Tuesday, December 27, 2011


Exposing America’s ugly side, alms seekers dim festive lights

By K.V.S. MADHAV
The Capitol stands tall, its dome shining in the afternoon sun. Right in its shadow and just a block away, a shocking spectacle unfolds.
Walk along a tree-lined stretch and hit the Union Station and right next to it sit the alms seekers. Their pleas rent the air as thousands emerge from one of America’s busiest railway stations and melt into the busy avenues of the national capital.
Beggars sitting plonk next to United States’ supreme decision making body can come as a real shocker for someone fed on a constant diet of America being the ultimate El Dorado, the land of milk and honey.
All the more unreal for a country where people spent a staggering $11.9 billion on a single day’s retail buying frenzy on Thanksgiving Day, an annual sales jamboree that symbolizes capitalist America and its penchant for conscious consumption.
Sales skyrocket. Poverty hits rock bottom. What disparity is this?
As much for its shock value, major cities like New York, Baltimore, Philadelphia or San Francisco throw up equally stark images of alms seekers. 
Busy traffic junctions, public places, tourist havens and rail and bus stations are at the heart of the American alms activity as in the third world countries. Only, beggars here are less pesky and more polite. Many choose the language of silence to showcase their homelessness, unemployment and despair with placards narrating their plight in pithy sentences.
According to the American Census Bureau, the ranks of America’s poorest poor have swelled to a record high and one in every 15 people is ranked the poorest of the poor today. About 20.5 million Americans, or 6.7 per cent of the country’s population, make up the poorest poor, defined as those at 50 per cent or less of the official poverty level.
In 2010, the poorest poor meant those with an income of $5,570 or less per annum for an individual and $11,157 for a family of four.
Those living in deep poverty represent nearly half of the 46.2 million people below the poverty line.
Poverty is spread widely across metropolitan areas and various communities.
The number of Hispanics living in poverty crossed that of African-Americans. Estimates revealed that 27.6 per cent of Hispanics lived in poverty, compared with 23.4 per cent for blacks. This was attributed to lower participation of the Spanish-speaking immigrants in government aid programs such as housing and food stamps.
The District of Columbia, housing the national capital, ranked highest for the poorest of poor with a growth of 10.7 per cent.
An early morning drive along the lanes behind its Union Station reveals more shockers — the homeless roughing it out in the open. The freezing night is far from over as cold wind sweeps the streets making them huddle up in quiet contemplation, a scene again associated with run down areas near bus stations in Asia and Africa and not the land of opportunities and immigrants.
Northern Baltimore, an hour’s drive away from the national capital and comprising of a sizable African American population, showcases poverty aplenty with its blocks and streets full of rundown houses and back alleys filled with the jobless.
While poverty continues to be the domain of the under privileged African American and Hispanic sections, one can find many white Americans also taking to the alms avenue.
This writer watched a white woman at Newark rail station on the New Jersey-New York border desperately seeking monies from passersby for a train ride home.
A white youngster thrust his certificates at travelers in the New York Penn Station in the heart of consumer paradise Manhattan and the glittering Times Square and sought monies for a train ticket to enable him reach college. Sham or abject need, one wasn’t sure in this case.
On a recent visit, some more white Americans were found preparing to retire for the night arranging newspaper sheets and old and soiled comforters outside the busy New Brunswick railway station in New Jersey, waiting for the last train to leave.
Many more were pursuing the big-hearted on the high streets of Washington DC and its wealthy suburbs in Northern Virginia and Maryland.
Eating, sleeping and living on the streets, a cold Christmas awaits these penniless and the homeless with temperatures hovering around the zero degree Celsius point. No, Santa Claus would not be knocking at their doors simply because they have no roof over their heads. No Yuletide, only cold solitude for many of them.
Meanwhile, the huge Christmas tree in front of the White House, the shining tiara among the thousands dotting the landscape, is all aglow. America is already celebrating Christmas with streets and homes lit up brilliantly and festive spirit hanging thick in the air. There is laughter and merriment in the well-lit shops and restaurants. Carols lend warmth to the winter air.
Outside, a homeless man settles for the night on a bench clinging to his belongings stacked in a garbage bag.
The Capitol dome in the distance glistens in the moonlight.

Saturday, December 17, 2011



எழும்பும் உணர்வுகள், வீழும் நடுநிலைமை, சென்னை செய்தியறைகளில் முல்லைப் பெரியாறு குறித்த செய்திகளின் பின்னணியில் உள்ள உண்மை
ஆங்கிலத்தில் - ராதிகா கிரி
தமிழில் - பூங்குழலி
முல்லைப் பெரியாறு அணை விசயம் குறித்து ப‌ல்வேறு ஆங்கில செய்தி ஏடுகளில் அண்மையில் கிளம்பியுள்ள செய்திகளைத் தொடர்ந்து நெருக்கமாக கவனித்ததில், கேரளத்திலிருந்து வரும் செய்தியாளர்களின் தொழில் நேர்மை குறித்து எனக்கு முக்கிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
mullai_periyar_370மலையாள செய்தி ஏடுகளில் எழுதும் செய்தியாளர்கள், உண்மையைப் பற்றிய அக்கறையின்றி மாநில அரசின் பார்வையையும் உள்ளுர் மக்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்த முற்பட்டுள்ளனர் என்பது வேறு செய்தி. ஆனால் ஆங்கில ஊடகங்களுக்காக அதுவும் தமிழ்நாட்டில் பணியாற்றும் மலையாள செய்தியாளர்கள் அதையே செய்யும்போது நிச்சயம் அது கவனிக்கத்தக்க விசயமாகும்.
செய்தியாளர்களின் தொழில் நேர்மையில் அண்மையில் ஏற்பட்டுள்ள சரிவு என்பது, கேரள அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் கூட, அதற்கு கீழ்ப் பகுதியில் உள்ள இடுக்கி மற்றும் பிற அணைகளில் நீர் தேங்கும் என சொல்லியிருப்பதை செய்தியாக்கியிருக்கும் விதத்தில் தெரிகிறது.
அவ்வறிக்கை அளித்த மறுநாள், சென்னையைச் சேர்ந்த எந்த ஆங்கில நாளிதழும் அச்செய்தியை வெளியிடவில்லை. மலையாளிகள் தாங்கள் அபத்தம் என்றும் ஏற்றுக் கொள்ள முடியாததும் என்று கருதிய அவ்வறிக்கையை எதிர்த்து அட்வகேட் ஜெனரலுக்கு எதிராக கை உயர்த்தி கிளம்பிய பிறகே அச்செய்தி வெளிவந்தது. அதுவும் அவ்வறிக்கை எழுப்பிய சர்ச்சையின் அடிப்படையில் மட்டுமே.
நான் குறிப்பிட விரும்பும் செய்தி என்னவெனில், கேரளத்தைச் சேர்ந்த எந்த ஒரு செய்தியாளருக்கும் அட்வகேட் ஜெனரலின் அறிக்கை செய்தியளிக்கத் தகுந்ததாக படவில்லை - அதை ஒப்புக்கொள்ள விரும்புவார்களா அல்லது பொய்யென ஒதுக்குவார்களா என்பது வேறு விசயம்.
வேறு விதத்தில் குறிப்பிட வேண்டுமெனில், மலையாள செய்தியாளர்கள், தங்களின் பணி சார்ந்தும் கூட, தங்களை முதலில் மலையாளிகளாகவும் பின்பே செய்தியாளர்களாகவும் கருதுகிறார்கள்.
கடந்த இரண்டு வாரங்களாக நடந்தவற்றை நுணுக்கமாக ஆராய என்னைத் தூண்டியது, டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பு, நவம்பர் 24 அன்று வெளியிட்ட டைம்ஸ் வியூ (Times View) எனும் செய்திதான்.
அச்செய்தியின் கீழிருந்த கருத்துப் பகுதியில், 'தமிழ்நாட்டு திரையரங்குகள் எதிர்ப்புக்குத் தலைவணங்கி டாம்999 படத்தை திரும்பப் பெற்றன' என்று மிகவும் நல்லவிதமாக கருத்துரிமைக்கு மதிப்பளித்து தொடங்கியுள்ளது. ஆனால் வெடிகுண்டு மூன்றாவது வரியில் இருந்தது. 'ஒப்புக்கொள்ளவேண்டியது என்னவெனில், முல்லாப் பெரியாறு அணை ஓர் உணர்ச்சிகரமான சிக்கல். தென் மாவட்டங்களில் வாழும் மக்களிடையே ஆதரவினைப் பெற அரசியல் கட்சிகள் அதைப் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்கின்றன." என்று கூறியது.
முல்லைப் பெரியாறு ('அய்' விகுதி இல்லாமல் 'முல்லாப் பெரியாறு' என்பது அப்பட்டமான மலையாள உச்சரிப்பு. இதையே டைம்ஸ் ஆப் இந்தியா பயன்படுத்த விழைகிறது) கேரளத்தில்தான் உணர்ச்சிகரமான விசயம்; தமிழ்நாட்டில் அல்ல. ஆனால், திட்டமிட்ட முறையில் தாங்கள் பரப்பும் பொய்யான செய்திகள் மூலம் கேரள அரசு, செய்தியாளர்கள் மற்றும் மக்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து அதனை இங்கும் உணர்ச்சிகரமான சிக்கலாக்கி விடலாம்.
எனவே, சந்தேகத்திற்கு இடமின்றி, அச்செய்தியாளர் சென்னையில் வசித்தாலும் கூட டைம்ஸ் வியூ வெளியிட்ட செய்தி மலையாள பார்வையிலானதே ஆகும்.
சென்னையில் உள்ள டைம்ஸ் ஆப் இந்தியாவில் செய்தி அறையின் கட்டமைப்புப் பற்றி ஊடகத் துறை குறித்த உள்ளீடுப் பார்வை கொண்ட எவருக்கும் தெரியும். அந்நாளிதழின் அனைத்து முக்கிய பதவிகளிலும் மலையாளிகளே உள்ளனர் - ஒரு நாயரோ ஒரு மேனனோ அது போன்றவர்களோ. இருப்பு ஆசிரியர், அரசியல் ஆசிரியர், பெருநகர ஆசிரியர் அனைவருமே மலையாளிகள்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் முன்பு பணியாற்றிய ஒரு செய்தியாளர் இவ்வாறு கூறினார் : "செய்தி அறை மலையாளிகளால் நிரம்பி வழிகிறது. அவர்கள் எப்பொழுதும் தங்களிடையே மலையாளத்திலேயே பேசிக் கொள்வார்கள். மலையாள பண்பாட்டின் ஆதிக்கம் செலுத்தும் இருப்பு சென்னை அலுவலகத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்"
டைம்ஸ் ஆப் இந்தியாவின் மற்றொரு முன்னாள் ஊழியர் இவ்வாறு கூறுகிறார்: "டைம்ஸ் ஆப் இந்தியாவின் தற்போதைய சூழல் என்னவெனில், தமிழர்கள் அங்கு நுண்ணிய சிறுபான்மையினராக உள்ளனர். நான் அங்கு இருந்தபோது, நானும் எனது சக பணியாளர் ஒருவரும், தமிழ்நாட்டின் நலன்கள் அலட்சியப்படுத்தப்பட்டாலோ ஒதுக்கப்பட்டாலோ அதை எதிர்த்து பல முறை வாதிட்டிருக்கிறோம்"
"தமிழர்களை பெரிதும் எரிச்சல்படுத்திய மற்றொரு நிகழ்வு என்னவெனில், டைம்ஸ் ஆப் இந்தியா தனது சென்னை அலுவலகத்தை ஓணத்திற்காக அலங்கரிக்க அனுமதித்த அதே வேளையில், தமிழ்ப் புத்தாண்டுக்காக அலங்கரிக்க அனுமதிக்க மறுத்தது. எங்களில் சிலர் அது குறித்து கேள்வி எழுப்பினோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை"
மற்றொரு மூத்த செய்தியாளர், டைம்ஸ் ஆப் இந்தியாவின் வாசகர் என்ற அளவில் மட்டுமே அதோடு தொடர்புடையவர், சென்னையில் உள்ள ஆங்கில ஊடகங்களின் நிலையை இவ்வாறு ஆய்வு செய்கிறார் : "தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் கீழான பண்பாடு எப்பவுமே ஆங்கில ஊடகங்களால் அலட்சியப்படுத்தப்பட்டே வந்துள்ளன. காரணம் அவற்றில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் செழுமை வகுப்புகளிலிருந்து வந்தவர்களாகவே உள்ளனர். இது தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வழங்கப்படும் முறை குறித்த ஒரு விதமான பெரும் பிரிவையே ஏற்படுத்திவிட்டது.
எளிமையான பின்னணியிலிருந்து வந்தவர்கள் கூட ஆங்கில நாளிதழ்களின் செய்தி அறைகளுக்குள் தங்களுக்கான வழியைக் கண்டறிந்து நுழைய முற்பட்டிருந்த போதும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குரல் ஒடுக்கப்பட்டே வந்திருக்கிறது. 'தமிழர் பார்வை' என்பது தற்போதும் செழுமையான வகுப்பினரின் பார்வையாகவே உள்ளது. இது மாநிலம் குறித்த பல தவறான புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு ஒரு சான்று என்னவெனில், தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற இடங்களில் உள்ள மக்கள், தமிழ் உணவு முறையோடு 'இட்லி, தோசை மற்றும் சாம்பாரை' தொடர்புபடுத்தி, தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மையினர் சைவ உணவு வழக்கம் கொண்டவர்கள் என்று நம்புகின்றனர். ஆனால் உண்மையில், தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையோர், மரபாகவே மாமிசம் உண்ணும் வழக்கும் உடையவர்கள்.
தமிழ்நாட்டோடு தொடர்புப்படுத்தப்படும் மற்றொரு பண்பாட்டுக் கூறு கர்நாடக இசையும் பரதநாட்டியமும். உண்மையில் இசையில் செவ்வியல் வடிவங்கள் மக்கள் தொகையில் அதிகபட்சம் 10 விழுக்காட்டினரால் மட்டுமே புரிந்து கொள்ளவும் பாராட்டவும் படுகிறது. அப்படியெனில் எஞ்சியுள்ள 90 விழுக்காட்டு மக்களின் இசை மற்றும் கலை மரபு என்ன?
அத்தகைய கலை வடிவங்கள் போதுமான அங்கீகாரம் பெறுவதில்லை. ஆங்கில ஊடகங்கள் அதை அங்கீகரிப்பதைப் பற்றி அக்கறை கொள்வதே இல்லை. ஏனெனில், பிற மாநிலங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள், குறிப்பாக உயர் நிலை ஆசிரியர் பொறுப்பில் உள்ளவர்கள், ஆதிக்கம் மிகுந்த செழுமையான வகுப்பினருடன் தொடர்பு கொள்வதை மட்டுமே விரும்புகின்றனர்.
முல்லைப் பெரியாறு விசயத்தைப் பொருத்தவரையில், மலையாள நாளிதழ்களின் துணையுடன் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கியது கேரள அரசே ஆகும். கேரள அரசின் முக்கிய நோக்கம் இடுக்கி அணையிலிருந்து நீர் பெறுவதே. அதனை அடைய வேண்டுமெனில் முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட வேண்டும்.
காலப் போக்கில், மாநில அரசின் 'நோக்கத்தை' உயர்த்திப் பிடிப்பதில் மலையாள நாளிதழ்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டதில், அது ஒரு உணர்ச்சிகரமான விசயமாகி போனது. எனவே, முல்லைப் பெரியாறு ஒரு நீர் வெடிகுண்டு என்றே கேரளத்தில் உள்ள ஒவ்வொரு மலையாளியும் நம்ப வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாதபோதும், அணை எந்நேரமும் உடைந்து விடலாம் என்று மக்கள் இன்று நம்புகிறார்கள். இதையே கடந்த பல பத்தாண்டுகளாக சொல்லிக் கொண்டும் உள்ளனர்."
இந்த உணர்வுகளோடு பொருந்தி, மலையாள செய்தியாளர்களும் இதே பார்வையை கொண்டுள்ளனர். இதில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் மலையாள செய்தியாளர்களின் வலிமையான கட்டுப்பாட்டில் இருப்பதால், எல்லா நாளிதழ்களும் கேரள தரப்பினையே கூறுகின்றன.
அணையின் உயரத்தை 152 அடியிலிருந்து 136 அடியாக மாற்றியது பிறப்பால் மலையாளியான எம்.ஜி.இராமச்சந்திரன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்தது. அன்று தலைமைச் செயலாளராக இருந்தவரும் ஒரு மலையாளியே.
மலையாளிகளின் உணர்வுகளுக்கு ஏற்ப, அணையின் பெயரை தவறாக 'முல்லாப் பெரியாறு' என்று தொடர்ந்து கூறும் டைம்ஸ் ஆப் இந்தியா தவிர, சென்னையின் நாளிதழான இந்துவும் அவ்வாறே உச்சரிக்கிறது.
மக்களின் அச்ச உணர்வை அதிகமாக்கி, முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதையே தனது ஒரே நோக்கமாகக் கொண்ட கேரள அரசின் கருத்தையே மலையாள செய்தியாளர்கள் எதிரொலிக்க முயலும்போது, ஊடகவியல் பாதிக்கப்படுகிறது. செய்தியின் நடுநிலைமை அடிவாங்குகிறது.
முல்லைப் பெரியாறு வலுவிழந்து உள்ளது என்றும் உடைந்து விடும் என்று உருவாக்கப்பட்டுள்ள கருத்தாக்கத்திற்கு நீண்ட பின்னணி உள்ளது.
1978-இல் நடந்த நிகழ்வுகளை நேரில் அறிந்தவரான சென்னையைச் சேர்ந்த ஒரு மூத்த செய்தியாளர் இவ்வாறு கூறுகிறார்: "மலையாள செய்திஏடுகளில் இருந்த செய்தியாளர்களில் மிக முக்கியமான இடத்தை உடையவரும், அக்காலத்திய அரசியல்வாதிகளுக்கு ஆலோசனை சொல்லக்கூடியவரும், அவர்களின் பெரும் ஆதரவைப் பெற்றவரும், திருவனந்தபுரத்திலிருந்து வரும் மலையாள மனோரமாவின் தலைமை பொறுப்பிலிருந்தவருமான திரு.பட்ரோஸ் சும்மாரால்தான் கேரளாவில் அனைத்தும் தொடங்கியது.
1976-இல் இடுக்கி அணை அமைக்கப்பட்ட நாளிலிருந்து தேவையான அளவு நீரை நான்கு பருவ காலங்களிலும் வழங்கவில்லை என்பது குறித்து ஏமாற்றமுற்று இருந்த அன்றைய கேரள மாநில மின்சாரத் துறை தலைமைப் பொறியாளரும் தற்போது கேரள அரசு ஆலோசகருமான எம்.பி.பரமேசுவரன் நாயருடன் அன்றைய கேரள காங்கிரஸ் தலைவர் கே.கருணாகரன் நடத்திய உரையாடலைத் தொடர்ந்து, கேரளாவில் அப்போது இருப்பதிலேயே அதிக அளவில் விற்பனையான நாளிதழான மனோரமா நாளிதழ் 1978இல் முதன் முதலாக 'முல்லைப் பெரியாறு போட்டான் போருன்னு' (முல்லைப் பெரியாறு வெடிக்கப் போகிறது) என்று தலைப்புச் செய்தி தாங்கி வந்தது.
முல்லைப் பெரியாறு இடுக்கிக்கு மேலணையாகும். கேரள எல்லைக்குள் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் மீது சட்டப்பூர்வ அதிகாரத்தை ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்நாடு பெற்றிருந்தது.
பரமேசுவரன் நாயர் வேடிக்கையாக 'நம்முடைய சேட்டனிடத்து பரஞ்சு ஸ்டோரேஸ் கொறைக்க பரையானுல்லே' (நம்முடைய அண்ணன் - அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி்.ராமச்சந்திரன் - அவர்களிடம் சொல்லி அணையின் நீர் தேக்க அளவை குறைக்கச் சொல்வோம்) என்று காங்கிரஸ் தலைவரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
ஒரு வெற்று வேடிக்கைப் பேச்சாகத் தொடங்கிய அந்த உரையாடலின் இறுதியில் நாயர் காங்கிரசு தலைவரிடம் இவ்வாறு கூறுகிறார்: 'பேடி கிரியேட் செஞ்சிட்டு சேட்டனிடத்து போயல்லா' (முதலில் அச்சத்தை உருவாக்கிவிட்டு பின்னர் நம் அண்ணனிடம் அதை எடுத்துச் செல்ல வேண்டும்)
மலையாள மனோரமாவால் முதலில் உருவாக்கப்பட்ட 'அச்சம்' பின்னர் பிற மலையாள செய்திஏடுகளால் கையிலெடுக்கப்பட்டன. அந்த நீண்ட கதையை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், பிப்ரவரி 2006-இல் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒர் உத்தரவைப் பிறப்பித்தது. அதில் அணை வலுவிழந்து இல்லை என்றும் தமிழ்நாடு அரசு நீரின் தேக்க அளவை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கூறியது.
இன்று ஒவ்வொரு மலையாளி செய்தியாளரும் பட்ரோஸ் சும்மாராக செயல்படுகிறார் என்பதுதான் வேதனையானது. இந்த வேதனை ஊடகவியலுக்கு மட்டுமல்ல உண்மைக்குமே. ஆனால் இந்த செய்தியாளர்கள் புரிந்து கொள்ளத் தவறியது என்னவெனில், அவர்களின் ஆதிக்க வெறி, இந்தியாவின் பன்முகத் தன்மையை கிழித்து எறிந்துவிடும் என்பதைதான்.
கொஞ்சம் நீருக்காகவும், பிரிட்டிஷ் இந்திய அரசு திருவனந்தபுரம் அரசரிடமிருந்து சட்டப்படி வாங்கிய நிலத்தை மீட்டெடுப்பதற்காகவும், கேரளாவைச் சேர்ந்த செய்தியாளர்கள் தங்களின் தொழில் நேர்மையை விட்டுக் கொடுக்க வேண்டுமா?
***
ராதிகா கிரி  - தி ஸ்டேட்ஸ்மேன் இதழில் சிறப்பு செய்தியாளராக உள்ளார்.
நன்றி: வீக் எண்ட் லீடர் (http://www.theweekendleader.com/Causes/853/The-M-factor.html#disqus_thread)
மொழிபெயர்ப்பு க்கு நன்றி கீற்று இணையதளம்.

Sunday, December 4, 2011


Silver Jubilee Mail Address

Dear Friends find the below the email address of Silver Jubilee Committe.

Invite your creations.

ywms.silverjubilee@gmail.com

வெள்ளிவிழா கொண்டாட்டம்

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 21 ஜனவரி 2012 அன்று நமது பள்ளியின் 25 வது ஆண்டு விழா கொண்டாட உள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்

நற்பணி மன்ற முன்னாள் உறுப்பினர்கள், இந்நாள் உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பெற்றோர்கள், குறிப்பாக இந்த அமைப்பு நன்றாக வளர வேண்டும் என என்றென்றும் விரும்பும் உள்ளூர் வெளியூர் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரின் பேராதரவையும் அன்புடன் வரவேற்கிறோம்.
 
வெள்ளிவிழா குழு

Monday, May 2, 2011

தமிழனுக்கு இந்தி தேவையில்லையா? - கருணாநிதியின் துரோகம்!

ஆண்டாண்டு காலமாக திராவிட முன்னேற்ற கழகம் இந்தியை எதிர்த்து தமிழர்களின் அடிப்படை உரிமையை வேட்டையாடுவது பலரும் அறிந்த செய்தி. இந்தி எதிர்ப்புக்குக் கருணாநிதி விளக்கம் கூறும்போது, "நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தி ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம்" என்கிறார். இது, "நெருப்பு சுடும்; அதனால் தமிழகம் முழுவதும் தீப்பெட்டியைத் தடை செய்யவேண்டும்" என்பது போல் இருக்கிறது.

கருணாநிதி இந்தியை ஏன் எதிர்க்கிறார், பிறகு ஏன் குழப்புகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கபில்சிபல் "அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழி பாடமாக்க வேண்டும்" என்று யோசனை தெரிவித்தார். உடனே தமிழக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழகத்தில் இந்தியை அனுமதிக்க முடியாது" என்று பதில் அறிக்கை விட்டார். இந்த அறிக்கையின் உள் நோக்கம் கருணாநிதியை மகிழ்விக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்?.

தமிழர்கள் ஒரு தேசிய மொழியைக் கற்பதில் தவறு என்ன? ஒரு படித்த கல்வி அமைச்சரே தனது தலைவர் திருப்திக்காக இந்தியை எதிர்ப்பது வேலியே பயிரை மேய்வது போல இருக்கிறது. ஒரு அமைச்சர் ஒரு அறிக்கை விடுவதற்கு முன்பு அதன் சாதக பாதகங்களை யோசிக்கவேண்டும். இன்று பிற மாநிலங்களில் இந்திமொழி உள்ளது; அவர்கள் எதில் குறைந்துவிட்டார்கள்? இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு நாம் சென்று அங்குள்ள ரிக்ஸா ஓட்டியிடம் ஆங்கிலம் பேசினால் அவனுக்கு என்ன புரியும்? நமக்கு தமிழையும், ஆங்கிலத்தையும் விட்டால் வேறு என்ன தெரியும்?.

நமது பக்கத்து மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்கள், செல்வம் கொழிக்கும் வளைகுடா பகுதிகளில் உயர்மட்ட வேலைகளிலிருந்து கீழ்மட்டம் வரை கோலோச்சும்போது, தமிழர்கள் பெரும்பான்மையோரும் அப்பாவிகளாக, கீழ்மட்டத்திலேயே தலையெடுக்க முடியாமல் நசிந்து போவதற்குக்மொழி மேலாண்மையும் ஒரு காரணம் என்பது வளைகுடாக்களில் பயணிக்கும் தமிழக அரசியல்வாதிகளில் எவருக்குமே இதுவரை புரியவில்லையா?

வெளிநாடுகளில் மட்டுமின்றி தமிழகத்திலும்கூட சில வேளைகளில் இப்பரிதாப தமிழன் மொழி புரியாமல் தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொள்கிறான். சான்றுக்குச் சில:

ஒரு வருட காலத்துக்கு முன்பு டிவி யில் ஒரு தமிழ் திரைபட நகைச்சுவை காட்சியைப் பார்த்து அதிர்ந்து போனேன். அந்தக் காட்சியில் ஒரு இந்தி வாசகம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அந்த வாசகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தால் மிக பயங்கரமான அச்சில் பதிக்கமுடியாத ஆபாச வார்த்தையாக இருந்தது. அப்போ இந்தத் தவறு எப்படி நடந்தது? தமிழ் சினிமாக்களின் தணிக்கை அதிகாரிகளுக்குக் கூட இந்தி தெரியவில்லை என்பதுதானே? அவர்களுக்கு இந்தி தெரிந்து இருந்தால் அந்த வாசகம் என்ன, காட்சியையே நீக்கி இருப்பார்கள்.

இந்தக் கொடுமை பாடல்களையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்திய தமிழ் பாடல் ஒன்றில் "படுவா" என்ற இந்தி சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது இதற்கு ஆங்கிலத்தில் PIMP (பிம்ப்) என்றும் தமிழில் "கூட்டிக் கொடுப்பவன்" என்றும் சொல்லலாம்! எவ்வளவு அசிங்கம். திரைப்படத்தின் மொழி தமிழ், பயன்படுத்தப்பட்ட சொற்கள், இந்தி மொழியிலுள்ள தரம்கெட்ட ஆபாச சொற்கள். ரசிப்பதும் சிரிப்பதும் தமிழர்கள்! ஆனால் அர்த்தம் மட்டும் தெரியாது! இத்தகைய படங்களின் பெயர்கள் தமிழில் இருந்தால் அரசு மானியம் வேறு! என்ன பரிதாபம்!!

மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை, அரசும் திருந்தவில்லை! நான் மட்டும் என்னசெய்வேன்?. மகா கவி அல்லாமா இக்பால் அவர்களின் அற்புத வரிகளில் ஒன்று உள்ளது, "நீங்கள் எந்த ஒன்றுக்கும் ஆசை படுவதற்கு முன்னால் அதற்கு உங்களை நீங்களே தயார்படுத்திகொள்ளுங்கள்". எவ்வளவு அருமையான சிந்தனை!

அரசியல்வாதிகள் பதவிக்கு ஆசைபடுகிறார்களே தவிர அதற்கு அவர்கள் தகுதியானவர்களாக இல்லை என்பதே உண்மை! உதாரணம் மத்திய அமைச்சர் அழகிரி! ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது! நாடாளுமன்றத்தில் பேசவும் பயப்படுகிறார். டெல்லி செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுக்கவும் பயப்படுகிறார். பதவியும் அதிகாரமும் இருந்து என்ன செய்ய? இதற்கு ஒரே தீர்வு, இந்தி மொழியைப் பள்ளியில் கட்டாயப் பாடமாக கொண்டு வரவேண்டும் என்பதுதான். அது அரசியல் கட்சிகளால்தான் முடியும்.

அரசியல் கட்சிகள் மக்களின் நலனுக்காகவே தவிர, மக்களின் சுயமரியாதையையும், அடிப்படை உரிமையையும் பிடுங்குவதாக இருக்கக்கூடாது என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். இந்தத் தலைமுறை தொடங்கி, இந்தி கற்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் தமிழர்கள் தமிழகம் தாண்டி பிழைப்பார்கள்! நமது வாழ்வாதாரமும் சிறக்கும் என்பதில் ஐயம் இல்லை என்பது என்னுடைய தொலை நோக்கு சிந்தனை. சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா!

- கலீல், வீரசோழன்.

http://www.inneram.com/2011032915012/tamils-should-learn-hindi

Saturday, January 8, 2011

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!! – சிறப்புக் கட்டுரை

உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக் கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில். மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும்தமிழகத்தின் பொற்கால ஆட்சிஎன்று புகழப்படுகிறது.

தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.

பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை அளந்து முறைப்படுத்திஉலகளந்தான்எனும் பெயர் பெற்றதாகவும் கூறிதமிழனின் பொற்கால ஆட்சிஎன கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.

அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்என்றும்சோழ சாம்ராச்சியம்என்றும் காதில் கேட்டமாத்திரத்தில்நம் தமிழனின் பெருமைஎன்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.

வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?

அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!

ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.

சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.

கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.

சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட 87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.

இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர் முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில்காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிஎன்று சொல்லப்படுகிறது.

அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரிமலையாளிகள் தலை அறுத்துஎன்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில் நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.

ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.

நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!

ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.

சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது. கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.

சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.

பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென 4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.

அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்குசாவா மூவாப் பேராடுகள்எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன. ‘வெட்டிக் குடிகள்என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும்வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று, வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.

பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!

இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?

பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்றுபாடி காவல் வரிசெலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர்தறி இறையும், எண்ணெய் பிழிபவர்செக்கு இறையும், தட்டார், தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறையும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில், ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.

விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக்கடமைஎனப் பெயரிட்டதன் மூலம் அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது. இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது. மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.

சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர். திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர் தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.

பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள கிராமங்களைஊர்கள்என்றழைத்தனர். ‘ஊர்களின்நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.

தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.

அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கானமேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கானகீழ்வாரமும்எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது. ‘மேல்வாரமாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.

இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.

ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர். கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள், மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகிஎனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர்கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை!

ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டுதேவரடியார்களாகமாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில்தளிச்சேரியை உருவாக்கினான். கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்டதேவரடியார்குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

தமிழ்மறை மீட்டான்என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத் தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீதுசூடுபோட்டவீரத்தைதீட்சிதரிடம் காட்டவில்லை. “சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடுவோம்என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிரட்டியபோதுசெம்மொழிகொண்டானின்அரசுஅனைத்துத் தரப்பினரின் நலன்களும் காக்கப்படும்எனக் கெஞ்சியதே, ராஜராஜன் காட்டியதும் அதே வீரம்தான்.

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது. வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில் ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன. பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.

பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!

ராஜராஜனின்பொற்கால ஆட்சியை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான். பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது. ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.

பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன. அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. 250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகையமங்கலங்களின்உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.

வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.

பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது தமக்கை குந்தவையும் தமதுபிறவி இழிவு நீங்கிசொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.

மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாதுஎன்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.

சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.

வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில்காராட்சி’, ‘மீயாட்சிப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.

களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!

ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாககளப்பிரர்காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்தஇருண்டகாலத்தைபுரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.

களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது. களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.

இக்காலத்தில் நிலங்கள் மீண்டும்பொதுவாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்தஇருண்டகாலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்று பிரகடனம் செய்த திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.

இந்தஇருண்டகாலத்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயேபொது நீக்கிஎன்று இம்மன்னர்கள் புகழப்பட்டனர்.

இன்று மண்ணின் மைந்தர்களான இருளர்கள் வீடுகட்ட நிலம் கேட்டால் தடியடியால் பதில் சொல்லும்ஆரூர்ச் சோழனின்ஆட்சி, ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களைப்பொது நீக்கிஹூன்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கிக் கொண்டிருக்கிறதே, அதே போன்றபொது நீக்கி அரசைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் நிறுவினார்கள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாகவும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டதுமாமன்னன் ராஜராஜனின் ஆட்சியில்தான். பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு, மலைகளையும் காடுகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன இன்றையபுரிந்துணர்வுஒப்பந்தங்கள்.

ராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.

வடக்கே மகதப் பேரரசின் அசோகனின் ஆட்சிக் காலத்தில் பார்ப்பன வேள்விகள் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டன. தெற்கே களப்பிரர் ஆட்சிக்காலத்திலோ பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டிருந்த தேவதானங்கள் பறிக்கப்பட்டு, நிலங்கள் பொதுவாக்கப்பட்டன.

பவுத்தமன்னர் பிருகதத்தரின் ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சி செய்து, வட இந்தியாவில் பார்ப்பன மீட்சியை உருவாக்கியவன், பார்ப்பனத் தளபதி புஷியமித்திர சுங்கன். அதேபோல தமிழகத்தில் களப்பிரரை வீழ்த்தி, ‘பொது நீக்கி’, பவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.

தமிழின் மாபெரும் படைப்புகள், புதிதாகப் படைக்கப்பட்ட பாவினங்கள், விருத்தங்கள், அறநூலின் உச்சமான திருக்குறள் என களப்பிரர் கால இலக்கியங்கள் எண்ணற்றவை. சோழர் காலத்தில் உருவான இலக்கியங்கள் யாவை?

சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?

இன்று கருணாநிதிக்கு சூட்டப்படும் சமத்துவப் பெரியார், வாழும் வள்ளுவர் போன்ற எண்ணற்ற அடைமொழிகளைப் போலவே சோழர்களும் அடைமொழி சூடினார்கள். இன்று கருணாநிதியின் துதிபாடுவதற்காகவே நடத்தப்பட்டும் சொறியரங்குகளைப் போலவே, அன்றையமெய்க்கீர்த்திகளும், ‘உலா’, பரணிகளும்தான் சோழர்களைச் சொறிந் தன. வருணாசிரமத்தை கடுமையாக எதிர்த்த திருக்குறளின் பொருளைத் திரிப்பதற்கு சோழர்கள் காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினார்கள். வேதங்களையும், வேள்விகளையும் கண்டித்து, பிறப்பினால் அல்ல, ஒழுக்கத்தினாலேயே மனிதனுக்கு உயர்வு வரும் என்று கற்பித்த வள்ளுவரின் குறளையே திரித்துப் பரிமேலழகர் எனும் பார்ப்பனர்நால் வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் வழுவாது நிற்கஎன்று சோழர்காலத்தில்தான் உரை எழுதினார்.

சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில்மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாகப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின்சாதனை’.

சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள். சற்சூத்திரர்களின்ஊர்களும், பார்ப்பனர்களின்பிரம்மதேயங்களும்பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.

இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணைஇறையிலிஆக்கி ஏகாதிபத்தியங்களின்மங்கலங்களாகமாற்றிக் கொண்டிருக்கிறது, கருணாநிதி அரசு.

வைதீக மதத்தை எதிர்த்து நின்ற புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2550 ஆம் ஆண்டை பத்தோடு பதினொன்றாக அனுசரித்த திமுக அரசு, பார்ப்பனதாசனான ராஜராஜனை மட்டும் கோலாகலமாகக் கொண்டாடக் காரணம், கருணாநிதி தன்னை ராஜராஜனுடன் இனம் காண்கிறார் என்பதுதான்.

சநாதன தர்மம் என்று சொன்னாலே காறித் துப்பிய காலம் ஒன்று இருந்தது. அதுதான் சுயமரியாதை இயக்கக் காலம். அந்தக் காலத்தைகளப்பிரர் காலத்தோடுஒப்பிடலாம் என்றால், அதனை முனை மழுங்கவைக்க குல்லுகப்பட்டருடன் கூட்டு சேர்ந்த காஞ்சித்தலைவன் அண்ணா தான், பார்ப்பன மீட்சிக்கு அடிக்கொள்ளி வைத்த நரசிம்ம பல்லவன். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவிடமும் தினமலரிடமும் நல்ல பெயரெடுக்கத் துடிக்கும்திருவாரூர் சோழன்தான், பார்ப்பனர்களுக்கு பொற்கால ஆட்சி தந்த ராஜராஜன்.

விந்தியம் கடந்து வந்த பார்ப்பனர்களுக்கு உள்ளூரின் விளைநிலங்கள் எல்லாம்வரி நீக்கிஅவன் வழங்கியதைத்தானே, தேசம் கடந்து வரும் கம்பெனிகளுக்குவரி நீக்கிவழங்குகிறார் கருணாநிதி.

கோவிலின் ஆணைகளை எதிர்த்தவர்களுக்குசிவத்துரோகிப் பட்டம் என்றால் உலகவங்கி ஆணைகளை நிறைவேற்றும் அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இன்றோதேசத்துரோகவழக்கு.

பீகார் பார்ப்பனர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து வாழவைத்த ராஜராஜனின் வரலாறும், பார்ப்பனிய பாஜக வைத் தமிழகத்திற்கு இழுத்து வந்து காலூன்ற வைத்த கலைஞரின் வரலாறும் வேறுவேறா என்ன? அன்று ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட தீண்டாச் சேரியை @பால்தானே, இன்று எழில்மிகு சென்னைக்கு வெளியே துரத்தப்படும் உழைக்கும் மக்களுக்காக இக்காலச் சோழன் ஒதுக்கும் செம்மண்சேரி?

இன்று ராஜராஜனைமாமன்னன்என்றும் அவனது ஆட்சிதமிழனின் பொற்காலம்என்றும் புகழ்பவர்கள்அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்என்று நியாயப்படுத்துகின்றனர். வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர். பொதுவை நீக்கி பார்ப்பனதாசனாக வாழ்ந்த ராஜராஜனும் இருந்தான்.

கீதையா, பவுத்தமா? அசோகனா, சுங்கவம்சமா? களப்பிரரா, ராஜராஜனா? நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.

http://www.vinavu.com/2011/01/05/raja-raja-cholan/