncle, paternal aunt or to any other relative, if they are poor. This is because, giving zakaah to them is both an act of charity and upholding family ties.

The Prophet (pbuh) said: “Charity given to the poor is charity and charity given to a relative is charity and upholding of family ties.” (Ahmad, al-Nasaa’i)

Misconception # 17:
A woman cannot give Zakaah to her Husband

It is okay for a woman to give zakaah to her husband, if he is qualified to receive zakaah, because she is not obliged to spend on him. Also, the Prophet (pbuh) gave permission to the wife of Abd-Allaah ibn Masood to give her zakaah to her husband
.
Misconception # 18:
Zakaah can be given to Non-Muslims if they are poor

It is not permissible to give Zakaah to any kaafir except the one who is inclined towards Islam, in the hope that he will become Muslim if you give him zakaah (al-Tawbah:60).

Misconception # 19:
I will use Zakaah to build hospitals, masaajid and orphanages

That is not permissible, because this is not included in the eight categories on which zakaah may be spent. Allaah tells us that Zakaah may be spent on the following:
“As-Sadaqaat (Zakaah) are only for the Fuqaraa (poor), and Al-Masaakeen (the poor) and those employed to collect (the funds); and to attract the hearts of those who have been inclined (towards Islam); and to free the captives; and for those in debt; and for Allaah’s Cause (Mujaahidoon — those fighting in a holy battle), and for the wayfarer (a traveler who is cut off from everything)” [al-Tawbah:60]

But if the intention in giving the money to an orphanage is so that this money will be spent on the poor orphans, then this is permissible, if the orphans are poor.
Similarly, Zakaah cannot be used to print Quraans and other Dawah material.

Misconception # 20:
Zakaah is the same as Zakaat ul-Fitr

Zakaat al-Fitr is NOT the same as Zakaah. These are two separate entities and whoever paid Zakaah is NOT relieved of paying Zakaat al-Fitr and vice-versa.

Misconception # 21:
I have to inform the one I am giving, that it is Zakaah

You do not have to tell the recipient that it is zakaah.

Courtesy:loveislam_liveislam@yahoogroups.com

Saturday, September 6, 2008

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

இறைத்தூதர் அவர்களை அவமதித்த சங்தினமலரை தடைசெய்து இந்தியாவின் இறையான்மையை காக்க அரசு முன்வரவேண்டும்.

எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்த சங்பரிவார தினமலரை அரசு தடை செய்ய வேண்டும்.
அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ள சங்பரிவாரத்தின் ஊடகமான தினமலரை அரசு தடைசெய்வதுடன் கேளிச்சித்திரத்தை வெளியிடுவது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பும் என்று தெரிந்திருந்தும் முஸ்லிம்களுக்கெதிராக போர்ப்பிரகடணம் செய்துள்ள அதன் ஆசிரியர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து இந்திய நாட்டின் இறையாமையை காக்க அரசு முன்வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.
இறைத்தூதர் முஹமது நபி (ஸல்) அவர்களைப் பற்றி டென்மார்க் பத்திரிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கார்டூன்களை வெளியிட்டடது. அதைத் தொடர்ந்து உலகம் முழுதும் பலத்த கண்டனக்குரல்களும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் மீண்டும் தினமலர் நாளிதழின் வேலூர் பதிப்பில் இலவச இணைப்பாக வெளிவருகின்ற கம்ப்யூட்டர் இதழ். இணையதளம் ஒன்றில் பிரசுரமாகியிருந்த முஹமது நபிகள் குறித்த கார்ட்டூனை அந்த “தினமலர் கம்ப்யூட்டர்’’ 02/09/08 இதழில் பிரசுரமாக்கப்பட்டிருந்தது.
உலகமுழுதும் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பிய செய்தியை மீண்டும் தினமலர் பிரசுரித்திருப்பதின் மூலம் முஸ்லிம்களை குறிப்பாக தமிழக முஸ்லிம்களை வம்புக்கிழுத்துள்ளது இந்த சங்கபரிவார தினமலர்.
புனித ரமலான் மாதத்தின் ஆரம்பத்தில் இவ்வாறன கேளிச்சித்திரத்தை வெளியிடுவது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பும் என்று தெரிந்திருந்தும் எங்களின் உயிரின் மேலான இறைத்தூதர் அவர்களின் கேளிச்சித்திரத்தை வெளியிட்டுள்ள தினமலர் முஸ்லிம்களுக்கு எதிராக போர்பிரகடனம் செய்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ள சங்பரிவாரத்தின் ஊடகமான தினமலரை அரசு தடை செய்வதுடன் முஸ்லிம்களின் உயிரின் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கேளிச் சித்திரத்தை வெளியிட்டு சமூக கொத்தளிப்பு ஏற்படுத்திய அதன் ஆசிரியர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து இந்திய நாட்டின் இறையாமையை காக்க வேண்டுமென்று ‍அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோ
Thanks: Hussainghani